India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை இன்றைய தினம் தமிழகமெங்கும் திமுக அரசைக் கண்டித்து அனைத்து நிர்வாகிகளும் கருப்புக்கொடி கட்டி போராட வேண்டும் என்று கூறினார். அதன்படி நீலகிரி மாவட்டத்தில் இன்று பாஜகவினர் கருப்பு நிற உடை அணிந்து தங்களது இல்லத்தில் கருப்பு கொடியை கட்டி தங்களது போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இதில் உதகையை சேர்ந்த பாஜக நிர்வாகி விஜயலட்சுமி வீட்டில் கருப்புக் கொடி போராட்டம் நடைபெற்றுவருகிறது.
சென்னை ரேஸ் கிளப் நிர்வாகம் பல ஆண்டுகளாக பல கோடி ரூபாய் குத்தகை தொகையை கட்டாத நிலையில், உயர் நீதிமன்றம் உத்தரவு படி, ஊட்டி குதிரை பந்தய மைதானத்தை வருவாய் துறை கையகப்படுத்தியது. இந்த நிலையில் தமிழக பட்ஜெட்டில் குதிரை பந்தய மைதானத்தை, ‘சுற்றுச்சூழல் பூங்காவாக’ மாற்ற ரூ.70 கோடி நிதி ஒதுக்கப்பட்டது, சுற்றுலா விரும்பிகள் மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
ஊட்டியில் அனைத்து வணிகர் சங்கங்களின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு வணிகர் பேரமைப்பின் தலைவர் முகமது பாரூக் தலைமை வகித்தார். அப்போது அவர் கூறுகையில், “இ-பாஸ் முறையின் கீழ் சுற்றுலா வாகனங்கள் வர கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. இதனால் சுற்றுலா தொழிலை நம்பி உள்ளவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கிறது. எனவே, இதை எதிர்த்து ஏப்ரல் 2இல் முழு கடை அடைப்பு நடைபெறும்” என்றார்.
உதகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறவுள்ள இடம் மற்றும் முதல்வர் திறந்து வைக்கவுள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றை தமிழ்வளர்ச்சி (ம) செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ, மாவட்ட திமுக செயலாளர் கே.எம்.ராஜூ ஆகியோர் உடன் இருந்தனர்.
தென்னிந்தியப் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று (மார்ச் 22) கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களே வெளியே செல்லும்போது குடையுடன் செல்லுங்க. ஷேர் பண்ணுங்க.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் சுட்டெரித்து வந்தது. இதனிடையே உதகை, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழையும் பெய்தது. இந்நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, நீலகிரி மாவட்டத்தின் சில இடங்களில் நாளை 22-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது. SHARE IT
நீலகிரி மாவட்டத்தில் வன விலங்குகள் உயிரிழப்பு பல்வேறு காரணங்களால் அவ்வப்போது நடந்து வருகிறது. இந்த நிலையில் உதகையை அடுத்துள்ள சிங்காரா பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் யானையின் சடலம் இருப்பதாக வந்த தகவலின் பேரில் வனத்துறையினர் நேற்று விரைந்து வந்து யானையின் உடலை மீட்டனர். மருத்துவப் பரிசோதனையில் அது ஆண் யானை என்றும் உடல் நலக் குறைவால் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது.
மண்ணைப் பயன்படுத்தாமல் நீரியல் முறையில் வீட்டுக்குள் சட்டவிரோதமாக சாகுபடி செய்யும் ஹைட்ரோபோனிக்ஸ் வகை கஞ்சா நீலகிரி மாவட்டம், உதகை மத்திய பஸ் நிலையத்தில் முதல் முறையாக பிடிபட்டது. இது நீலகிரி காவல் துறையையே அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இந்த வகை கஞ்சா 1 கிலோ ரூ.1 கோடி மதிப்புடையது என்பதால் காவல்துறை கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளதாக எஸ்பி தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்எஸ் நிஷா தலைமையில், வாராந்திர குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் தங்களது குறைகளை கூற வந்த பழங்குடியின மக்களிடம், அவர்களின் குறைகளை கேட்டு அறிந்து, அதற்கான தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார். உடன் காவல் துறை அதிகாரிகள் இருந்தனர்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. நீலகிரி மாவட்டம் உதகையில் 67 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காலிப் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் நாளை முதல் ஏப்.,21ஆம் தேதி வரை <
Sorry, no posts matched your criteria.