India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் பொதுமக்கள் பேரிடர் காலங்களில் பேரிடர் இயற்கை இடர்பாடுகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள் உதவி எண்களை அறிவித்து உள்ளார் 0423-2450034, 0423-2450035, 9943126000 உள்ளிட்ட எண்களை தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் என கூறினார்.
தமிழ்நாட்டில் வடக்கிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் நீலகிரி மாவட்டத்திலும் அதிக மழை பெய்து வருவதால் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு செல்லும் மலை ரயில் பாதையில் அபாய அளவை கடந்து வெள்ளம் கொட்டி வருகிறது. இதனால் பயணிகளின் பாதுகாப்பு கருதி மலை ரயில் இரண்டு நாட்கள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோத்தகிரி குஞ்சப்பனை கீழ்கூப்பு பகுதியை சேர்ந்த சண்முகம் (41) நேற்று தோட்ட வேலைக்கு சென்றவர் இரவு வீடு திரும்பவில்லை. எனவே இன்று காலை தேடி சென்ற போது யானை தாக்கி பலியானது தெரிந்தது. தகவலறிந்த வனச்சரகர் செல்வராஜ் தலைமையில் வன துறையினர் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.50,000 நிவாரண நிதி வழங்கபட்டது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் ஓட்டுப்பட்டறை காமாச்சி அம்மன் கோவில் அருகில் சற்று முன் தடுப்புசுவர் இடிந்து வீட்டின் மேல் விழுந்தது. மேலும் உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன் குன்னூர் நகராட்சி மற்றும் வருவாய்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால் மேலும் இடியும் முன்னதாக தடுப்பு நடவடிக்கையில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
ஊட்டி சேரிங்கிராஸ் தேவாங்கர் கல்யாண மண்டபத்தில் இன்று பாஜக தீவிர உறுப்பினர் பயிலரங்க கூட்டம் மாவட்ட பாஜக தலைவர் மோகன்ராஜ் தலைமையில் நடந்தது. இதில் பாஜக மாநில மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். இதில் மாநில, மாவட்ட, மண்டல பொறுப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்.
நீலகிரி, 1899 ஜூன் 15இல் மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையே மலை ரயில் இயக்கம் தொடங்கப்பட்ட நிலையில், 1909 அக்டோபர் 15 முதல் குன்னூரில் இருந்து ஊட்டி வரை நீட்டிக்கபட்டது. இந்த தினம் ஆண்டுதோறும் நீலகிரி மலை ரயில் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி இன்று ஊட்டி ரயில் நிலையத்தில் 116ஆவது ரயில் தினம் கொண்டாடப்படுகிறது.
நீலகிரி எஸ்பி என்.எஸ்.நிஷா அறிக்கையில் ‘மாவட்ட ஊர்காவல் படையில் காலியாக உள்ள துணை வட்டார தளபதி பதவிக்கு (25.9.24)க்குள் விண்ணப்பிக்க கோரப்பட்டு இருந்த நிலையில், தற்போது அதன் கால அவகாசம் (31.10.24) வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. கல்வித் தகுதி பட்டப்படிப்பு (அ) அதற்கு மேல் படித்திருக்க வேண்டும். வயது வரம்பு 21 முதல் 50 ஆகும். விண்ணப்பங்கள் மாவட்ட எஸ்பி,க்கு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
உதகையில் தனியார் ஓட்டலுக்கு இன்று காலை இ.மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறித்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் மற்றும் வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவு போலீசார் மோப்ப நாயுடன் விரைந்து சென்று தீவிர சோதனை செய்கின்றனர். மேலும் தொட்டபெட்டா அருகே சிங்க்லர் ஓட்டல், ஐலேண்டு அக்கார்டு மற்றும் பழைய உட்லண்ட்ஸ் ஹோட்டலில் வெடிகுண்டு தொடர்பாக சோதனை நடைபெற்று வருகிறது.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் 2 தனியார் பள்ளிகளுக்கும், தனியார் விடுதிக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாள்களாக தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
நீலகிரி மாவட்டத்தில் 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. உதகையில் 15ஆம் தேதி அரசு மேல்நிலை பள்ளி, குன்னூரில் 16ஆம் தேதி அறிஞர் அண்ணா அரசு மேல்நிலை பள்ளி, கோத்தகிரியில் 17ஆம் தேதி அரசு மேல்நிலை பள்ளி, கூடலூரில் 18ஆம் தேதி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் மருத்துவ முகாம் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.