India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் 33 புதிய வகை ஊர்வனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீகூர், சிங்காரா, தெங்குமரகடா பகுதிகளில் 36 புதிய நீர், நிலங்களில் வாழும் உயிரினங்களும் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கேரளாவைச் சேர்ந்த வல்லுனர் குழுவினர் 3 நாட்கள் மேற்கொண்ட கணக்கெடுப்பின்போது பார்த்துள்ளனர். புதிய உயிரினங்களில் 16 வகை உயிரினங்கள் அழிவின் பட்டியலில் உள்ளன.
நீலகிரி: பந்தலுார் அருகே தாளூரில் உள்ள நீலகிரி கலை அறிவியல் கல்லுாரி மைதானத்தில், பாரதியார் பல்கலைக்கழக கல்லுாரி மாணவர்களுக்கு இடையிலான ‘ஏ’ பிரிவு கால்பந்து போட்டி நடந்தது. அதில் நீலகிரி, கோவை கல்லுாரிகளை சேர்ந்த 22 அணி வீரர்கள் விளையாடின. இறுதி போட்டியில், கோவை பாரதியார் பல்கலைக்கழக அணி – நீலகிரி கலை அறிவியல் கல்லுாரி அணி மாணவர்கள் விளையாடினர். 3 கோல்கள் அடித்து நீலகிரி அணி முதல் இடம் பிடித்தது.
நீலகிரி மாவட்ட இஸ்லாமிய மக்களின் காஜியின் பதவி காலம் வரும் 13ஆம் தேதி நிறைவடைகிறது. புதிய காஜியை தேர்வு செய்ய முஸ்லிம் சமுதாயத்திற்கு சேவை செய்து உழைத்த உலமாக்கள் 2 பேர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதி உள்ள உலமாக்கள் புகைப்படத்துடன் கூடிய சுய விபரங்கள் மற்றும் கல்வி சான்றிதழுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 10 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் 2024-2025ஆம் ஆண்டில் ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த, கணவனால் கைவிடக்கப்பட்ட (ம) ஆதரவற்ற பெண்களுக்கு நாட்டு இன கோழி குஞ்சுகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. இதை பெற விரும்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை சரியான ஆவணங்களுடன் இணைத்து அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களில் அளிக்க வேண்டும்.
நீலகிரி: குன்னூர், மேட்டுப்பாளையம் சாலையில் பர்லியார் என்ற இடம் உள்ளது. அந்த பகுதியில் உள்ள கொண்டை ஊசி வளைவில் இன்று மாலை 7 மணியளவில் அரசு பேருந்து பழுதாகி நின்றது. இதனால் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் வரிசைகட்டி நின்றன. இதனால் அவசர பணிகள் காரணமாக செல்பவர்கள், கோத்தகிரி வழியாக செல்ல அறிவிக்கப்பட்டு வருகிறது. மேலும், பேருந்து பழுது சரிசெய்து இயக்க காலதாமதமாகும் என கூறப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை பார்க்க தினமும் வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். குறிப்பாக தாவரவியில் பூங்காவை பார்வையிட அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இதே போன்று ஊட்டி படகு இல்லம், தொட்டபெட்டா காட்சி முளை உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்து காணப்பட்டது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. அதன்படி, 18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி, கூடலூரில் உள்ள கோழிகொல்லி ஆதிவாசி பழங்குடியின கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படை வசதிகள் குறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா நேற்று நேரில் ஆய்வு செய்தார். மேலும் அப்பகுதியை சேர்ந்த பழங்குடியின மக்களின் குறைகளை கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது கூடலூர் கோட்டாட்சியர் செந்தில் குமார் உடனிருந்தார்.
நீலகிரி மாவட்டம் பர்லியார் ஊராட்சியின் கிராம சபை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கடந்த சில நாட்களாக சர்ச்சையில் இருந்து வரும் டால்பின் நோஸ் கடை சம்பந்தமான பிரச்சனையால், கிராம சபை கூட்டத்தில் இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது கைகலப்பாக மாறியது. இதனால் தீர்மானம் எதுவும் நிறைவேற்ற முடியாமல் கூட்டம் பாதியில் முடிந்தது.
மகாத்மா காந்தியின் 156வது பிறந்த நாளான இன்று நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள கிராம ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஊட்டி சேரிங் கிராஸ் பகுதியில் உள்ள காந்தியின் திருவுருவ சிலைக்கு, மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அங்குள்ள கதர் கிராம அங்காடியில் காந்தியடிகளின் உருவப்படுத்தற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
Sorry, no posts matched your criteria.