India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடந்த சில நாட்களாக நீலகிரியில் பெய்து வரும் மழையால், தேயிலை விளைச்சல் அதிகரித்து வருகிறது. அதேசமயம், தேயிலை பறிக்க தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், பேட்டரி மூலம் இயங்கும் எந்திரம் மூலம் தேயிலை பறிப்பு பணியை விவசாயிகள் செய்து வருகின்றனர். இதன் மூலம், 200 கிலோ வரை தேயிலை பறிக்க முடிகிறது என்றும், கையில் பறித்தல் 50 கிலோ மட்டும் பறிக்க முடியும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.
பந்தலூர் பிதர்காடு பொன்னானி ஆற்றில் 20ஆம் தேதி மீன்பிடிக்க சென்ற கலையரசன் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார். அதை தொடர்ந்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி இன்று சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் பிதிர்காடு சென்று கலையரசன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதி ரூ.3 இலட்சத்திற்கான காசோலை வழங்கினார். கூடலூர் RDO செந்தில் குமார் உடன் இருந்தார்.
உதகை, தமிழகம் மாளிகை அரங்கில் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் வெங்கடேஷ் தலைமையில் அரசு வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் செயல்பாடுகள் கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு, கூடுதல் ஆட்சியர் கௌஷிக்(வளர்ச்சி ) மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
தமிழகத்தில் இன்று(ஜூலை 23) 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் அவலாஞ்சி பகுதியில் ரூ.24.57 கோடி மதிப்பீட்டில் குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இதனை காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இதையடுத்து சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நீலகிரி எம்.பி.ஆ.ராசா ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்து, குடியிருப்புகளை பார்வையிட்டனர்.
நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ. ராசாவை நீலகிரி சிறு குறு தேயிலை விவசாயிகள் சங்க தலைவர் வழக்கறிஞர் ஜே பி சுப்பிரமணியம் நேற்று சந்தித்து மனு அளித்தார். அதில், “நீலகிரியில் உள்ள 65 ஆயிரம் சிறு தேயிலை விவசாயிகள் பயனடையும் வகையில் பசுந்தேயிலை குறைந்தபட்ச விலை ஒரு கிலோவுக்கு ரூ.35 ஆக நிர்ணயம் செய்ய வேண்டும். படுகர் சமுதாய மக்களை, பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2024 ஆம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை வருகிற 31 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கு 14-40 வயதுடைய 8 மற்றும் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இதில், பல்வேறு தொழற்பிரிவுகளுக்கு ஓராண்டு இராண்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். மேலும் மழையின் காரணமாக குடியிருப்புகள் சேதம் அடைந்து உள்ளதாகவும் கோரிக்கை மனுவை பலர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.
கூடலூர், பிதர்காடு பாலவயல் பகுதி ஆற்றில் கவியரசன் என்ற சிறுவன் மீன் பிடிக்கும் போது தவறி விழுந்து ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். இந்நிலையில், அவரது உடலை இன்று 3 வது நாளாக கூடலூர் தீயணைப்பு வீரர்கள், மாநில பேரிடர் மீட்பு குழுவினர் 30 வீரர்கள் இன்ஸ்பெக்டர் தீபக்குமார் தலைமையில் தேடி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, கோத்தகிரி, குன்னூர், குந்தா ஆகிய 4 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பாவ்ய தன்னீரு அறிவித்துள்ளார். கடந்த 2 நாட்களாக மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்துவருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.