India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், தாட்கோ துறை மூலம் நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தின்கீழ் நிலம் வாங்குவதற்காக 01 பயனாளிக்கு ரூ.5 இலட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் உட்பட பலர் உள்ளனர்.
கோத்தகிரி மேட்டுப்பாளையம் பிரதான சாலையில் பொள்ளாச்சி பதிவு கொண்ட சுற்றுலா சொகுசு காரானது நேற்று மாலை கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி செல்லும் பொழுது மாமரம் என்ற பகுதியில் நிலைத்தடுமாறி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் வந்த சுற்றுலா வினருக்கு எந்தவித அசம்பாவிதம்ஏற்படவில்லை. சிறுகாயங்களுடன்வெளியே வந்தனர். பின்னர் வேறு ஒரு வாகனத்தை பிடித்து அவர்கள் சென்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக மழை பெய்து வருகிறது. இதனால், அப்பகுதியில் உள்ள சாலைகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இந்நிலையில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்டில் சொல்லுங்க..
நீலகிரி: கோத்தகிரி அரவேனு பகுதியில் உள்ள தனியார் தேயிலை தொழிற்சாலையில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளி சிவக்குமார் என்பவர் பணி புரிந்து வந்தார். இவர் நேற்று இரவு பணியை முடித்து விட்டு மெஷினை சுத்தம் செய்யும் போது, பெல்ட்டில் எதிர்பாராமல் சிக்கி பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி: கோத்தகிரியில் சிவகாமி எஸ்டேட் மற்றும் FYZ Gym சார்பில் ஆணழகன் போட்டி நடைபெற்றது. இதில் திருப்பூர், கோவை, நீலகிரி உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது சிறப்பு விருந்தினராக பங்கேற்ற யூகேஜி பயிலும் ஆஷிக் என்ற சிறுவன் தனது உடற்கட்டை காண்பித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். மேலும், சிறுவனைப் பாராட்டி அவருக்கு ரூ.10,000 மதிப்புள்ள சைக்கிளை பரிசாக வழங்கினர்.
நீலகிரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்காக தற்காலிக பட்டாசு கடைகள் நடத்த இன்றே (19.10.24) கடைசி நாள் என்று நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர் லட்சுமி பவ்யா தெரிவித்துள்ளார். மேலும், விருப்பம் உள்ளவர்கள் இணையதள முகவரிக்கு, வரைபடம், பாஸ்போர்ட் புகைபடம், வங்கி கணக்கு எண், ஆதார், குடும்ப அட்டை, உரிமை கட்டணம் கட்டி இணையதளம் மூலம் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், குன்னூர், மணியாட்டி பகுதியில் ஆன்லைன் மூலம் சிவபுராணம் போட்டியில் கலந்துகொண்டு 90 வரிகள் கொண்ட சிவபுராண பாடலை 2 நிமிடம் 42 நொடிகளில் வாசித்து குன்னூர் பி.மணியட்டி பகுதியை சேர்ந்த கங்காதரன் – பசவகானா தம்பதியரின் மகன் யாசிக் சாதனை படைத்துள்ளான். இந்த சாதனையை நிகழ்த்திய சிறுவனை ஊர் மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
நீலகிரி, துணை வட்டார பதவிக்கு (Deputy area Commander) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு கடைசி தேதி அக்.31ஆம் ஆகும். 21 வயது முதல் 50 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை காவல் கண்காணிப்பாளர், நீலகிரி என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இது கவுரவப்பதவி ஆகவே, ஊதியம் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி, முஸ்லிம் மக்களின் பிரதிநிதியாக உள்ள மாவட்ட காஜியின் பதிவிகாலம் 2023ஆம் ஆண்டே முடிவடைந்தது. தற்போது புதிய காஜி நியமிக்கப்பட உள்ளதால், தகுதியானவர்கள் மாவட்ட அளவிலான தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கு விண்ணப்பத்தை அக்.30ஆம் தேதிக்குள் அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு ஊட்டி பிற்படுத்தப்பட்டோர் – சிறுபான்மையினர் நலத்துறை அலுவலகத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி புறநகர் காவல் நிலைய எஸ்எஸ்ஐ பாபு நேற்று இரவு எம்.பாலாடா பிரிவில் (TN-01-U-4065) எண் கொண்ட காரை தடுத்து சோதனை செய்தார். அப்போது காரில் இருந்த ஒரு நாட்டு துப்பாக்கி, ஒரு பெரிய கத்தி, 6 சிறிய கத்திகள், 2 (HEAD-LIGHT), ஒரு பண்டல் பாலிதீன் கவர் போன்றவற்றை காருடன் பறிமுதல் செய்தனர். மேலும், காரில் பயணித்த 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வன சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Sorry, no posts matched your criteria.