Thenilgiris

News July 21, 2024

கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி வழங்கிய எம்பி

image

கூடலூரில் கனமழையில் சேதம் அடைந்த பகுதிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். இதில் பாதிப்பு அடைந்தவர்களுக்கு நிவாரண பொருட்களுடன் ஆ. ராசா எம்பி தனது சொந்த செலவில் இருந்து ரூ. 5 ஆயிரம் நிதி உதவியை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கினார். இதில் மாவட்ட செயலாளர் முபாரக் மற்றும் திமுகவினர் உடன் இருந்தனர்.

News July 21, 2024

முதுமலை யானைகள் காப்பகம் 3 நாட்களுக்கு மூடல்

image

தென் மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளதால் நீலகிரி மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. நீலகிரி மற்றும் சுற்று வட்ட மாவட்டங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக முதுமலை யானைகள் காப்பகம் இன்று முதல் 3 நாட்களுக்கு  மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News July 21, 2024

நடைபாதையில் விரிசல்; எம்.பி ஆ.ராசா பார்வையிட்டார்

image

நீலகிரி  மாவட்டம், கூடலூர் நகரில் மேல்கூடலூர், கோக்கால் பகுதியில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ள இடங்களை  நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ . இராசா  இன்று (ஜூலை 21) நேரில் சென்று பார்வையிட்டார். இதில் சுற்றுலாத்துறை அமைச்சர் கே ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக், மாவட்ட திட்ட குழு உறுப்பினர் ரவிக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர் .

News July 21, 2024

உதகை – கூடலூர் சாலையில் பேருந்து மீது மரம் விழுந்து விபத்து

image

உதகை, அனுமாபுரம் பகுதியில் கூடலூரில் இருந்து வந்த தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்தின் மீது சற்று முன் மரம் விழுந்து பேருந்தின் முன்புறம் முற்றிலும் சேதமடைந்தது. நல்வாய்ப்பாக பேருந்தில் பயணம் செய்த யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. தகவல் அறிந்த மாவட்ட நிர்வாகம் உடனடியாக மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News July 21, 2024

நீலகிரில் 74.3 செ.மீ மழை

image

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கடந்த சில வாரங்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து, நீர் நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் ஜூன் 1ஆம் தேதி முதல் இன்று வரை அதிகபட்சமாக 74.3 செ.மீ மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

News July 21, 2024

கூடலூரில் அதிக மழை பொழிவு

image

தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் கூடலூரில் அதிகபட்சமாக 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் வீட்டிலே இருக்குபடி மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

News July 21, 2024

நீலகிரி ஆட்சியர் அறிக்கை

image

நீலகிரியில் தொடர் மழை பெய்து வரும் நிலையில், பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் அறிக்கை ஒன்றை அளித்துள்ளார். தங்கள் பகுதிகளில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் 24 மணிநேரமும் இயங்கும் மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என்று ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News July 21, 2024

சிறுவர்கள் மரணம், தமிழக முதல்வர் இழப்பீடு

image

நிலா கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளரி பகுதியில் உள்ள ஆற்றில் மீன் பிடிக்க சென்ற இரண்டு சிறுவர்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு மரணம் அடைந்த செய்தியை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சொல்லப்பட்டது. இதனை அடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறுவர்கள் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்தார். பிறகு அவர்கள் குடும்பத்திற்கு மூன்று லட்ச ரூபாய் இழப்பீடு வழங்குமாறு அறிவித்துள்ளார்.

News July 20, 2024

நீலகிரியில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று இரவு 1 மணி வரை தமிழகத்தில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று இரவு 1 மணி வரை நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 20, 2024

50 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

image

நீலகிரி மாவட்டத்தில் திருடு போன 50 செல்போன்களை சைபர் கிரைம் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டு இன்று உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் காவல்துறை கண்காணிப்பாளர் செய்தியாளர்களிடம் பேசிய போது, கடந்த இரண்டு ஆண்டுகளில் 175 செல்போன்கள் திருடப்பட்டு உள்ளது என்றும் மேலும், 2 கோடியே 59 லட்சம் சைபர் கிரைம் போலீஸாரால் மீட்கப்பட்டு உரியவர்களிடம் சேர்க்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

error: Content is protected !!