India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் ஒரு பொறுப்பு அமைச்சரை நியமித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் மாவட்ட வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தவும், பிற பணிகளை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, நீலகிரி மாவட்டத்திற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கேத்தி பேரூராட்சி , எல்லநள்ளி பஸ் நிலையம் பகுதியில் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் இன்று நடைபெற்றது .கேத்தி பேரூராட்சி அதிமுக செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். குந்தா மேற்கு ஒன்றிய செயலாளர் சக்சஸ் சந்திரன், அர்ஜூனன் , கண்ணபிரான் ராஜு உள்பட பலர் பங்கேற்றனர் . தமிழக அரசின் மின் கட்டணம் , சொத்து வரி மற்றும் பத்திர பதிவு உயர்வை கண்டித்து தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டடது.
தமிழ்நாடு அமைச்சரவையில் சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்டு புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்றனர். அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்ட பின் முதல் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்நிலையில், 13 மாவட்டங்களுக்கு பொறுப்பு அமையச்சர்களை நியமனம் செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, நீலகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக மு.பெ.சாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
நீலகிரி கூடலூரில் இருந்து அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், சென்னை, கன்னியாகுமரி, செங்கோட்டை பகுதிகளுக்கு சொகுசு பஸ்கள் இயக்க பட்டு வருகிறது. இந்த பஸ்களை படுக்கை மற்றும் இருக்கை வசதியுடன் கூடிய பஸ்களாக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் கூடலூர் – சென்னை இடையே படுக்கை நேற்று சொகுசு பஸ் துவங்கியது பயணிகளை மகிழச்சி அடைய செய்து உள்ளது.
கோத்தகிரி சோசலிச தொழிலாளர் முன்னேற்ற சங்கம் மற்றும் பந்தலூர் இண்டகரல் பிளான்டேஷன் ஒர்க்கர்ஸ் யூனியன் ஆகிய தொழிற்சங்கத்தின் சார்பில் தமிழக முதலமைச்சர், டேன் டீ நிர்வாக இயக்குனருக்கு அனுப்பியுள்ள மனுவில், டேன் டீ தொழிலாளர்களுக்கு 2024 வருடத்திற்கான போனஸ் தொகையை 20 சதவீதமாக அறிவித்து வரும் 20 ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேரம்பாடி காவல் நிலைய காவல் ஆய்வாளர் துரைபாண்டி வழக்கமான ரோந்து பணியில் நேற்று கொளப்பள்ளி ஆட்டோ நிறுத்தம் பகுதியில் ஈடுபட்டபோது சந்தேகம் படும் படியாக நின்றிருந்தவரை சோதனையிட்டார். இதில், அவர் கொளப்பள்ளியை சேர்ந்த சசிகுமார் (44) என்றும், விற்பனைக்கு கஞ்சா வைத்து இருந்ததும் தெரியவந்தது. அவரிடம் கஞ்சாவை பறிமுதல் செய்து கைது செய்தார்.
நீலகிரி: கோத்தகிரி அருகே கெங்கரை சிவகிரிநகரை சேர்ந்தவர் விஜயராஜ் (34). இவர் நேற்று மாலை யானை தாக்கியதில் படுகாயமடைந்து, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் இருக்கை மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய சொகுசு பேருந்து சேவை இன்று முதல் துவங்கப்பட்டது. கூடலூரிலிருந்து சென்னைக்கு தினமும் பிற்பகல் 2 மணிக்கு இயக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் , கூடலூர் அருகே நாடுகானி என்ற இடத்தில் இருந்து வழிக்கடவு செல்லும் நெடுஞ்சாலை உள்ளது . அந்த சாலையில் இன்று மாலை 3 மணி அளவில் இரண்டு லாரிகள் நேர் எதிரே மோதியது . அதனால் தமிழ்நாடு , கேரளா மாநிலங்களுக்கு இடையே வாகன போக்குவரத்து தடைப்பட்டது . காவல் துறையினர் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினார்கள்.
நீலகிரி மாவட்ட காவல் துறை சார்பில் Police Commemoration Day அக்டோபர் 21 தேதி நடைபெறுகிறது. அதை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான வண்ண ஓவிய போட்டி நடத்தப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. இதற்கான போட்டியில் கலந்துகொள்ள அக்டோபர் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
Sorry, no posts matched your criteria.