Thenilgiris

News September 26, 2024

நீலகிரி: காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

image

நீலகிரி: பந்தலூர் தாலுகா சேரம்பாடி அடுத்த சப்பந்தோடு பகுதியை சேர்ந்தவர் குஞ்சு முகம்மது (59 ). இவர் இன்று அதிகாலை காட்டு யானை தாக்கியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில், இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அடிக்கடி நடக்கும் யானை தாக்குதலால் கூடலூர், பந்தலூர் பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

News September 26, 2024

அரசின் விலையில்லா மிதிவண்டி விற்பனைக்கு செல்லும் அவலம்

image

தமிழக அரசு சார்பில் தமிழகம் முழுவதும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன. நீலகிரி மலை மாவட்டம் என்பதால் அதிக மேடு பள்ளங்கள் உள்ளதால் இங்கு மிதிவண்டிகள் ஓட்டுவது மிகவும் சிரமமாக உள்ளது. இங்கு பள்ளிகளில் வழங்கப்படும் விலையில்லா மிதிவண்டிகள் பயன்படுத்தாமல் துரு பிடித்து சமவெளியில் இருந்து பழைய பொருட்கள் விற்கும் வியாபாரிகள் குறைந்த விலைக்கு வாங்கி செல்கின்றனர்.

News September 25, 2024

வடகிழக்கு பருவமழை அவசர கால தொடர்பு எண் அறிவிப்பு

image

நீலகிரி ஆட்சியர் லட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவசர கால தொடர்புஎண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது உதகை கோட்டம் 04232445577, குன்னூர்கோட்டம் 04232206002, கூடலூர் கோட்டம் 04262261295, ஊட்டிவட்டம் 04232442433 குன்னூர்வட்டம் 04232206102 கோத்தகிரிவட்டம் 04266271718 கூடலூர் வட்டம் 04262261252 என்ற எண்களில் தகவல் தெரிவிக்கலாம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

News September 25, 2024

நீலகிரி சிபிஐஎம் டெல்லியில் போராட்டம்

image

புது டெல்லி பாராளுமன்ற அலுவலகம் முன்பு நீலகிரி மாவட்டத்தை சார்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் இன்று தர்ணா போராட்டம் நடத்தினர். இதில் நீலகிரி மாவட்டத்தில் நிலவி வரும் நிலம் சார்ந்த பிரச்சினைகள், மனித-விலங்கு மோதல், குடியிருப்புக்குள் உலா வரும் யானைகள் போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து ‘மக்களை வெளியேற்றியதே’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

News September 25, 2024

ஊட்டியில் எஸ்பி மோப்ப நாயுடன் ஆய்வு

image

நீலகிரி: ஊட்டியில் உள்ள தனியார் பள்ளியில் வெடிகுண்டு வைத்து இருப்பதாக நேற்று வந்த தகவலை அடுத்து நீலகிரி எஸ்பி என்.எஸ்.நிஷா, போலீஸ் மோப்ப நாயுடன் நேரில் சென்று 1 மணி நேரம் ஆய்வு செய்தார். மேலும், பள்ளி வளாகம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் செயல்பட்டு வருவதை ஆராய்ந்ததில், மர்ம நபர் நடமாட்டம் இல்லை என தெரிவித்தனர்.

News September 25, 2024

நீலகிரி: பருவ மழையை எதிர்கொள்ள தயார்

image

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில், 6 தாலுகா பகுதிகளில் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கோத்தகிரி நெடுஞ்சாலைதுறை அலுவலக வளாகத்தில் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், மாவட்டத்தில் அதிக பாதிப்பு ஏற்பட கூடிய 283 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 24, 2024

பர்லியார் தலைவிக்கு பிடிஓ எச்சரிக்கை

image

பர்லியார் ஊராட்சியில் உள்ள டால்பின் நோஸ் காட்சிமுனையில் உள்ள அரசுக்கு சொந்தமான 12 கடைகள் மற்றும் கார் பார்கிங் டென்டர் காலம் நிறைவடைந்த நிலையில் முறைப்படி பொதுமக்களுக்கு தெரிவிக்காமலும் துனைத்தலைவர் மற்றும் கவுன்சிலர்களுக்கும் தெரியாமல் கடைகளை திறந்து கொடுத்தமைக்காக ஊராட்சி தலைவிக்கு தாசில்தார், பி.டி.ஒ எச்சரிக்கை விடுத்தனர்.

News September 24, 2024

BREAKING: நீலகிரியில் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

image

நீலகிரி: உதகையில் உள்ள பிரபல தனியார் ஆங்கில பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அங்கு சோதனை செய்த போலீசார், வெடிகுண்டு மிரட்டல் என்பது வெறும் புரளி என தெரிவித்துள்ளனர். இதனிடையே 2 மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளியில் சோதனையில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.

News September 24, 2024

நீலகிரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

image

நீலகிரி மாவட்டத்தில் பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் அரசு அதிகாரிகள், விவசாயிகள், தொழில் முனைவோர் மற்றும் பொதுமக்களை மிரட்டி போலியாக மோசடியில் ஈடுபடுபவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை தனக்கு தெரியும் எனக் கூறி பொதுமக்களிடம் பணத்தை வாங்கி மோசடி செய்து அல்லது பொதுமக்களை மிரட்டி பணம் பறிப்பவர்கள் மீது புகார் அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நீலகிரி மாவட்ட கலெக்டர் எச்சரித்துள்ளார்.

News September 24, 2024

துாய்மை விழிப்புணர்வு மனித சங்கிலி: ராணுவ வீரர்கள் பங்கேற்பு

image

நீலகிரி: குன்னூர் கன்டோன்மென்ட் வாரியம் சார்பாக ஸ்வச்தா ஹி சேவா விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சிகள் நடைப்பெற்று வருகின்றன. அந்தவகையில் நேற்று நடந்த நிகழ்ச்சியை, எம்ஆர்சி கமாண்டன்ட் பிரிகேடியர் சுனில்குமார் யாதவ், கன்டோன்மென்ட் வாரிய முதன்மை நிர்வாக அதிகாரி வினித் பாபாசாகிப் லோட்டே ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில் தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக மனித சங்கிலி நடந்தது.

error: Content is protected !!