Thenilgiris

News March 29, 2025

வாகனங்களுக்கு கட்டுப்பாடு: மனுவை ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

image

நீலகிரி வாகன கட்டுப்பாடு வழக்கு நேற்று நீதிபதி சூரியகாந்த் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது,ஊட்டி, வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை.அனைத்து சுற்றுச்சூழல் விவகாரங்களையும் கருத்தில் கொண்டே இந்த கட்டுப்பாட்டை உயர்நீதிமன்றம் விதித்திருக்கிறது என்று கூறி,மேல்முறையீட்டு மனுவை ஏற்க மறுத்துவிட்டது. 

News March 29, 2025

உதகையில் 15 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

image

உதகை அருகே புலி தாக்கி இளைஞர் உயிரிழந்த பகுதியில் புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க கவர்னர்சோலையில் 15 கண்காணிப்பு கேமராக்களை வனத்துறையினர் அமைத்துள்ளனர். இது குறித்து வனச்சரகர் மஞ்சு ஹாசினி கூறும் போது, ”இளைஞரை கொன்ற விலங்கின் நடமாட்டத்தை கண்காணிக்க 15 கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இரு நாட்கள் கண்காணித்து பின்னர் கூண்டு வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

News March 28, 2025

நீலகிரி: வீட்டு மனை வாங்குபவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு

image

ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி உள்பட தமிழ்நாட்டின் மலைப்பகுதிகளில் உள்ள அங்கீகரிக்கப்படாத மனைகள், மனைப்பிரிவுகள் வரன்முறைக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் 30.11.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை www.tnlayouthillareareg.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு நகர் ஊரமைப்பு இயக்குனர் பா.கணேசன் அறிவித்துள்ளார்.

News March 28, 2025

நீலகிரியில் 10-ம் வகுப்பு பொது தேர்வு: 6833 பேர் தேர்வு எழுத தகுதி

image

இன்று நீலகிரியில் 58 மையங்களில் 3324 மாணவர்கள்,359 மாணவிகள் என மொத்தம் 6683 பேர்,தனித்தேர்வர்கள் 142 மாணவர்கள்,68 மாணவிகள் என 210 பேர் 10-ம் பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.தேர்வு பணியில் 58 முதன்மை கண்காணிப்பாளர்கள்,58 துறை அலுவலர்கள்,116 அலுவலக பணியாளர்கள்,662 அறை கண்காணிப்பாளர்கள்,வினாத்தாள் கொண்டு செல்ல வழித்தட அலுவலர்கள் 23 பேர் என 917 ஆசிரியர்கள் பறக்கும் படையினர் 108 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

News March 28, 2025

நீலகிரியில் ரேஷன் பொருட்களை பெறுவதில் சிக்கல்

image

கூடலுார், ஓவேலி ஆரூட்டுப்பாறை பகுதியில், மொபைல் போன் சிக்னல் கிடைப்பதில் பிரச்னை உள்ளது. இங்குள்ள ரேஷன்கடைகளில் பொருள்கள்வழங்க பயன்படுத்தப்படும், கருவியில் கைரேகை வைக்க முடியாத நிலை உள்ளது. இதனால் மொபைல் போன் சிக்னல் கிடைக்கும் பகுதிக்கு எடுத்துச் சென்று, பொதுமக்களிடம் கைரேகை பெற்று ரேஷன் பொருள்களை பதிவு செய்து பிறகு தருவதால் மிகுந்த சிரமம்.இதனை சரி செய்ய கோரிக்கை.

News March 28, 2025

நீலகிரி மாவட்டத்தில் நாளை கிராம சபை கூட்டம்

image

நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலுார் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், 35 ஊராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. 29ம் தேதி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளில் காலை, 11:00 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், கிராம ஊராட்சி பொதுமக்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News March 28, 2025

ரூ.60,000 வரை சம்பளம்: நீலகிரியில் வேலை APPLY NOW

image

நீலகிரி மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் ஓட்டுநர், மெடிகல் ஆபிசர் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 12ஆம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.13,000 முதல் 60,000 வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு இங்கே<> க்ளிக் <<>>செய்யவும். இதை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

News March 28, 2025

புலி தாக்கி உயிரிழப்பு: 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

image

நீலகிரி, கவர்னர் சோலை பகுதியில் உள்ள கொல்லகோடு மந்தையைச் சேர்ந்த கேந்தர் குட்டன் என்பவர் நேற்று புலி தாக்கி உயிரிழந்தார். இந்தநிலையில்  உயிரிழந்த கேந்தர் குட்டன் குடும்பத்திற்கு, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும் ரூ.10 லட்சம் நிதியுதவியையும்  அறிவித்துள்ளார். இதற்கான காசோலையை ந்தர் குட்டன் குடும்பத்திற்கு வனத்துறையினர் வழங்கினர்.

News March 27, 2025

தேயிலை தோட்டத்தில் சிறுத்தை குட்டி பலி

image

பந்தலூர் அருகே பேரி அக்ரோ தனியார் தேயிலை தோட்டத்தில் சிறுத்தை குட்டி கடந்த வாரம் உயிரிழந்தது. இந்நிலையில் இதே தேயிலை தோட்டத்தில் நேற்று மீண்டும் ஒரு சிறுத்தை குட்டி உயிரிழந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் வந்தது. இதன் அடிப்படையில் வனச்சரகர் சஞ்சீவி தலைமையில் கால்நடை டாக்டர் உடல் கூராய்வு செய்து விசாரிக்கிறார்.

News March 27, 2025

நீலகிரி: கேன் வாட்டரை பயன்படுத்துபவரா நீங்கள்? உஷார்!

image

கோடை காலம் முன்னரே நீலகிரியில் குடிநீர் கேன்கள் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தநிலையில் குடிநீர் கேன்களை அதிகமுறை பயன்படுத்தும் போது அதில் உள்ள மைக்ரோ பிளாஸ்டிக் தண்ணீரில் கலந்துவிடும் அபாயம் உள்ளது. எனவே ஒரு குடிநீர் கேனில் 30 முறை மட்டுமே மறுசுழற்சி செய்து குடிநீரை நிரப்பவேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளார். இதை ஷேர் செய்யுங்கள்.

error: Content is protected !!