Thenilgiris

News April 24, 2025

நீலகிரி சுற்றுலா தலங்களில் போலீஸ் கண்காணிப்பு

image

காஷ்மீர் பஹல்காமில் உள்ள சுற்றுலா தலத்தில், தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், நாடு முழுவதும் முக்கிய நகரங்கள் மற்றும் சுற்றுலா தலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், உதகை, கோத்தகிரி, கூடலூர், குன்னூர் உட்பட்ட சுற்றுலா தலங்களில், போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

News April 23, 2025

ஊட்டியில் இனி இபாஸ் சோதனை குறித்த கவலை வேண்டாம்!

image

கல்லாறு இ-பாஸ் சோதனை சாவடியில் சுற்றுலா வாகனங்களில் இ-பாஸ் குறித்து சோதனை செய்ய தானியங்கி, ‘பூம் பேரியர்’ பொருத்தப்பட்டு, கடந்த 2 நாட்களாக சோதனை நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த பூம் பேரியர் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. மேலும், இது இ-பாஸ் பெறும் வாகனங்களின் எண்களை வைத்து தானியங்கி முறையில் சோதனை செய்து வாகனங்களுக்கு வழிவிடும். இதனால் இபாஸ் சோதனையில் நேரம் வீணாகாது. SHARE மக்களே!

News April 23, 2025

இ-பாஸ் குறித்து சோதனை செய்ய தானியங்கி, ‘பூம் பேரியர்’ 

image

கல்லாறு இ-பாஸ் சோதனை சாவடியில் சுற்றுலா வாகனங்களில் இ-பாஸ் குறித்து சோதனை செய்ய தானியங்கி, ‘பூம் பேரியர்’ பொருத்தப்பட்டு, கடந்த 2 நாட்களாக சோதனை நடைபெற்று வருகிறது. இது குறித்து வருவாய் துறையினர் கூறுகையில் விரைவில் பூம் பேரியர் பயன்பாட்டிற்கு வரும். அவ்வாறு பயன்பாட்டிற்கு வரும் போது, இ-பாஸ் பெறும் வாகனங்களின் எண்களை வைத்து தானியங்கி முறையில் ‘பூம் பேரியர்’ சோதனை செய்து வாகனங்களுக்கு வழிவிடும்.

News April 23, 2025

நீலகிரி: அங்கன்வாடி மையங்களில் வேலை!

image

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 64 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பங்களை காலியாக உள்ள குழந்தைகள் மையத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க நாளை ஏப்.24 கடைசி நாள் ஆகும். ஊதியம் ரூ.7700-24,200 வரை வழங்கப்படும். இதை ஷேர் செய்யுங்கள்.

News April 23, 2025

நீலகிரி: அரசு போக்குவரத்து கழக புகார் எண் அறிவிப்பு

image

அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை *1800 599 1500* இந்த கட்டணமில்லா இலவச நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. இதை SHARE பண்ணுங்க.

News April 23, 2025

நீலகிரியை சேர்ந்த பெண் சாதனை

image

நேற்று IAS , IPS, IRS பணியிடங்களை உள்ளடக்கிய CIVIL SERVICES தேர்வு முடிவு வெளியான நிலையில், கூடலூரை சேர்ந்த வட்டாட்சியர் முத்து (ஓய்வு) அவர்களின் மகளும், தற்போது கூடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வரும் செல்வி செளந்தர்யா, CIVIL SERVICES தேர்வில் 897 RANK-ல் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்கள்.

News April 23, 2025

கோத்தகிரி: விபத்தில் ஒருவர் பலி!

image

கோத்தகிரி, கன்னேரிமுக்கு கிராமத்தில், மேற்கு வங்கத்தை சேர்ந்த உமேஷ் தமாங்(வயது 35) என்பவர் வசிக்கிறார். துரித உணவகத்தில் பணி புரிந்து வந்த இவர், நேற்று மாலை தனது நண்பருடன், வேறு வேலை தேடுவதற்காக, ஸ்கூட்டரில் கப்பட்டி கிராமத்திற்கு தாழ்வான சாலையில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த ஸ்கூட்டர், மின் கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

News April 22, 2025

நீலகிரி கலெக்டர் அறிவிப்பு!

image

நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கோடைக் கால பயிற்சி முகாம் மூலம் திறமையான விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு, சர்வதேச போட்டிகளுக்கு தயாா்படுத்தும் நோக்கில், நீலகிரியில் கோடைக்கால 21 நாள்கள் விளையாட்டு பயற்சி முகாம் ஏப்ரல் 25-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 22, 2025

நீலகிரி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் மலைப்பகுதியில் வாழும் திருநங்கைகளும், திருநங்கைகள் நல வாரியத்தில் வழங்கப்படும் அடையாள அட்டையுடன், சாதாரண கட்டண பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணிக்க ஏதுவாக விடியல் பயணத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே, நீலகிரி மாவட்டத்தில் உள்ள திருநங்கைகள் அடையாள அட்டை கொண்டு விடியல் பயணத்திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

News April 22, 2025

நீலகிரி: இன்று முதல் 5 இடங்களில் மட்டுமே!

image

நீலகிரி வரும் சுற்றுலா பயணிகளால் ஏற்படும் கூட்ட நெரிசல், சிக்னல் பிரச்சனை உள்ளிட்ட காரணங்களால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை அடுத்து, 14 இடங்களில் இ-பாஸ் சோதனை நடைபெற்றது. இந்நிலையில் அவை 5 இடங்களாக மாற்றப்பட்டுள்ளது. கல்லாறு, குஞ்சப்பனை, மசினகுடி, மேல் கூடலூர், கெத்தை ஆகிய சோதனை சாவடிகளில் மட்டும் இ-பாஸ் நடைமுறையில் இருக்கும் என நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

error: Content is protected !!