Thenilgiris

News November 11, 2024

நீலகிரி: ஆபத்தை மீறி அணை நீரில் ‘பைக்’ சவாரி

image

எமரால்டு அணையில் இருந்து தினசரி ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. எனவே, ஆற்றோரம் செல்லவோ, அணை நீர் செல்லும் சாலையை வாகனங்கள் மூலம் கடக்கவோ கூடாது என்றும் நீலகிரி மாவட்ட நிர்வாகம் எச்சரித்து வருகிறது. இந்த நிலையில் ஆர்வ கோளாறினால் ஆபத்தை உணராமல் சிலர் இரு சக்கர வாகனத்தில் அணை நீரில் கடந்து செல்வது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

News November 10, 2024

நீலகிரி தானியங்கி கேமரா பொருத்த நடவடிக்கை

image

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா வாகனங்கள் இ-பாஸ் இன்றி அனுமதிக்கப்படுவதில்லை. அனைத்து சோதனை சாவடிகளிலும் தானியங்கி கேமரா பொருத்தி இ-பாஸூடன் வருபவர்கள் எத்தனை நாட்கள் தங்கி செல்கின்றனர் என்பதனை வாகனப்பதிவு எண்களை கொண்டு துல்லியமாக கண்காணிக்கப்படும். இ-பாஸூன்றி மாவட்டத்திற்குள் வாகனங்கள் நுழைய தடை என ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.

News November 10, 2024

எமரால்டு அணை திறப்பு: கலெக்டர் எச்சரிக்கை

image

எமரால்டு அணையில் இருந்து (10.11.24) இன்று முதல் வினாடிக்கு ஆயிரம் கன அடி வீதம் 30 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. அதனால் அணை நீர் செல்லும் பாதையின் கரையில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு எச்சரித்து உள்ளார். அவசர உதவி தேவைப்பட்டால் இலவச எண் 1077 மற்றும் 0423 2450034, 0423 2450035 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.

News November 10, 2024

லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனை

image

நீலகிரி லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., ஜெயகுமார், உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பரிமளா தேவி தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொட்டபெட்டா சந்திப்பில் சொந்த ஊருக்கு ஊட்டி நகராட்சி கமிஷனர் காரில் ரூ.11 லட்சம் ரூபாய் எடுத்துச் சென்ற போது வாகனத்தை மடக்கிப்பிடித்து பணத்தை பறிமுதல் செய்த விசாரணை நடத்தி வருகின்றனர். நடுஇரவிலிருந்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால் பரபரப்பில் உள்ளது.

News November 10, 2024

அமரன் சினிமா ராணுவ வீரருக்கு இலவசம்

image

ராணுவ வீரரின் உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அமரன் திரைப்படம் ஊட்டியில் திரையிடப்பட்டுள்ளது. இந்த படத்தை நாளை மதியம் 2 மணிக்கு காண வரும் ராணுவ வீரர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு, ‘நீலமலை முன்னாள் ராணுவ வீரர்கள் நல சங்கம்’ சார்பில் இலவச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்புக்கு: 9566958093 – 9486175398 – 9159493322

News November 10, 2024

வயநாடு: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி

image

வயநாடு நிலச்சரிவில் தமிழகத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தனர். அவர்களது குடும்பங்களுக்கு பந்தலூர் மேம்பாட்டு குழு சார்பில் ஏற்கனவே மூன்று குடும்பங்களுக்கு தலா ரூ. 20 ஆயிரம் வழங்கப்பட்டது . தற்போது சேரம்பாடியில் கணவனை இழந்த செல்மாவுக்கு ரூ.20 ஆயிரம் நிதி உதவி இன்று வழங்கப்பட்டது. பந்தலூர் மேம்பாட்டு குழு உறுப்பினர்கள் தீபக் ராம், அனுப், சனுஜா, மகேந்திரன், ஜனனி ஆகியோர் வழங்கினார்கள்.

News November 9, 2024

நீலகிரி: இன்றைய தலைப்பு செய்திகள்

image

➤பெரியார் நகர் பகுதியில் கருஞ்சிறுத்தை நடமாட்டம் ➤ஊட்டியில் சட்ட ஒழுங்கு ஆய்வுக் கூட்டம் ➤வனத்துறை சார்பில் குறைதீர் கூட்டம் ➤மலை ரயில் மீண்டும் இயக்கம் ➤பேசும் படம்: தாயைப் பிரிந்த ஏக்கம் ➤முதல்வர் மருந்தகம் விண்ணப்பிக்க கடைசி நாள்.

News November 9, 2024

ஊட்டியில் சட்டம் ஒழுங்கு ஆய்வுக் கூட்டம்

image

நீலகிரி மாவட்ட ஆட்சியரின் கூடுதல் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் இன்றுநடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமை தாங்கினார். மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா மற்றும் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

News November 9, 2024

நீலகிரி: வனத்துறை சார்பில் குறைதீர் கூட்டம்

image

கூடலூர் வன அலுவலர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு தலைமை தாங்கினார். இதில் தேயிலை விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சளிவயல் ஷாஜி, செயலர் ஆனந்த ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று தேயிலை மற்றும் விவசாயிகளின் பிரச்சனைகளை பற்றி எடுத்துக் கூறினார்கள்.

News November 9, 2024

மீண்டும் மலை ரயில் இயக்கம்

image

மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும், காலை,7:10 மணிக்கு ஊட்டிக்கு மலை ரயில் இயக்கப்படுகிறது. குன்னூர் மலைப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்தது. இதனால் கல்லாறுக்கும் குன்னூருக்கும் இடையே உள்ள, மலைப்பகுதி ரயில் பாதையில், பல இடங்களில் மண் மற்றும் பாறைகள் சரிந்து மலை ரயில் இயக்கப்படவில்லை. மேட்டுப்பாளையம்-குன்னூர் ரயில் பாதை சீர் செய்யப்பட்டதை அடுத்து, மீண்டும் மலை ரயில் ஓடத் துவங்கியது.

error: Content is protected !!