India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த அரவேனு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் ஜமுனா மற்றும் நேரு யுவகேந்திரா அமைப்பை சேர்ந்த மணிகண்டன் ஆகிய 2 பேர், புதுடெல்லியில் நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில் விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இவர்கள் டெல்லி சென்றுவர அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.
நீலகிரி மாவட்டம் சுற்றுலா வருவாயை நம்பியிருக்கும் மாவட்டமாகும். வயநாடு சம்பவத்திற்கு பிறகு நீலகிரி மாவட்டத்திற்கு வரும் கேரளா சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. சுற்றுலா தலங்களில் கூட்டம் குறைவாக உள்ளதால் சுற்றுலாவை மட்டுமே நம்பி உள்ள விடுதி உரிமையாளர்கள், வியாபாரிகள், பூங்காக்களில் உள்ள புகைப்படக் கலைஞர்கள் வருவாய் இழந்ததுடன் மாற்றுத் தொழிலை நாடி செல்லும் சூழ்நிலை நிலவுகிறது.
➤ நீலகிரியில் இன்றும், நாளையும் ஆரஞ்சு அலார்ட் அறிவிப்பு.
➤நீலகிரி தோடர் பெண்களுக்கு ஜனாதிபதி அழைப்பு
➤நீலகிரி: உலக யானைகள் தின விழா கொண்டாட்டம்
➤நீலகிரி ரயில் ஆகஸ்ட் 15 வரை தற்காலிகமாக ரத்து
➤ கூடலூரில் தாய் யானையுடன் குட்டி யானையை சேர்த்த வனத்துறை அதிகாரிகள்
➤கூடலூர் பகுதியை சேர்ந்த ஜெரின் தீக்குச்சியால் குதும்பினரை கட்டி “இந்தியா புக் ஆப் ரிக்காட்ஸ் 2024” வந்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்பட்டு வரும் மலை ரயில் சேவை உலக பிரசித்தி பெற்றது. இந்நிலையில் மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை தண்டவாள பராமரிப்பு பணிகள் கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று மீண்டும் ரயில் சேவை துவங்கும் என்ற நிலையில் பணிகள் நிறைவு பெறாத காரணத்தால் ஆகஸ்ட் 15 வரை மலை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
கூடலூர் அருகே மசினகுடி – மாயார் சாலையில் தாயை பிரிந்த குட்டி யானை ஒன்று தனியாக பரிதவித்து வந்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர், அதனை தாயுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், ட்ரோன் உதவியுடன் தாய் யானை நடமாட்டத்தை கண்காணித்து, யானை கூட்டம் இருக்கும் இடத்தை அறிந்தனர். இந்நிலையில் இன்று குட்டி யானை தாய் யானையுடன் சேர்க்கப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் முதுமலை மற்றும் தெப்பக்காடு யானைகள் முகாமில் நேற்று உலக யானைகள் தின விழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, வளர்ப்பு யானைகளை மாயாறு ஆற்றில் குளிக்க வைத்து, சந்தனம், குங்குமம் பூசி அலங்காரம் செய்தனர். பின்னர் யானைகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டன. தொடர்ந்து, பாகன்கள் உத்தரவுக்கு இணங்க யானைகள் உடல் பயிற்சி செய்தன.
டில்லியில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின விழா நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும்படி, நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கட்டபெட்டு அருகே உள்ள பெட்டுமந்து பகுதியை சேர்ந்த ஜெயமுத்து மற்றும் ஊட்டி தமிழகம் மந்து பகுதியை சேர்ந்த திவ்யாசின் ஆகிய தோடர் இன பெண்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அழைப்பு விடுத்துள்ளார்
கோவை மாவட்டத்திற்கு இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் அங்கு பல இடங்களில் கனமழை பெய்யும் எனவும், போக்குவரத்து பாதிக்கப்படும் எனவும் தெரிகிறது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. மக்களே ஷேர் பண்ணுங்க!
நீலகிரி மாவட்டம், நேற்று இரவு எட்டு மணி அளவில் கூடலூர் அடுத்து மேல் கூடலூர் பகுதியில் பிரபு என்பவரின் ஆட்டோ மீது கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வாகனம் ஒன்று மோதியதில் ஆட்டோ ஓட்டுனருக்கு தலையில் அடிப்பட்டு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் விபத்து ஏற்படுத்தி நிற்காமல் சென்ற வாகனத்தை தொரப்பள்ளி சோதனை சாவடி அருகே வாகனத்தை தடுத்து நிறுத்தப்பட்டு காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
#நீலகிரியில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு.
#மசினகுடி காட்டில் சிறுத்தை உயிரிழப்பு
#நீலகிரியில் அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களிலும் போதைப்பொருள் விழிப்புணர்வு நடத்தப்பட்டது.
#நீலகிரியில் தாயை பிரிந்து தவிக்கும் குட்டி யானை தாய் யானையிடம் ஒப்படைக்க முயற்சிக்கும் வனத்துறை
Sorry, no posts matched your criteria.