Thenilgiris

News July 2, 2024

தேவாலயங்களை பழுதுபார்க்க நிதி உதவி

image

நீலகிரி மாவட்டத்தில் சொந்த கட்டங்களில் இயங்கும் தேவாலயங்களை பழுதுபார்த்தல், புனரமைத்தல் பணிகள் மேற்கொள்ள மானியத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, தேவாலயங்களின் வயதிற்கேட்ப ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சம் வரை மானியத்தொகை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இந்த உதவித்தொகையை பெற மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News July 1, 2024

நீலகிரியில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு

image

நீலகிரி மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) இடியுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் ஜூலை 6ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 30, 2024

நீலகிரியில் மழைக்கு வாய்ப்பு!

image

தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி இன்று இரவு 7 மணி வரை நீலகிரி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.

News June 29, 2024

முதுமலை யானைகள் முகாமில் குட்டி யானை உயிரிழப்பு

image

கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது. அங்குள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் மருதமலை பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆண் குட்டி யானை பராமரிக்கப்பட்டு வளர்க்கப்பட்டது. இந்த நிலையில் குட்டியானைக்கு நேற்று (ஜூன் 28) உடல்நல குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி நேற்றிரவு சுமார் 8.45 மணி அளவில் குட்டி யானை உயிரிழந்தது.

News June 29, 2024

பழங்குடி மக்களின் பொருள்கள் கண்காட்சி

image

ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், மலைவாழ் மக்கள் கூட்டுறவு கொள்முதல் மற்றும் விற்பனை மேம்பாட்டு இணையம் சார்பில் விற்பனை கண்காட்சி நடந்துவருகிறது. இதில் தமிழ்நாடு உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பழங்குடியின மக்கள் பங்கேற்றுள்ளனர். இக்கண்காட்சி ஜூலை 3ஆம் தேதி இரவு 7 மணி வரை நடக்கிறது.

News June 28, 2024

செப்.30 வரை இ-பாஸ் கட்டாயம்

image

தமிழகத்தில் கோடை காலங்களில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களான ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். மே.7 ஆம் தேதி முதல் ஊட்டி, செல்பவர்கள் இ-பாஸ் பெற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. செப்.30 வரை இ-பாஸ் நடைமுறை தொடரும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News June 28, 2024

பிளாஸ்டிக் பாட்டிலை தவிர்க்க அறிவுறுத்தல்

image

நீலகிரியில் பிளாஸ்டிக் தடை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். வருவாய் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘மாநில எல்லையில் போலீசாரின் கண்காணிப்பையும் மீறி, தனியார் மற்றும் அரசு பஸ்களில் மறைத்து குடிநீர் பாட்டில்களை கொண்டு வருவது அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளித்து, பிளாஸ்டிக் பொருட்கள், பாட்டில்களை தவிர்க்க வேண்டும்’ என்றனர்.

News June 28, 2024

நீலகிரி: காட்டுக்குள் 9 கிமீ நடந்தே சென்ற கலெக்டர்

image

உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் குன்னூர் பகுதியில் உள்ள சடையன்கோம்பை, சின்னாளன் கோம்பை, யானை பள்ளம் என்ற ஆதிவாசி மலை கிராமங்களுக்கு நீலகிரி கலெக்டர் அருணா 9 கிமீ தூரம் நடந்தே சென்று மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது பழங்குடியினர் சாலை வசதி, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

News June 28, 2024

நீலகிரி: சட்டம் ஒழுங்கு, சாலை பாதுகாப்பு ஆய்வு கூட்டம்

image

உதகையில் மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில் நேற்று மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமையில் சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, வருவாய், காவல், நெடுஞ்சாலை துறை மற்றும் இதர அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

News June 28, 2024

நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

image

நீலகிரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழ்நாடு சீர் மரபினர் நலவாரியத்தில் பதிவுபெற்ற உறுப்பினர்களுக்கு, 2008ம் ஆண்டு முதல், விபத்து ஈட்டுறுதி உதவித்தொகை, இயற்கை மரணம், ஈமச்சடங்கு, கல்வி, திருமணம், மகப்பேறு, மூக்குக் கண்ணாடி செலவை ஈடு செய்வது மற்றும் முதியோருக்கான உதவித்தொகை பெற தகுதி உள்ளவர்கள் மாவட்ட சிறுபான்மை பிரிவு அலுவலரை சந்தித்து விண்ணப்பங்களை பதிவுசெய்து கொள்ள வேண்டும்.

error: Content is protected !!