India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோத்தகிரி அருகே கெச்சிகட்டி கிராமத்தைச் சேர்ந்த தீபக் என்பவரின் மகன் அக்குள் தீபக். இவர் ஓசூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், 15 வயதுக்குட்பட்ட மாநில அளவிலான கால்பந்து போட்டியில் விளையாடுவதற்காக கர்நாடகா அணிக்கு தேர்வு செய்யப்பட்டு நேற்று சத்தீஸ்கர் மாநிலத்திற்கு சென்றார்.
நீலகிரி மாவட்டத்தில் சமீபகாலமாக கஞ்சா பயன்பாடு அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மாவட்டத்தில், தினசரி ஒரு கஞ்சா வழக்க பதியும் அளவுக்கு கைது நடவடிக்கைகள் இருந்தாலும் பயன்பாடு குறையவில்லை என கூறப்படுகிறது. இதன்படி, மாவட்டத்தில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 120 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 140 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
நீலகிரியில் இன்று(ஜூலை 24) ஊட்டி, கூடலூர், குன்னூர் பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. கடந்த நாட்களில் பெய்த தென்மேற்கு பருவ மழையால் நீலகிரி மாவட்டத்தில் 98 வீடுகள் இடிந்து சேதம் அடைந்ததாக சுற்றுலா துறை அமைச்சர் தெரிவித்தார். மேலும், 140 இடங்களில் மரங்கள் விழுந்ததாகவும் அவர் கூறினார்.
கேரளாவை ஒட்டியுள்ள கூடலூர் பகுதியில் உள்ள நாடுகாணி, சோலாடி, பாட்டவயல், நம்பியார் குன்னு, தாளூர் உள்ளிட்ட ஐந்து சோதனை சாவடிகளில் தமிழ்நாடு சுகாதாரத்துறை மற்றும் மருத்துவ குழுவினர் தலா மூன்று பேர் வீதம் 15 பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் இருந்து நீலகிரிக்கு வரும் அனைவருக்கும் காய்ச்சல், இருமல், சளி உள்ளனவா என பரிசோதித்த பின்பே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
நிபா வைரஸ் பரவும் விதம் நோயின் அறிகுறிகள் மற்றும் தடுக்கும் வழிமுறைகள் தொடர்பாக செய்தி குறிப்பை மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு வெளியிட்டார். கேரளா மாநிலம் மலப்புரத்தில் நிஃபா வைரஸ் காரணமாக 13 வயது சிறுவன் பலியான நிலையில், நீலகிரி மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாக ஆட்சியர் தெரிவித்தார்.
தமிழகத்தில் இன்று(ஜூலை 24) 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரியில் தயாரிக்கப்படும் ‘ஹோம் மேட் சாக்லேட்டுகளை’ சுற்றுலாப் பயணிகள் பெரிதும் விரும்புகின்றனர். இங்கிருந்து மும்பை, பெங்களூரு, சென்னை, கோவை உட்பட பல்வேறு நகரங்களுக்கும் சாக்லேட்டுகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில் நட், ராக்ஸ், புரூட் அண்டு நட், ஒயிட் சாக்லேட்டுகள் மிகவும் பிரபலம். சர்க்கரை நோயாளிகளுக்காக சுகர் ஃபிரீ சாக்லேட்டுகளும் உள்ளன. இவை சுமார் ரூ.300 முதல் ரூ.3,500 வரை விற்பனையாகிறது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள குந்தா, பந்தலூர், கூடலூர், ஊட்டி ஆகிய வட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், மழை பாதிப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் ஊட்டியில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற மக்களவை திமுக கொறடா ஆ.ராசா, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள நீலகிரி நிர்வாகம் தயாராக உள்ளது” என உறுதியளித்தார்.
கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் மேலும் 4 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். இதுவரை 300க்கும் மேற்பட்டோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி உள்ள நிலையில், நேரில் ஆஜராகுமாறு உதயன் மற்றும் தீபு ஆகியோர் ஜூலை 25ஆம் தேதியும், ஜம்ஷீர் அலி மற்றும் ஜித்தின் ஜாய் ஆகியோர் ஜூலை 30ஆம் தேதியும் கோவை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.
கேரளாவில் நிபா வைரஸ் பரவி 14 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், நீலகிரி மாவட்ட எல்லை சோதனை சாவடியில் சுகாதாரத்துறை சார்பாக சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கேரளாவில் இருந்து நீலகிரிக்கு வரும் பயணிகளுக்கு காய்ச்சல், சளி மற்றும் இருமல் போன்றவை இருக்கிறதா என பரிசோதனை செய்து, எந்தவொரு உடல் உபாதைகளும் இல்லாத பட்சத்தில் தான் மாவட்டத்திற்குள் அனுமதி வழங்கப்படுகின்றது.
Sorry, no posts matched your criteria.