India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீலகிரி மாவட்டத்தில் வரும் 20-ம் தேதி காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்க உள்ளது. பிங்கர் போஸ்ட் பகுதியில், மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக அரங்க கூட்டத்தில் நடைபெற உள்ளது. விவசாயிகள் கோரிக்கைகள் ஏதேனும் இருப்பின், 6-ம் தேதிக்குள் தோட்டக்கலை இணை இயக்குனர், தபால் பெட்டி எண் 72, ஊட்டி 643001, என்ற முகவரியில், நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்பலாம், மின்னஞ்லுக்கு jdooty@gmail.com.

நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு விடுத்துள்ள செய்தி குறிப்பில், மாவட்டத்தில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரம், வரும் 18ம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை, அனைத்து அரசு வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள், அலுவலகங்கள் முதலியவற்றில் கொண்டாடப்படும். மேலும், ஆட்சி மொழி சட்டம், அதன் வரலாறு குறித்து, பிழையின்றி எழுத பயிற்சி அளிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

நீலகிரியின் கூட்டுறவு தந்தை என்றழைக்கப்படும் ராவ்பகதூர் எச்.பி.ஆரிகவுடர் 131வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி உதகை ராவ்பகதூர் ஆரிகவுடர் வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வு எச்.பி.ஆரிகவுடர் நினைவு விழாக்குழு தலைவரும், படுக தேச பார்ட்டி நிறுவன தலைவருமான மஞ்சை.வி.மோகன் தலைமையில் நடைப்பெற்றது.

➤ அரசு பேருந்தை வழிமறித்த காட்டெருமை ➤ முதுமலையில் வனவிலங்கு கணக்கெடுப்பு பணி ➤ வெலிங்டன் அருகே மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ➤ நீலகிரியில் பெய்து வரும் மழையால் பூண்டு செடிகள் பாதிப்பு ➤ நீலகிரியில் நிலத்தடி நீர்மட்டம் சரிவு ➤ ஊட்டி மலை ரயில் இன்று முதல் இயக்கம் ➤ கோத்தகிரியில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் ➤ குன்னூரில் விபத்தில் சிக்கிய அரசு பேருந்து ➤ பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி

நீலகிரி மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். உதகை நகரம் மற்றும் ஊரக பகுதி, குன்னூர் நகரம் மற்றும் ஊரக பகுதி, கூடலூர் நகரம் மற்றும் ஊரக பகுதியில் இரவு ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் மற்றும் அவசர தேவைக்கான தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. அவசர தேவைகளுக்கு உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து இன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு பால்மாரலீஸ் நோக்கி சென்ற அரசு பேருந்து, கரும்பாலம் தொழிற்சாலை அருகே செல்லும்போது, பேருந்தின் மெய்ன் பிளேடு அருந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணித்தவர்கள் சிறு சிறு காயங்கள் உடன் உயிர் தப்பினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பருவமழையையொட்டி மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து இன்று மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலர் பொ.சங்கர் தலைமையில், மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு முன்னிலையில், அரசுத்துறைகளுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாசஸ்தலங்களில், பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடை விதிப்பது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மலைவாசஸ்தலங்களுக்கு பிளாஸ்டிக் பொருட்கள், அருகிலுள்ள ஊர்களில் இருந்து தான் எடுத்து வரப்படுகின்றன. எனவே, அவற்றை தடுப்பது குறித்த அறிக்கையை அரசு தாக்கல் செய்ய வேண்டுமென நீதிபதிகள் கூறினர்.

நீலகிரி மாவட்டத்தில் 4 நிவாரண முகாம்களில் 140 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். மேலும், நிவாரண முகாம்களில் தங்கி உள்ளவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், பாய், போர்வை ஆகிய நிவாரண பொருட்களும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் சிறப்பாக உள்ளதாகவும் கூறினார்.

தொடர் கன மழையால் மலை ரயில் பாதையில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடந்த திங்கள் முதல் நேற்று வரை மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்திருந்தது. தற்பொழுது நிலைமை சீராக உள்ளதால் ஊட்டி மலை ரயில் மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை இயங்க ஆரம்பித்துள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.