India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் அக்டோபர்-23 (இன்று) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியே செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE NOW!
பாலகொலா ஊராட்சி பி.மணியட்டி ஊரைச் சேர்ந்த கங்காதரன்-பசவகான தம்பதியினரின் 6 வயது மகன் யாசிக், 90 வரிகள் கொண்ட சிவப்புராணத்தை 42 நொடிகளில் வாசித்து ஆன்லைன் போட்டியில் வெற்றி பெற்றார். இந்நிலையில் அந்த சிறுவனை கௌரவிக்கும் விதமாக, உதகையில் நடைபெற்றுவரும் புத்தக திருவிழாவில் கலந்து கொண்ட திரைப்பட பாடகர்கள் புஷ்பவனம் குப்புசாமி – அனிதா தம்பதியினர், மாணவனை மேடைக்கு அழைத்து வாழ்த்து தெரிவித்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் தனிநபர் இல்லங்களில் நூலகம் அமைத்து மாவட்ட அளவில் சிறப்பாக பராமரிக்கப்படும் ஒரு நூலகத்தை தேர்ந்தெடுத்து ஒரு ரூ.3,000 மதிப்பில் கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். இது குறித்து மாவட்ட நூலக அலுவலருக்கு தெரிவிக்கலாம். மேலும் dlonlg3@gmail.comஇல் 25.10.2024ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்திற்கு வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. மொத்தமாக நேற்று மட்டும் 6 செ.மீ மழை கொட்டித் தீர்த்துள்ளது. இந்நிலையில் இன்றும் காலையில் முதலே பல்வேறு பகுதிகளில் மழை பெய்து கொண்டிருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் மேற்குதொடர்ச்சி மலையில் அறிய வகையில் உள்ள தாவரங்கள், உயிரினங்கள் குறித்து பல்வேறு ஆராச்சியாளர்களால் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், தற்போது நீலகிரி டைட் எனப்படும் சிறியவகை நீலகிரிகா பட்டாம் பூச்சி “யூலோபியா எபிடெண்ட்ரியா” என்ற தாவரத்தில் இருப்பது கண்டறியப்பட்டு, உலகளவில் “தி ட்ராபிக்கல் லெபிடோப்டெரா” அறிவியல் இதழில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் பர்லியார் பகுதியில் மருத்துவ குணம் மிக்க முள் சீத்தாப்பழத்தை அதிக அளவில் விளைவிக்கப்படுகின்றன. இந்த பழங்கள் புற்றுநோய்களுக்கு குணப்படுத்தும் மருத்துவ குணம் உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் இந்த பழங்களை ஆர்வமுடன் வாங்கிச் செல்கிறார்கள்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. மேலும் மழை நீர் சாலைகளில் வெள்ளம் போல் ஓடுகிறது. மேலும் குன்னூர் பகுதியில் உள்ள சிற்றாறுகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடுகிறது. ஆற்றங்கரையிலுள்ள பொதுமக்கள் கவனமுடன் இருக்க அரசு துறையினர் அறிவுரை வழங்கி வருகின்றனர்.
குன்னூர் அரசு தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்து வரும் தொழிலாளி உதயகுமார் அகில இந்திய அளவில் வனத்துறையின் சார்பில் நடைபெற்ற அத்லெட்டிக் போட்டியில் கலந்து கொண்டார். சத்திஸ்கர் மாநிலத்தில் கடந்த 16ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடைபெற்ற போட்டியில் 25 கிமீ மற்றும் 5 கிமீ மாரத்தான் போட்டிகளில் முதல்பரிசு 2 தங்க பதக்கமும், 10,000 கிமீ மற்றும் 800 கிமீ நடை ஒட்டத்தில் 2 தங்க பதக்கமும் பெற்றுள்ளார்.
சேரங்கோடு ஊராட்சிக்குட்பட்ட ஏலம்மன்ன பகுதியில் இயங்கி வரும் தனியார் அறக்கட்டளையில் பணியாற்றி வரும் சரண்யா தேவி என்பவர் தனது மாமனார் ரங்கநாதனுடன் பயணித்த காரை பந்தலூர் கொளப்பள்ளி சாலை இலியாஸ் கடை அருகே காரை வழிமறித்த யானை காரை சேதப்படுத்தியது. காருக்குள் இருந்த இருவருக்கும் அதிர்ஷ்டவசமாக எந்தவித பாதிப்பும் இல்லை இந்த விபத்து குறித்து சேரம்பாடி வரச்சரகர் அய்யனார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் மகளிர் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்கு தமிழக அரசு பல்வேறு நல திட்டங்களை செயல் படுத்தி வருகிறது. இந்த வகையில் தற்போது சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை வாயிலாக ‘மகளிர் உதவி எண்’ அறிவிக்க பட்டு உள்ளது. அதாவது 181 என்ற கட்டணம் இல்லா தொலை பேசி எண்ணை 24 மணி நேரமும் பயன் படுத்தி பயன் பெறலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.
Sorry, no posts matched your criteria.