India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி மாவட்டத்தில் இன்று (07.11.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர், உள்துறை செயலாளர், தொழிலாளர் ஆணையர், சென்னை மாநகராட்சி ஆணையர், என பல்வேறு பதவிகளை வகித்த ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரி கே. மலைச்சாமி நேற்று இயற்கை எய்தினார். இதையடுத்து, “அவரது மறைவு செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு இரங்கலை தெரிவிக்கிறேன்” என ஓ.பன்னீர் செல்வம் தனது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
திரையுலகின் முன்னணி நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனத் தலைவருமானகமல்ஹாசன் இன்று 70-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து,“அவர் நீண்ட ஆயுளோடு மென்மேலும் மக்கள் பணியாற்ற வேண்டும்; திரை உலகிலும் மேலும் பல சாதனைகள் படைக்க வேண்டும்” என தேனி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தேனிமாவட்டம் வைகை அணையின் இன்றைய நிலவரம். அணையின் மொத்த உயரம் 71 அடி; தற்போதைய நீர்மட்டம் 64.76 அடி; அணையின் மொத்த கொள்ளளவு 6091 மில்லியன் கன அடி; அணையின் தற்போதைய கொள்ளளவு 4579 மில்லியன் கன அடி; அணைக்கு நீர்வரத்து 1482 கன அடி; அணையிலிருந்து 1199 கன அடி நீரானது வெளியேற்றப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையளர்கள் மற்றும் கட்டுநர்கள் பணிக்கு நேரடி நியமனம் மூலம் பணியமர்த்தப்பட உள்ளது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இன்ற(நவ.7) மாலை 5.45 மணிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேனியில் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழில் பேசவும், எழுதவும் வேண்டும். *SHARE
ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் இன்று காலை நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 64.67 அடியாக உள்ளது. அணையில் இருந்து 1199 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு நீர் வரத்தாக 2072 கனஅடியாக உள்ளது.
தேனி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 24 – 25ம் ஆண்டிற்கு ஒருங்கிணைந்த கல்வியில் பயிலும் 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் வருகிற நவ.8 ஆம் தேதி ஆண்டிபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா தெரிவித்தார்.
தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையளர்கள் மற்றும் கட்டுநர்கள் பணிக்கு நேரடி நியமனம் மூலம் பணியமர்த்தப்பட உள்ளது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நாளை (நவ.7) மாலை 5.45 மணிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேனியில் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழில் பேசவும், எழுதவும் வேண்டும். *ஷேர்* SHARE
உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர்க் கூட்டம் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு முகாம் இம்மாதம் வரும் 9ம் தேதி நடத்தப்பட உள்ளது. சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர், கூட்டுறவு சார் பதிவாளர் மற்றும் நியாய விலைக்கடை நடத்தும் நிறுவன அலுவலர்களுக்கு மனு மூலம் தங்கள் குறைகளை மக்கள் தெரிவிக்கலாம். இம்முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு பொதுமக்களை கலெக்டர் ஷஜீவனா கேட்டுக் கொண்டுள்ளார்.
தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் அமைந்துள்ள கம்பம் வீரப்ப நாயக்கன்குளம், ஒட்டு உடப்படி குளங்கள், உத்தமபாளையம் தாமரைக்குளம், குப்பிசெட்டி குளம், சின்னமனூர் செங்குளம், உடப்படி குளம், கருங்கட்டான்குளம் உள்ளிட்ட குளங்கள் நிரம்பி வருகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.