India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி மாவட்டம், உதகையில் நடைபெற்ற பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்க இன்று வருகைபுரிந்த, இந்திய குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், துணைவேந்தர்கள் மாநாடு நிறைவுக்கு பின், உதகையில் உள்ள பழங்குடியின கிராமங்களுக்கு சென்று அவர்களை சந்தித்து, பழங்குடியினருடன் நடனமாடி மகிழ்ந்தார்.
உதகைக்கு இன்று துணை வேந்தர்கள் மாநாட்டிற்கு வருகைபுரிந்த இந்திய குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கருக்கு, ஹெலிகாப்டர் இறங்கும் தளத்தில், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா புத்தகம் வழங்கி வரவேற்றார். மேலும், நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு உள்ளிட்டோர் வரவேற்றனர்.
கூடலூர், ஓவேலி பகுதியில் வரையாடு கணக்கெடுப்பு பணிக்கு சென்ற வனக்காப்பாளர் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். கணக்கெடுப்பு பணி நேற்று முதல் நடைபெற்று வருகிறது. ஓவேலி வனச்சரகத்திற்கு சென்ற உட்பட்ட டெரஸ் பகுதியில் வனக்காப்பாளர் மணிகண்டன் உடல்நலம் சரியில்லாத காரணத்தால் முகாமிலேயே தங்கி உள்ளார். வன ஊழியர்கள் திரும்பி வந்து பார்த்த பொழுது இறந்த கிடப்பது தெரியவந்தது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நீலகிரியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் 30 பணியிடங்களை நிரப்படவுள்ளது என தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது . இதற்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.15,000 வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க இங்கே <
கோவை சேர்ந்த ஒரு தனியார் கல்லூரி, தமிழகத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் கட்டுரை உள்ளிட்ட போட்டிகளை நடத்தி அதில் வெற்றி பெற்ற 90 மாணவ, மாணவிகளை தேர்வு செய்தது. தொடர்ந்து, இந்த மாணவர்களை மகிழ்விக்கும் விதமாக, ஊட்டியில் பிரபலமான மலை ரயிலை சுமார் ரூ.4.98 லட்சம் ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்து சுற்றுலா அழைத்துச் சென்றது. இந்த சிறப்பு ரயில் பயணத்தை மிகவும் உற்சாகமாக அனுபவித்தனர்.
நீலகிரி: இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 9,970 உதவி லோகோ பைலட் பணிக்கான அறிவிப்பை வௌியிட்டுள்ளது. இதில் தெற்கு ரயில்வே சார்பில் 510 காலிபணியிடங்கள் உள்ளது. மாத ஊதியமாக ரூ.19,900 வழங்கப்படும் . இதற்கு ஏப்.12 முதல் மே 11 வரை rrbchennai.gov.in என்ற ரயில்வே வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் பகிருங்கள்.
உதகை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை ஏப்.25ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் இம்முகாமில், tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் முன்பதிவு செய்த பின்னர், கல்வி மற்றும் அடையாளாச் சான்றுகளுடன் நேரில் கலந்துகொண்டு பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு 0423-2444004, 7200019666 எண்களில் தொடர்பு கொள்ளலாம். SHARE IT!
ஜெகதளா, காரகோரையைச் சேர்ந்த ஜெயராமன் 2018ல் வாங்கிய லேப்டாப் அடிக்கடி பழுதானதால், அதை மாற்ற் தரும்படி சம்பந்தம்பட்ட கடைக்கு சென்று கேட்டுள்ளார். இதற்கு கடைகாரர்கள் மறுத்ததால், ஜெயராமன் கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில்லேப்டாப்பின் விலை ரூ.1.14 லட்சத்தை திருப்பிக் கொடுக்கவும், மன உளைச்சல் மற்றும் வழக்கு செலவுக்காக ரூ.15,000 வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. உத்தரவு
நீலகிரி மக்களே உங்கள் பகுதியில் ஏதேனும் தீ விபத்துக்கள் ஏற்பட்டால், உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தொடர்பு கொள்ளவும். ▶️ மாவட்ட தீயணைப்பு அலுவலர் 0423-2442999. ▶️ நிலைய தீயணைப்பு அலுவலர், உதகை 0423-2442999. ▶️ நிலைய தீயணைப்பு அலுவலர், குன்னூர் 0423-2230101. ▶️ நிலைய தீயணைப்பு அலுவலர், கோத்தகிரி 04266-274101 ▶️ நிலைய தீயணைப்பு அலுவலர், கூடலூர் 04262-261399. தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க
நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை மறுநாள் (25/4/25) ஊட்டியில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி காட்டும் மையம், கூடுதல் ஆட்சியர் அலுவலகம், பிங்கர் போஸ்ட் என்ற முகவரியில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 0423-2444004,7200019666 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.