Thenilgiris

News April 4, 2025

நீலகிரி மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை!

image

தமிழகத்தில் பல்வேறு மாவட்டடங்களில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில் இன்றும் (ஏப்.4) தமிழகத்தில் சில மாவட்டடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, நீலகிரி மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதியில் கனமழைக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால், வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள். உங்க உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க.

News April 3, 2025

கூடலூரில் பெண் வெட்டி கொலை

image

காசிம் வயலைச் சேர்ந்த ஜெனிஃபர் கிளாடிஸ்(31) என்பவர் கணவர் ராஜ்குமாரிடம் விவாகரத்து பெற்று, தனது குழந்தைகள் ஏஞ்சல் ஹாசினி, அனுஶ்ரீ ஆகியோருடன், அலி மொய்தீன் குட்டி என்பவரது வீட்டில் குடியிருந்து வருகிறார். இவரை அலி மொய்தீன் குட்டி நேற்றிரவு இரவு வெட்டி கொலை செய்துள்ளார். இதனிடையே இன்று அலி மொய்தின் குட்டி காவல் நிலையத்தில் சரணடைந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News April 3, 2025

நீலகிரி போராட்டம்: ரூ 10 கோடி வரை வருவாய் இழப்பு

image

நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்யக் கோரி அனைத்து வணிகர் சங்கங்கள் சார்பில் நேற்று கடையடைப்புப் போராட்டம் நடந்தது. 24 மணி நேர கடையடைப்பு போராட்டத்தால் ரூ.7 கோடி முதல் 10 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, வணிகர்கள் தெரிவித்துள்ளனர். காட்டேஜ்கள், உணவு விடுதிகள் ஆகியவை போராட்டத்தில் பங்கெடுத்தது குறிப்பிடத்தக்கது.

News April 3, 2025

நீலகிரியில் சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு!

image

நீலகிரி: அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, மாவட்ட சுகாதார அலுவலகத்தில் 23 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, நிர்வாக செயலாளர்/ துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், 38, ஜெயில் ஹில் ரோடு, துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள், துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், நீலகிரி மாவட்டம்’ முகவரிக்கு 15ஆம் தேதிக்குள் அனுப்பவும்.

News April 3, 2025

நீலகிரி மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

image

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, நீலகிரி மாவட்டத்தில் இன்று(ஏப்.3) பல்வேறு பகுதியில் கனமழைக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால், வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள். உங்க உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க.

News April 2, 2025

கூடலூர் தேனீக்கள் கொட்டி  சுற்றுலா பயணி பலி 

image

கூடலூர் அருகே தவளை மலை காட்சி முனை பகுதியில் தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், இன்று(ஏப்.02) கேரள மாநிலம் கள்ளிக்கோட்டை பகுதியை சார்ந்த ஜாபர் என்ற சுற்றுலா பயணி அங்கு சென்ற போது அங்கிருந்த தேனீக்கள் அவரை கொட்டியதில் அவர் பரிதமாக உயிரிழந்தார். அவரது உடல் தற்போது கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

News April 2, 2025

அங்கன்வாடி பணிக்கு ரெடியா?

image

தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் இலவசமாக, அங்கன்வாடி ஆசிரியர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-35 வயதிற்கு அதிகமான பெண்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியின் மூலம் தகுதிபெறுபவர்களுக்கு தொடக்கமே மாதம் ரூ.7,500 முதல் ரூ.20,000 வரை சம்பளம் கிடைக்கும். மேலும் விவரங்களை இங்கு <>கிளிக் <<>>செய்து அறியலாம். இதை பிறர் பயன்பெற SHARE செய்யுங்கள்.

News April 2, 2025

இ-பாஸ் நடைமுறை: கலெக்டர் முக்கிய தகவல்!

image

“நீலகிரி கல்லாறு இ-பாஸ் சோதனை சாவடியில், பூம் பேரியர் அமைக்க உள்ளோம். இ-பாஸ் பெற்ற வாகனங்களின் நம்பர் பிளேட் வாயிலாக தானியங்கி முறையில், செக் செய்யும் வகையில் இது அமைய உள்ளது. அடுத்த வாரம் இத்திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது. இதனால் ஊழியர்கள் அதிகம் தேவைப்படமாட்டார்கள். போக்குவரத்து நெரிசல் ஏற்படாது. மற்ற சோதனைச்சாவடிகளிலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.” என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News April 2, 2025

மக்களே உஷார்! நீலகிரி வாலிபரிடம் மோசடி

image

ஊட்டியை சேர்ந்த வாலிபரிடம், இரட்டிப்பு லாபம் தருவதாக கூறி, ரூ.18 லட்சம் ஆன்லைனில் மோசடி செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் முறையில் முதலீடு செய்தால் கூடுதல், இரட்டிப்பு லாபம் கிடைக்கும், என ஆசை வார்த்தை கூறி, முதலில் ரூ.50,000 முதலீடு செய்து பல தவணைகளில் ஆன்லைன் முறையில் பணம் பெறப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் அவருக்கு பணம் ஏதும் கிடைக்காததால் ஊட்டி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். 

News April 1, 2025

நீலகிரி: இ-பாஸ் ரத்துசெய்யக் கோரி நாளை போராட்டம்

image

நீலகிரியில் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் முறை கட்டயாமக்கப்பட்டது. இதனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது. இந்நிலையில், நாளை ஒரு நாள் முழு கடை அடைப்புப் போராட்டம் நடக்கும் என, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது. இ-பாஸ் முறையால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிப்படைவதால், இ-பாஸ் முறை ரத்து உட்பட, 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை இப்போரட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!