Thenilgiris

News June 13, 2024

நீலகிரியில் பதவி உயர்வு பெற்ற 26 பேருக்கு ஆணை எப்போது?

image

கடந்த 1999ஆம் ஆண்டு காவல்துறையில் பணிக்கு சேர்ந்து பணியாற்றிவந்து தற்போது ஏட்டுகளாக உள்ளவர்களுக்கு கடந்த மாதம் 25ஆம் தேதி 25 வருடம் நிறைவு பெற்றது. இதை அடுத்து அவர்களுக்கு ஜூன் 1ம் தேதி முதல் சப் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் உத்தரவு ஆணை வழங்கப்பட்டது. நீலகிரியில் பதவி உயர்வு பெற்ற 26 பேருக்கு இதுவரை ஆணை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

News June 13, 2024

குன்னூர் சாலையை கடக்கும் ஒற்றை யானை

image

குன்னூர் சாலை காட்டேரி டபுள் போஸ்ட் பகுதியில் உள்ள லாஸ் அருவி அருகே, ஒற்றை கொம்பு யானை ஒன்று கடந்த 2 நாட்களாக முகாமிட்டு வருகிறது. அது அவ்வப்போது குன்னூர் சாலையை கடந்து செல்கிறது. அப்போது அந்த வழியில் செல்லும் வாகன ஓட்டிகள் யானை சாலையை கடக்கும் வரை காத்திருந்து செல்ல வேண்டும் என வனத்துறை அறிவுறுத்தி உள்ளது.

News June 13, 2024

நீலகிரி கலெக்டர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

image

நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு தனியார் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் செயல்பட்டுவரும் நிலையில், சில இடங்களில் குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தி வருவதாக தெரியவருகிறது. இந்நிலையில் நேற்று குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நீலகிரி கலெக்டர் தலைமையில் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றனர்.

News June 12, 2024

ரூ.1.06 கோடி மதிப்பில் நலதிட்ட உதவிகள் வழங்கல்

image

நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அவர்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கான நிவாரண உதவிகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. இந்த வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்ற மனுநீதி நாள் முகாமில் 107 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.1.06 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலதிட்ட உதவிகளை கலெக்டர் நேற்று வழங்கினார்.

News June 12, 2024

ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு

image

நீலகிரி: கோடை சீசன் முடிந்தவுடன் பயணிகள் வருகை குறைந்துவிடும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது வெளி மாநில சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இத்துடன் ஜூன் 15 வரை மலை ரயில் முன்பதிவு செய்து காத்திருப்போர் 6000 பேர் என ரயில்வே தெரிவித்து உள்ளது. ஊட்டி, குன்னூர் ரயில் நிலையங்களில் இன்று பயணிகள் கூட்டம் கூடுதலாக இருந்தது.

News June 12, 2024

நீலகிரியில் இது கட்டாயம்: கலெக்டர் அறிவிப்பு

image

நீலகிரியில் மலை காய்கறிகளான பீட்ரூட், கேரட், டெர்னாபஸ், முள்ளங்கி, பட்டாணி, பீன்ஸ், காலிஃபிளவர், முட்டைகோஸ், புருகோலி, மேரக்காய் போன்ற காய்கறிகளும் – ஆரஞ்சு, கொய்யா, சீத்தா, பீச்சஸ் உள்ளிட்ட பழ வகைகளும் பயிரிடப்படுகின்றன. இவற்றை விற்கும் கடைகளில் விலைப் பட்டியலை கட்டாயம் வைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

News June 12, 2024

கட்டண விவர அறிவிப்பு பலகை வைக்க நடவடிக்கை

image

நீலகிரி மாவட்ட தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளின் காலாண்டு ஆய்வு கூட்டம் நேற்று மாலை நடந்தது. மாவட்ட கலெக்டர் அருணா தலைமை வகித்தார். இதில் மாவட்ட அளவில் மாவட்டத்திலுள்ள தனியார் மெட்ரிக் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பள்ளி அறிவிப்பு பலகை மூலம் தெரியப்படுத்த முதன்மை கல்வி அலுவலர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

News June 12, 2024

மீண்டும் தரமில்லாத ராகி: மக்கள் அதிருப்தி

image

நீலகிரி ரேஷன் கடைகளில் இலவச அரிசிக்கு பதில் இலவசமாக ஒரு குடும்பத்துக்கு 2 கிலோ கேழ்வரகு வழங்கும் திட்டத்தை கடந்தாண்டு மே 3ம் தேதி அரசு துவக்கியது. நீலகிரியில் 4.40 லட்சம் கிலோ தேவை என அறிவித்து பெங்களூருவிலிருந்து கொள்முதல் செய்து வழங்கப்பட்டுவருகிறது. தரமற்ற கேழ்வரகு வழங்குவதால் மக்கள் வாங்க தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும் தரமற்ற கேழ்வரகு ராகி வழங்கப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

News June 12, 2024

நீலகிரி: ‘முதல்வர் அறிவித்த மானியம் என்னாச்சு?’

image

சிறு தேயிலை விவசாயிகள் சங்க தலைவர் ராமன் நேற்று நீலகிரியில் செய்தியாளரிடம் பேசுகையில், “முதல்வர் ஸ்டாலின் பொள்ளாச்சியில் நடந்த அரசு விழாவில் நீலகிரி சிறு தேயிலை விவசாயிகளுக்கு கிலோவுக்கு 2 ரூபாய் மானியம் அறிவித்த கையோடு மேடையில் விவசாய பிரதிநிதிகளை அழைத்து அதற்கான காசோலையும் வழங்கினார். ஐந்து மாதங்கள் கடந்த நிலையில் இன்னும் விவசாயிகளுக்கு மானியம் கிடைக்கவில்லை” என்றார்.

News June 12, 2024

நீலகிரி: லோக் அதாலத்தில் 694 வழக்குகளுக்கு தீர்வு

image

நீலகிரி மாவட்ட நீதிமன்றம் மற்றும் குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் தாலுகா நீதிமன்றங்களில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதில் காசோலை, வங்கி, குடும்ப பிரச்சனை, தொழிலாளர் நலன், வங்கி வாராக்கடன் என 1,200-க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில் 8 கோடி ரூபாய் மதிப்பிலான 694 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன.

error: Content is protected !!