Thenilgiris

News June 11, 2024

நீலகிரியில் தன்னார்வ நுகர்வோர் அமைப்பு கூட்டம்

image

நீலகிரி பாராளுமன்ற தேர்தல் முடிந்த நிலையில் இயல்பான அலுவலக பணிகள் மாவட்டம் முழுவதும் செயல்பட துவங்கி உள்ளன. இந்த வகையில் இன்று (ஜூன்11) நீலகிரி மாவட்ட ஆட்சியரின் கூடுதல் அலுவலக வளாகத்தில் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளின் காலாண்டு ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் அருணா தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட வருவாய்துறை அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி பங்கேற்றார்.

News June 11, 2024

நீலகிரியில் வாகனங்கள் கவிழ்ந்து விபத்து

image

ஊட்டியிலிருந்து பைக்காரா நோக்கி ஜீப் ஒன்று சென்றுகொண்டிருந்தது. பைன் பாரஸ்ட் அருகில் முன்னாள் சென்ற பைக்கை முந்தியபோது ஜீப் எதிரில் வந்த கர்நாடக பதிவெண் கொண்ட கார் மோதி விபத்துக்குள்ளானது. அதில் ஜீப் சாலையில் கவிழ்ந்தது, கார் தலை கீழாக சாலையோரம் கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக கர்நாடக மாநிலத்திலிருந்து வந்த சுற்றுலா பயணிகள் உட்பட யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News June 11, 2024

நீலகிரியில் பச்சை வண்ண பட்டாம் பூச்சிகள்

image

முதுமலை வரும் பயணிகள் வன விலங்குகள், பறவைகள் மட்டும் அல்லாமல் பட்டாம் பூச்சிகளையும் கண்டு ரசித்து செல்கின்றனர். தற்போதைய சீசனில் பச்சை வண்ண பட்டாம் பூச்சிகள் கூட்டம், கூட்டமாக வர தொடங்கி உள்ளன. இந்த பட்டாம் பூச்சிகள் ஈர மண்ணில் உள்ள உப்பு சத்தை உட்கொண்டு, மழை வருவதற்கு முன்பு வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்து விடுகின்றன.

News June 10, 2024

குன்னூரில் நகராட்சி துறையினர் நடவடிக்கை

image

குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டிடங்களும், வணிக வளாகங்களும் கட்டப்பட்டுள்ளன. இதனால் மழைக்காலங்களில் வெள்ள நீர் செல்ல முடியாமல் பல்வேறு பேரிடர்கள் ஏற்பட்டு வருகிறது. நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்பேரில் இன்று குன்னூர் பேருந்து நிலையத்திற்கு முன்பு உள்ள கடையை ஜேசிபி இயந்திரம் மூலம் நகராட்சி துறையினர் அகற்றினர்.

News June 10, 2024

நீலகிரி கலெக்டர் பங்கேற்பு

image

நீலகிரியில் பசுமைக்கு பஞ்சம் இல்லை என்பதால் கிராமங்களில் கால்நடை வளர்ப்பு அதிகப்படியாக இருந்து வருகிறது. ஆதிவாசி மக்களும் கால்நடை வளர்ப்பில் ஆர்வமாக உள்ளனர். இந்த நிலையில் ஊட்டி உல்லாடா சமுதாய கூடத்தில் கால்நடைகளுக்கான 5ஆவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் நிகழ்வில் மாவட்ட கலெக்டர் அருணா பங்கேற்று இன்று ( ஜூன் 10) தொடங்கி வைத்தார்.

News June 10, 2024

தற்காப்பு உடைகளுடன் பள்ளிக்குச் சென்ற குழந்தைகள்

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டதால் குழந்தைகள் ஆவலோடு பள்ளிக்கு சென்றனர். இந்த நிலையில் நீலகிரியில் இன்று காலையில் இதமான காற்றோடு சாரல் மழை பெய்து வருவதால் பள்ளி குழந்தைகள் தற்காப்பு உடைகளை அணிந்து பள்ளிக்கு ஆனந்தமாக துள்ளி குதித்து சென்றனர்.

News June 10, 2024

நீலகிரியில் 37 மையங்களில் தேர்வு

image

நீலகிரி மாவட்டத்தில் TNPSC தேர்வானது ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர், கூடலூர், பந்தலூர் ஆகிய தாலுகாக்களில் 37 மையங்களில் நடந்தது. இத்தேர்வுக்காக, 9,956 பேருக்கு ஹால்டிக்கெட் வழங்கப்பட்டது. தேர்வை கண்காணிக்க, 6 நடமாடும் கண்காணிப்பு குழு, 12 பறக்கும் படை ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 37 கண்காணிப்பு கேமரா மூலம் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. 7,031 பேர் தேர்வு எழுதினர் 2,925 பேர் ஆப்சென்ட் ஆகினர்.

News June 9, 2024

நீலகிரியில் குரூப் 4 தேர்வு எழுதிய 9956 பேர்

image

நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணி தேர்வாணையத்தின் சார்பில் நடைபெறும் குரூப் IV தேர்வுக்கு 6 தாலுகாக்களில் 37 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் 9956 பேர் தேர்வு எழுதினார்கள். நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர் மு.அருணா, உதகை வுட் சைடு பள்ளி மற்றும் சி.எம்.எம் மேல்நிலை பள்ளியில் நடைபெறும் தேர்வை  இன்று பார்வையிட்டார்.

News June 9, 2024

மழையால் சாலையில் உருண்டு விழுந்த பாறைகள்

image

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தென்மேற்கு பருவ மழை காரணமாக கோத்தகிரி-ஊட்டி இடையே பாக்கியா நகர் அருகே மலை சரிவில் நேற்று பாறைகள் உருண்டு சாலையில் விழுந்தது. அந்த பாறையை சாலை ஓரத்திற்கு ஒதுக்கி வைக்கும் வரை சிறிது நேரம் போக்குவரத்து தடைப்பட்டது. இதையடுத்து வாகன ஓட்டிகள் கவனமாக செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News June 9, 2024

நீலகிரி: விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்

image

உதகையில் மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில் ஜூன் 21 தேதி காலை 11 மணி அளவில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே விவசாயிகள் தங்களுடைய கோரிக்கைகள் சம்மந்தமான மனுக்களை  ஜூன்  11 தேதிக்குள் தோட்டக்கலை இணை இயக்குனர், தபால் பெட்டி எண்: 72 , உதகை 643001  என்ற அலுவலக முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்குமாறு மாவட்ட ஆட்சியர் மு .அருணா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!