Thenilgiris

News July 11, 2024

மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த அமைச்சர்

image

கோத்தகிரி தாலுக்கா, கீழ் கோத்தகிரி ஐயப்பன் மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் தலைமையேற்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் மு. அருணா, மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, கூடுதல் ஆட்சியர் கௌஷிக் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

News July 11, 2024

நீலகிரியில் மழைக்கு வாய்ப்பு

image

நீலகிரி உட்பட ஒன்பது மாவட்டங்களுக்கு இன்று இரவு 7 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி, போக்குவரத்து பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மழையினால் நீலகிரியில் குளிர்ச்சியான சூழல் உருவாக வாய்ப்புள்ளது.

News July 11, 2024

தமிழக கேரள எல்லையில் நக்சல்கள் முகாம்

image

தமிழக கேரள எல்லைப் பகுதியான பந்தலூர் மானந்தவாடி பகுதியில் நக்சல் தடுப்பு போலீஸ் எஸ்பி பிஜூராஜ் தலைமையில் போலீசார் நேற்று (ஜூலை 10) தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் நக்சல்கள் தங்கி இருந்த குடில், சீருடைகள், பேட்டரிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதுகுறித்து போலீசார் கூறுகையில், “நக்சல் கூடாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் தமிழக கர்நாடக எல்லையை ஒட்டிய வனப்பகுதிக்கு இடம் மாற வாய்ப்பு உள்ளது” என்றனர்.

News July 11, 2024

14 கிமீ சாலை, 60 வீடுகளுக்கு மின்சாரம்: கலெக்டர்

image

உதகை, பழங்குடியின மக்கள் வசிக்கும் ஆனைகட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நேற்று நடைபெற்றது. அங்கு மாவட்ட ஆட்சியர் மு.அருணா பேசுகையில், சிரியூர் முதல் வாழை தோட்டம் வரை 14 கிமீ சாலை ரூ.14 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். ஆனைகட்டியில் துணை ஆரம்ப  சுகாதார நிலையம் ஏற்படுத்த அரசு அனுமதிக்கு திட்டம் அனுப்பபட்டுள்ளது. 60 வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

News July 10, 2024

7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு நீர் நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது

News July 10, 2024

சம்பளம் இல்லாமல் பணியாற்றும் பணியாளர்கள்

image

நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் நடைமுறை கடந்த 2 மாத காலமாக பின்பற்றப்பட்டுவருகிறது. இந்நிலையில் செப்டம்பர் 30 வரை இ பாஸ் நடைமுறை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதில் பணியாற்ற சுய உதவி குழு பெண்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு இரண்டு மாதங்கள் முடிந்த நிலையிலும் இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

News July 9, 2024

நீலகிரியில் புதிய நிறுவனம் தொடங்கப்படும் – அமைச்சர்

image

நீலகிரி, உதகை, குன்னூர், கூடலூர் போன்ற பகுதிகளில் உள்ள மக்கள் பெருமளவில் தேயிலை விவசாயத் தொழிலை மட்டுமே நம்பி வருகின்றனர். மேலும் இப்பகுதியில் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு தேடி வெளிமாநிலங்களுக்கு சென்ற வண்ணம் உள்ளனர். இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் மிக விரைவில் மலைவாழ் மக்களுக்காக தொழில் சார்ந்த புதிய நிறுவனம் அமைப்பதற்கான அறிவிப்பு  வெளியாகும் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

News July 9, 2024

உதகை: Ex ராணுவ வீரர்கள் குடும்பங்களுக்கு மானிய நிதி

image

உதகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள்  படை வீரர் நல நிதியில் இருந்து முருகனுக்கு ரூ.4,000, செல்வம் என்பவருடைய மகள் திருமணத்திற்கு ரூ.25 ஆயிரம் ஆகிய மானியம் பெறுவதற்கான ஆணையை ஆட்சியர் மு.அருணா வழங்கினார். முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குநர் இந்திரகுமார் உடன் இருந்தார்.

News July 8, 2024

ஊட்டி நெரிசலை தடுக்க புது ஏற்பாடு: அமைச்சர்

image

சுற்றுலா அமைச்சர் ராமசந்திரன் நேற்று ஊட்டியில் கூறுகையில், ‘நீலகிரி வரும் பயணிகள் ஊட்டி படகு இல்லம், பூங்காவை மட்டும் பார்த்து செல்கின்றனர். இதனால் ஊட்டியில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. எனவே மாவட்டம் முழுவதும் சுற்றுலாவை பரவலாக்கும் வகையில் கோத்தகிரி, குன்னூர், மைனலா பகுதிகளில் புதிய சுற்றுலா தலங்களை கண்டறிந்து மேம்படுத்த ஏற்பாடு செய்யப்படும்’ என்றார்.

News July 8, 2024

நீலகிரி: காவல்துறையிடம் 122 மனுக்கள்

image

நீலகிரி மாவட்டம், வன பகுதிகளில் உள்ள ஆதிவாசி மக்களின் குறை தீர்க்கும் கூட்டம் நேற்று கரிக்கையூரில் நடைபெற்றது. காவல் துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 365 பேர் பங்கேற்றனர். அவர்களிடம் இருந்து 122 மனுக்கள் பெறப்பட்டன. இதில் செம்மனாரை, மேல்கூப்பு, கீழ்கூப்பு உள்ளிட்ட பகுதி மக்கள் பங்கேற்றனர்.

error: Content is protected !!