Thenilgiris

News October 28, 2024

நீலகிரியில் புத்தரி அறுவடை திருவிழா

image

பந்தலூரில் பழங்குடியின மக்களின் பூ பூத்தரி எனும் அறுவடைத் திருவிழா ஆண்டுதோறும் ஐப்பசி 10ஆம் நாள் நடைபெறும். பூஜைகள் செய்த பின் வயலுக்கு சென்று குல தெய்வத்திற்கு பூஜைகள் செய்து நெற்கதிர்களை பறித்து மகா விஷ்ணு கோயிலுக்கு எடுத்து வந்தனர். தொடர்ந்து பழங்குடியின இசை வாத்தியாங்களுடன் நெற்கதிர்களுக்கு சிறப்புப் பூஜை செய்யப்பட்டது. பின்னர் அனைவருக்கும் பிரசாதம், நெற்கதிர்கள், அரசி இலைகள் வழங்கப்பட்டன.

News October 28, 2024

நீலகிரியில் பனியின் தாக்கம் அதிகரிப்பு

image

நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், உதகை, கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை நேரத்தில் நீர்பனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. மலைப்பாதைகளில் பனிமூட்டமாக இருப்பதால்,வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே வாகனங்களை இயக்குகின்றனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

News October 27, 2024

நீலகிரி தலைப்புச் செய்திகள்

image

1.ஊட்டி உருளைக்கிழங்கு ஏல விலை கிலோவிற்கு ரூ.4 குறைந்தது.
2.நீலகிரியில் நீர்ப்பனியின் தாக்கம் அதிகரிப்பு
3.நீலகிரி மாவட்ட மருந்து கடைகளில் சிசிடிவி கட்டாயமாக்கப்பட்டது.
4.தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் திறந்த வெளியில் மலம் கழித்தால் அபராதம்.
5.மஞ்சூரில் பணம் கேட்டு மிரட்டிய நபர் கைது

News October 27, 2024

நீலகிரி: வேலை இல்லாதவர்களுக்கு உதவித்தொகை

image

நீலகிரி மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். இதற்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து ஒரு ஆண்டு முடிந்திருக்க வேண்டும். விண்ணப்பங்களை ஊட்டி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அணுகி பெற்று கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 27, 2024

நீலகிரி இன்று ரேஷன் கடை செயல்படும்

image

தமிழகம் முழுவதும் இன்று ஞாயிற்றுக்கிழமை 27-10-2024, தீபாவளி பண்டிகை முன்னிட்டு, ரேஷன் கடைகள் வழக்கம் போல் இயங்கும் என்று அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்துள்ளார். எனவே, நீலகிரி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் ரேஷன் கடைகள் விடுமுறை இல்லை என்பதை நினைவில் கொண்டு, நியாய விலைப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். பண்டிகை கால கூட்ட நெரிசலை குறைப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

News October 26, 2024

நீலகிரி தலைப்புச் செய்திகள்

image

1.கோத்தகிரியில் அரசு மருத்துவமனை கட்டிலில் ஓய்வெடுத்த தெருநாய்
2.கொடநாடு வழக்கு விசாரணை நவம்பர் 29-க்கு ஒத்திவைப்பு
3.நீலகிரி: வகுப்பறையில் 9ஆம் வகுப்பு மாணவி தீ குளிக்க முயற்சி
4. ஊட்டி ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவன ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
5.உதகை பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்

News October 26, 2024

அரசு மருத்துவமனை கட்டிலில் ஓய்வெடுத்த தெரு நாய்

image

கோத்தகிரி பஸ் நிலையம் பகுதியில் பல்வேறு சிறப்பு வசதிகளுடன் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் 3 கோடி ரூபாய் அவசர சிகிச்சைப் பிரிவு கட்டிடம் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. தினமும் சுமார் 300 க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை நோயாளிகள் கட்டிலில் தெரு நாய் ஒன்று ஏறி அமர்ந்து ஓய்வெடுத்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

News October 26, 2024

கொடநாடு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

image

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகை மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயான் மற்றும் வாளையார் மனோஜ் கோர்ட்டுக்கு வந்தனர். மேலும், சாட்சிகளிடம் விசாரிக்க அவகாசம் கோரப்பட்டதை அடுத்து, வழக்கு விசாரணையை நவம்பர் 29-க்கு ஒத்திவைத்து நீதிபதி லிங்கம் உத்தரவிட்டார்.

News October 26, 2024

நீலகிரி: வகுப்பறையில் மாணவி தீ குளிக்க முயற்சி

image

உதகை அருகே அரசு மேல்நிலை பள்ளி 9ஆம் வகுப்பு மாணவி குறைந்த மதிப்பெண் எடுத்ததை தந்தை கண்டித்து உள்ளார். இதனிடையே நேற்று நடந்த பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் தந்தை பங்கேற்று உள்ளார். அதே நேரத்தில் வகுப்பறையில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த மாணவி பாட்டிலில் வைத்திருந்த மண்ணெண்ணெயை தன் மீது ஊற்றி உள்ளார். தகவலறிந்த ஆசிரியர்கள் சென்று தடுத்தனர். இது குறித்து தேனாடுகம்பை போலீஸ் விசாரித்து வருகின்றனர்.

News October 26, 2024

நீலகிரி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

நீலகிரி மாவட்ட வனத்துறை சார்பில் சர்வதேச காலநிலை தினத்தை முன்னிட்டு ஊட்டியில் சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது. இதில் நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு, கார்பன் டை ஆக்சைடை குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மக்கள் அனைவரும் பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் கார்பன் டை ஆக்சைடு உருவாவது குறையும். போக்குவரத்து நெரிசல் குறையும் என கூறியுள்ளார்.

error: Content is protected !!