Thenilgiris

News December 20, 2024

சிறை நிரப்பும் போராட்டம்: அனைத்து கட்சியினர் ஆதரவு

image

குந்தா, உதகை தாலுக்காவிற்கு உட்பட்ட 8 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில், அங்கத்தினர்களுக்கு அக்டோபர் மாதத்தில் அரசு நிர்ணயித்த பசுந்தேயிலைக்கான விலையை கொடுக்காததால், விவசாயிகள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். வரும் 21-ம் தேதிக்குள் கொடுக்கவில்லை எனில் விவசாயிகள் முன்னெடுக்கும் சிறை நிரப்பும் போராட்டத்திற்கு, அனைத்து அரசியல் கட்சியினர், விவசாய சங்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

News December 19, 2024

நீலகிரி: இன்றைய தலைப்புச் செய்திகள்!

image

➤ டீசலுக்கு மாற்றப்பட்ட மலை ரயில் இன்ஜின்கள் ➤ கூடலூரில் மண் கடத்தல்: 2 லாரிகள் பறிமுதல் ➤ கோத்தகிரியில் தேயிலை விவசாயிகள் கூட்டம் ➤ குன்னூரில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் ➤ பந்தலூரில் 4 வீடுகளை சேதப்படுத்திய காட்டு யானை ➤ நீலகிரி மாவட்டத்தில் கேரட் விலை வீழ்ச்சி ➤ உதகையில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் ➤ நீலகிரியில், இரவில் கருஞ் சிறுத்தை உலா

News December 19, 2024

நீலகிரி: இன்றைய இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் 

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று (19.12.2024) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது

News December 19, 2024

நீலகிரியில் மரத்தில் ஓய்வெடுத்த சிறுத்தை

image

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளை, வனத்துறையினர் தெப்பக்காடு வரவேற்பு மையத்திலிருந்து, தங்கள் வாகனம் மூலம் வனப்பகுதிக்கு அழைத்து சென்று வருகின்றனர். இந்நிலையில் வனத்தில் வாகன சவாரி சென்ற சுற்றுலா பயணிகள், சிறுத்தை மரக்கிளையில் அமர்ந்து ஓய்வெடுத்ததை, ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர். மேலும், இதனை வனத்துறையினர் மற்றும் சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்துள்ளனர்.

News December 19, 2024

காட்டு யானைகளால் சேதம்: இழப்பீடு தரப்படும்

image

நீலகிரி மாவட்டம் பந்தலூர் வட்டம் சேரம்பாடி பிதர்காடு வனச்சரகம் பகுதியில் காட்டு யானைகளின் தொல்லையால் ஏற்பட்ட வீட்டு உபயோகப் பொருட்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என வனச்சரகர் அய்யனார் கூறியுள்ளார். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட டேன் டீ தொழிலாளர்கள் அட்டகாசம் செய்து வரும் காட்டு யானையை மயக்க ஊசி கண்டுபிடித்தோ அல்லது கும்கி யானையைக் கொண்டு விரைவில் விரட்ட வேண்டும் என கூறியுள்ளனர்.

News December 19, 2024

பள்ளியை ஆய்வு செய்த நீலகிரி ஆட்சியர்

image

நீலகிரி மாவட்டம், குன்னூர் வட்டத்தில், “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளான இன்று குன்னூர் நகராட்சிக்குட்பட்ட வண்டிச்சோலை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு, நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

News December 19, 2024

நீலகிரி மாவட்டத்தில் கேரட் விலை வீழ்ச்சி

image

நீலகிரி மாவட்டத்தில், நீர் ஆதாரம் உள்ள விளை நிலங்களில்,மலை காய்கறி சாகுபடி செய்யப்படுகிறது. நடப்பாண்டு,கேரட் சாகுபடி கணிசமான பரப்பளவில் பயிரிட்டு பராமரித்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது கர்நாடக ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களிலும் கேரட் விளைச்சல் அதிகரித்ததை தொடர்ந்து மேட்டுப்பாளையம் ஏல மையத்தில் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், கேரட் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது, விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

News December 19, 2024

நீலகிரியில் வேலைவாய்ப்பு முகாம்: கலெக்டர் அறிவிப்பு

image

நீலகிரி கலெக்டர் விடுத்துள்ள செய்தியில், நடப்பு மாதத்திற்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (டிச.20) ஊட்டி கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் நடக்க உள்ளது. இதில் 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு தேர்ச்சி, பட்டதாரிகள், பட்டயம், ஐடிஐ, கணினி இயக்குபவர், ஓட்டுநர் ஆகியோர் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 0423 2444004, 72000 19666 எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 19, 2024

ஊட்டி அரசு மருத்துவமனையில் ரூ.1 கோடி மதிப்பில் பணி

image

ஊட்டி அரசு மருத்துவ கல்லூரியை ஒட்டி இருந்த தடுப்புச்சுவர் கனமழையின் போது இடிந்து விழுந்தது. இதனால், ஆம்புலன்ஸ் வாகனம், நோயாளிகளை அழைத்து வரும் தனியார் வாகனங்கள் வந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, சிறப்பு மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன.

News December 19, 2024

கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருடன் புகைப்படம் எடுக்க ஆர்வம்

image

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், விக்கெட் கீப்பருமான தினேஷ் கார்த்திக் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். அவர் நீலகிரி மாவட்டம் குன்னூரில் வெலிங்டன் ராணுவ பகுதிக்கு நேற்று வந்தார். அவர் அந்த பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது, டீக்கடையில் டீ குடித்துவிட்டு பொதுமக்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

error: Content is protected !!