India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
“மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.இதன் காரணமாக இன்று (27-03-2025) நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.(Share செய்யவும்)
கூடலூர் வன கோட்டம் பந்தலூர் வனச்சரகத்திற்குட்பட்ட பந்தலூர் பகுதிக்கு உட்பட்ட பாரி அக்ரோ தேயிலை தோட்டம் செம்மண் வயல் பகுதியில் சிறுத்தை குட்டி ஒன்று இறந்து கிடப்பதாக தகவல் வனத்துறைக்கு கிடைத்ததை அடுத்து வனப்பணியாளர்கள் தணிக்கை செய்து மாவட்ட வன அலுவலருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன மக்கள் ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் ஹெத்தையம்மன் பண்டிகையை கொண்டாடுகின்றனர். ஜெகதளாவில் கொண்டாடும் இந்த பண்டிகை சிறப்பு வாய்ந்தது. 48 நாட்கள் விரதம் மேற்கொண்ட ஹெத்தைக்காரர்கள், தாய் வீடான கொதுமுடி கோவிலுக்கு பாரம்பரிய உடை மற்றும் செங்கோலுடன் நடைபயணம் மேற்கொண்டு , அருள்வாக்கு கூறுவர். ஷேர் செய்யவும்.
வெலிங்டன் ஆற்றில் ஒன்பது டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் கரும்பாலம் பகுதியில் இருந்து பிருந்தாவன் வரை ஆறுகள் தூர் வாரும் பணி நடைபெற்றது. இதில் ஒன்பது டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக வெலிங்டன் பாளைய வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார். தற்போது பெய்த கனமழையில் மழைநீர் ஆறுகளின் சீராக செல்வதாக அவர் தெரிவித்தார்.
ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஏப். 6 இல் தமிழ்நாடு முதல்வரால் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில், மருத்துவ கல்லூரி டீன் கீதாஞ்சலி கூறுகையில், “மருத்துவ மனையில் 415 பேர் பணியில் இருக்க வேண்டும், ஆனால் தற்போது 269 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். மீதம் உள்ள பணி இடங்கள் விரைவில் நிரப்பப்படும்” என்றார்.
நீலகிரியில், விற்பனையாகும் தர்பூசணி பழங்களில், செயற்கை நிறமூட்டி சேர்க்கப்படுவதாக புகார் வருவதால், தர்பூசணியை பார்த்து வாங்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டுள்ளதா என கண்டறிய, வெட்டிய தர்பூசணியில் டிஸ்யூ பேப்பரை வைத்து தேய்க்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டால், அது பேப்பரில் ஒட்டிக்கொள்ளுமாம். இது குறித்து 9444042322 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம். இதை SHARE செய்யுங்கள்.
நீலகிரி: இந்திய ராணுவத்தில் அக்னிவீர் ஆட்தேர்வுக்கான பதிவு தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 8,10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இங்கே க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். முதலில் ஆன்லைன் பொதுத்தேர்வு (சிஇஇ) பின்னர் ஆட்சேர்ப்பு முகாம் நடத்தப்படும்.உடனே SHARE பண்ணுங்க.
கோத்தகிரியை அடுத்து உள்ள ‘உயிலட்டி அருவி’யில் சமீபத்தில் பெய்த மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் கூக்கல்தொரை சீகெஒலா கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (31) என்பவர் தனது நண்பர்களுடன் அங்கு குளிக்கச் சென்றார். அப்போது, கால் வழுக்கி அருவியில் தவறி விழுந்து உயிரிழந்தார். தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் சென்று உடலை மீட்டு விசாரித்துவருகின்றனர்.
நீலகிரி: AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் வரும் 31ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும் என்றும் அண்மையில் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம்.
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக இன்று (மார்ச் 25) ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். மார்ச் 27ம் தேதி கோவை சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடநாடு எஸ்டேட் பங்குதாரராக இருந்ததன் அடிப்படையில் சுதாகரனுக்கு சம்மன் அனுப்பியதாக சி.பி.சி.ஐ.டி., தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.