India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேனி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் Social Worker பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். வேலை செய்யும் இடம் தேனி. விண்ணப்பிக்க கடைசி நாள் 10-04-2025. தகுதியான நபர்களுக்கு ரூ.18,536 வரை சம்பளம் கிடைக்கும். விண்ணப்பிக்<

தேனி, கம்பமெட்டு ரோட்டில் புதுக்குளம் செல்லும் பாதையில் தகர செட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக பறக்கும் படைக்கு தகவல் கிடைத்தது.துணை தாசில்தார் பரமசிவம் தலைமையிலான வருவாய்த் துறை அலுவலர்கள் அந்த இடத்தை சோதனை செய்தனர்.அங்கு 65 சிப்பங்களில் இருந்த 3.5 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

ஆண்டிபட்டி அருகே உள்ள வடக்கு மூனாண்டிபட்டியை சேர்ந்த 55 வயது கொண்ட பெண் ஒருவர் அவரது வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த பேயத்தேவர் என்பவரின் மகன் பெரிய கருப்பன்(23) என்பவர் திடீரென வீட்டிற்குள் நுழைந்து படுத்திருந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். பெண் கொடுத்த புகாரின் பேரில் ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீசார் பெரிய கருப்பனை கைது செய்தனர்.

தேனி மாவட்டம் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் காலியாக உள்ள 1 உறுப்பினர் பதவிக்கு பட்டப்படிப்பு படித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள்<

தேனி மாவட்ட அணைகளின் (ஏப்ரல் 07) நீர்மட்டம்: வைகை அணை: 56.69 (71) அடி, வரத்து: 504 க.அடி, திறப்பு: 72 க.அடி, பெரியாறு அணை: 113.70 (142) அடி, வரத்து: 493 க.அடி, திறப்பு: 105 க.அடி, மஞ்சளார் அணை: 33 (57) அடி, வரத்து: 115 க.அடி, திறப்பு: இல்லை, சோத்துப்பாறை அணை: 89.21 (126.28) அடி, வரத்து: 32.74 க.அடி, திறப்பு: 3 க.அடி, சண்முகா நதி அணை: 35.30 (52.55) அடி, வரத்து: 14 க.அடி, திறப்பு: இல்லை.

தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 20க்கும் மேற்பட்ட பேக்கிங் மேற்பார்வையாளர் பணிக்கு காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு ஏதாவது ஒர் பட்டப்படிப்பு படித்திருந்தாலே போதும். மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை.<

பெரியகுளம் அருகே வடுகபட்டி ஜெயந்தி காலனியைச் சேர்ந்தவர் அழகர்சாமி 80.இவர் குடும்பத்தை பிரிந்து பராரியாக சுற்றியுள்ளார்.கடந்த வாரம் உடல்நிலை சரியில்லாமல் பெரியகுளம் தனியார் விடுதியில் தங்கி இருந்தார். பாத்ரூமில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.-

தேனி மாவட்டத்தில் இன்று 06.04.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

தேனி மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரங்களை தினமும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மூலம் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இரவு நேரங்களில் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால், இதில் குறிப்பிட்டுள்ள எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தேனியில் முக்கிய இடம் என்றால் நிச்சயமாக நினைவில் வருவது போடி மெட்டு மலை பகுதி தான். இந்த இடம் தமிழ்நாடு- கேரளா எல்லை பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு நிலவும் குளிரான சூழலுக்காகவே தனி சுற்றலா பட்டாளம் இங்கு வருடம் முழுவதும் படையெடுத்து வருகின்றது. மேலும் இங்கு விளையும் காபி, டீ க்கு தனி மவுசு உள்ளது. நம்ம ஊரு பெருமையை நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.