India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் டாக்டர் பாலாஜி என்பவரை இளைஞர் கத்தியால் குத்திய சம்பவத்தை கண்டித்து, ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் மற்றும் மருத்துவ மாணவர்கள் சங்கம் சார்பில் நேற்று பணி புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது. டாக்டர்கள் தினேஷ், குருமூர்த்தி தலைமை ஏற்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் இரவு நேர காவல் பணிக்காக காவல் துறை அதிகாரிகள் தலைமையில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்படுகிறார்கள். உதகை நகரம், உதகை கிராமியம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவால உட்கோட்டத்தில் ரோந்து பணி அலுவலர்கள் விவரம் மாவட்ட காவல் துறை அலுவலரால் (14.11.2024) இரவு பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் அறிவிப்பு.
1.நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் குழந்தைகள் தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
2.கோத்தகிரியில் டூவிலரை தூக்கி வீசிய காட்டெருமை வீடியோ வைரல்
3.அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே மெஷினை திறந்து வைத்த ஆட்சியர்
4.பந்தலூரில் இன்று கலைஞர் நூலகம் திறப்பு விழா
5.கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் வேலை நிறுத்தம்
6.முதுமலையில் உண்ணி செடி அகற்றும் பணி துவக்கம்
முதுமலை அருகே குனியல் பகுதியில் நெல் வயலில் காட்டு யானைகள் நுழையாமல் இருக்க சோலார் மின் வேலி போடப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலையில் ஒரு காட்டு யானை மின் வேலியை உடைத்து நுழைந்து நெற்பயிர்களை சேதப்படுத்தியது. இதற்கு வனத்துறை இழப்பீடு வழங்கவும், காட்டு யானை மீண்டும் வராமல் இருக்க நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விடியல் பயண திட்டம் மூலம் பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் . நீலகிரி மாவட்டத்தில் 7-5-2021 முதல் 31-10-2024 வரை 71 ஆயிரத்து 902 மாற்றுத்திறனாளிகள்,1990 மாற்றுத்திறனாளி உதவியாளர்கள், 1670 மூன்றாம் பாலினத்தவர் மற்றும் 1,00,54,057 மகளிர் என மொத்தம் 1.01 கோடி பேர் இலவசமாக பயணித்து பயனடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் நகர பேருந்துகளிலும் பெண்கள் இலவச பயணம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
நீலகிரி மாவட்டத்தில் 77 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் இயங்கி வரும் நிலையில், இதில் பணிபுரியும் 23 செயலாளர்களுக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டது. இதை எதிர்த்து நீலகிரி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் இன்று திடீர் வேலை நிறுத்ததில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கடன் சங்க பணிகளில் தொய்வு ஏற்பட்டது.
உதகை ஆட்சியர் அலுவலகத்தில் மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நவம்பா் மாதத்துக்கான குறைதீர்ப்பு கூட்டம் நவம்பா் 15ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நிா்வாகக் காரணங்களால் நவம்பா் 15ஆம் தேதி நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் 22ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளது.
தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை, நீலகிரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழி காட்டும் மையம், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் தனியாரா துறை வேலை வாய்ப்பு முகாம் 23.11.24 கேத்தி சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. விருப்பம் உள்ளவர்கள் கல்வி சான்றிதழ்களுடன் பங்கேற்கலாம்.
நீலகிரி மாவட்டத்தில் இரவு நேர காவல் பணிக்காக காவல் துறை அதிகாரிகள் தலைமையில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்படுகிறார்கள். உதகை நகரம், உதகை கிராமியம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவால உட்கோட்டத்தில் ரோந்து பணி அலுவலர்கள் விவரம் மாவட்ட காவல் துறை அலுவலரால் (13.11.2024) இரவு பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் அறிவிப்பு.
1. நீலகிரியில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் பிரதோஷ விழா கோலாகலமாக நடைபெற்றது.
2.கோத்தகிரியில் கடும் குளிருடன் கூடிய சூழ்நிலை நிலவியது.
3. டார்ச் லைட் வெளிச்சத்தில் சிகிச்சை – எல்.முருகன் கண்டனம்
4.தேசிய தொடர் ஓட்டப்போட்டிக்கு குன்னூர் மாணவன் தேர்வு
5.ரத்ததான ஒருங்கிணைப்பாளருக்கு விருது
6.உதகை மார்க்கெட்டில் தற்காலிக கூடுதல் கட்டட பணி தொடக்கம்
Sorry, no posts matched your criteria.