India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோத்தகிரி சிறப்புநிலை பேரூராட்சி நகராட்சியாக மாற்றப்படும் என தமிழக அரசு சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதற்கான தீர்மானம் பேரூராட்சியில் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் தற்போது அருகிலுள்ள 4 கிராம ஊராட்சிகளை இணைத்து நகராட்சியாக மாற்ற தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஏற்கனவே ஊட்டி மாநகராட்சியாக தரம் உயரும் நிலையில், கோத்தகிரி நகராட்சியாக மாறுவது குறிப்பிடத்தக்கது.
தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் குன்னூர் சட்டமன்றத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த கா, ராமச்சந்திரன் அமைச்சர் பதவியில் இருந்து விடிவித்தது பின்னர் தமிழக அரசின் தலைமை கொறடாவாக கா. ராமச்சந்திரன் அவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் நீலகிரி மாவட்டத்தை சார்ந்த மாவட்ட செயலாளர் பா.மு, முபாரக் அவர்கள் தலைமை கொறடாவாக இருந்தது குறிப்பிடத்தக்து.
நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த போதை பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில், கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம், நீலகிரி எஸ்பி என்.எஸ். நிஷா நேற்று நேரில் விசாரணை மேற்கொண்டார்.
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த தேசன்ராஜ் என்பவர் நீலகிரி மாவட்டம் கேத்தி அரக்காடு பகுதியில் உள்ள தோட்டத்தில் விவசாய பணி செய்து வருகிறார். இவர் மற்றும் இவரது மனைவி இருவரும் இன்று தோட்ட வேலைக்கு சென்ற நிலையில், அவர்களது 2 மகள்கள் விளையாடி கொண்டு இருந்துள்ளனர். அதில் 1 1/2 (ஒன்னரை) வயது மகள் அருகில் இருந்த குட்டையில் தவறி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து கேத்தி போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம், பந்தலூர் தாலுகா தேவாலா பகுதியில் இன்று இருசக்கர வாகனத்தில் சென்றவரை, அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்படுத்தி நிற்காமல் சென்றது. இருசக்கர வாகனத்தில் பயணித்தவர் சாலையில் கிடைப்பதை கண்ட பொதுமக்கள், உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பந்தலூர் அருகே சோலாடி பகுதியில், 300க்கும் மேற்பட்ட பழங்குடியினர் வசித்து வருகின்றனர். அவர்கள் 4 கி.மீ., தொலைவில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று பொருட்கள் வாங்க வேண்டியுள்ளது. 19 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து கட்டுமான பணி நடைபெறும் தருவாயில் வருவாய் துறை அதிகாரிகள் செக்சன்-17 என்று பணியை தடுத்தனர். இதனால் அப்பகுதி மக்கள் கட்டுமான பணி தொடரவேண்டும் இல்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.
சேரம்பாடி அருகே நேற்று முன்தினம் குஞ்சு முகமது என்பவர் யானை தாக்கி உயிரிழந்ததை அடுத்து அந்த பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து சேரம்பாடி பகுதியில் முகாம் இட்டுள்ள காட்டு யானைகளை, கும்கி யானைகள் மூலம் விரட்ட நேற்று 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. இன்று காலை முதல் யானைகளை துரத்தும் பணியில் கும்கி யானைகள் ஈடுபடுகின்றன.
உதகை படகு இல்லத்தில் இன்று ( 27 தேதி ) சுற்றுலா தினத்தை முன்னிட்டு படகு சவாரி கட்டணம் 50 சதவிகிதம் சலுகையை சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிவித்து உள்ளது. மேலும் படகு இல்லத்தில் உள்ள பொழுது போக்கு விளையாட்டுகள் மற்றும் சிறுவர் ரெயில் ஆகியவைகளுக்கும் இன்று ஒரு நாள் மட்டும் 50 சதவிகிதம் சலுகை கட்டணம் வழங்கப்படுகிறது. இந்த தகவலை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் குணேஸ்வரன் தெரிவித்து உள்ளார்.
ஊட்டி அருகே நஞ்சநாடு பகுதியைச் சேர்ந்த விவசாயி அர்ஜூனன் என்பவர் மூளைச்சாவு அடைந்தார். உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் ஒப்புக்கொண்டதை தொடர்ந்து ஊட்டி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரகங்கள், கல்லீரல் பாதுகாப்பாக ஈரோடு மற்றும் கோவையில் உள்ள மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 2வது உடல் உறுப்பு தானம் ஆகும்.
நீலகிரி மாவட்டம் குன்னுார் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகரித்து வந்த நிலையில் இன்று மாலை சுற்று வட்டாரப் பகுதிகளான காட்டேரி
சேலாஸ் பெட்போர்டு வண்டிச்சோலை உள்ளிட்ட பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தேயிலை மற்றும் காய்கறி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சாலையோர வியாபாரிகள் விற்பனை இன்றி அவதியடைந்தனர்.
Sorry, no posts matched your criteria.