India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மாவட்ட ஆட்சித்தலைவரின் தலைமையில் அரசு திட்டங்களின் செயலாக்கத்தை கண்காணிக்க மாவட்ட கண்காணிப்பு அலகு உருவாக்கப்படுகிறது. இளம் வல்லுநர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஊதியம் ரூ.50,000/- மாதம். விண்ணப்பத்தினை (Resume) ddsooty@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இன்று 23ஆம் தேதிக்குள் அனுப்பப்படவேண்டும். மேலும், விவரங்களுக்கு 9445458078, 9487908820 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். SHARE IT!
நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கராத்தே, சிலம்பம் விளையாட்டுப் பயிற்சி பெற்ற பெண் பயிற்சியாளர்களிடமிருந்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், 19, 2-வது தளம், உதகை-6 என்ற முகவரிக்கு 26.3.2025 குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தற்காப்பு கலைப் பயிற்சியாளருக்கு ரூ.9,000/-விளையாட்டுப் பயிற்சியாளருக்கு ரூ .15,000/- வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார்.
கோத்தகிரியில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் முதல்வர் ராஜா கென்னடி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், முதல் மற்றும் 2ம் ஆண்டு தொடக்க கல்வி பட்டியல் தெரிவிக்கும் விண்ணப்பிக்க உள்ளோர், ஏற்கனவே தேர்வு வினை எழுதி பயிற்சி பெறாத மாணவர்களும் நாளைக்குள் தேர்வு கட்டணத்தை ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.50 சான்றிதழ் பெறுவதற்கு 100 சேவை கட்டணம் ரூ.15 சேவை கட்டணம் பெற ரூ.70 செலுத்த வேண்டும்.
சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க குன்னூர் ஊட்டி இடையே இம்மாதம் 28ஆம் தேதி முதல் ஜூலை 7 வரை வாரம்தோறும் நான்கு நாட்கள் சிறப்பு மலை ரயில் இயக்கப்படுகிறது. மேலும் மேட்டுப்பாளையம் ஊட்டி இடையே தலா ஒரு முறையும் இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு இன்று முதல் துவங்குவதாக ரயில்வே சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீலகிரியில் தேயிலைக்கு அடுத்து மலைத்தோட்ட பயிர்களான கேரட், உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகள் பல நூறு ஏக்கர் பரப்பளவில் விளைவிக்கப்படுகின்றன. தற்போது கேரட் அறுவடை நடந்துவரும் வேளையில் கேத்தி- பாலாடாவில் அறுவடை செய்யப்பட்ட கேரட் அப்பகுதியிலுள்ள இயந்திரம் மூலம் சுத்தம் செய்யப்பட்டபோது, அரை கிலோ எடை உள்ள ஆறு விரல்களுடன் கூடிய அதிசய கேரட் இருப்பதை தொழிலாளர்கள் பொதுமக்கள் ஆச்சரியமாக பார்த்து வியந்தனர்.
பந்தலூர் அருகே எருமாடு திருமங்கலம் நேற்று காலை கல்யாணி என்ற பழங்குடி பெண் (48) மர்மமாக இறந்து கிடந்தார். போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. டி.எஸ்.பி. ஜெயபாலன், சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டனர். தடய அறிவியல் பிரிவு இணை இயக்குநர் ரமேஷ், கைரேகை நிபுணர் எம்.ரமேஷ் தலைமையிலான குழுவினர், மோப்ப நாய் மோட்சா உதவியுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் தீர்ப்பை ஏற்று, அதன்படி, நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து நகர, ஒன்றிய, பேரூர் பகுதிகளில் பொது இடங்களில் அமைந்துள்ள கட்சிக் கொடிக்கம்பங்களை உடனே அகற்றி அதன் விவரங்களை மாவட்ட அலுவலகத்தில் வரும் மார்ச் 30ஆம் தேதிக்குள் தெரிவிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் அதிகமான விவசாயிகள் உருளைக்கிழங்கு பயிரிடுகின்றனர். அதில், இந்த ஆண்டு உருளைக்கிழங்கு விலை விவாசாயிகளை மகிழ்ச்சி அடைய செய்துளாளது. அதன்படி இன்றைய விலை நிலவரமாக உருளைகிழங்கின் அதிகபட்ச விலையாக ரூ.1380 – ரூ.840 ஆகவும், பொடி கிழங்கிற்கு ரூ.580 – ரூ.590 விலை போவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். இது நீலகிரி மாவட்ட கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மூலமாக விற்கப்படுகிது
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால் மார்ச்.26 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT!
நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் விவசாயிகளின் உருளை கிழங்கை தினசரி பொது ஏலத்தின் மூலம் விலை நிர்ணயம் செய்து வருகிறது. அதன் அடிப்டையில் இன்று ஊட்டி உருளை கிழங்கு முதல் ரகம் ஒரு மூட்டை அதிகபட்சமாக ரூ 1380 க்கும், குறைந்த பட்சமாக ஒரு மூட்டை ரூ.840 க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதில் மொத்தம் 275 மூட்டைகள் விற்றன.
Sorry, no posts matched your criteria.