India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
பாமக மகளிர் அணி சார்பில் சௌம்யா அன்புமணி தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று (ஜன.02) போராட்டம் நடைபெறுவதாக இருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவையும் மீறி காவல் துறையினர் மேற்படி போராட்டத்திற்கு தடை விதித்துள்ளதும், மீறி அறப் போராட்டத்தில் ஈடுபட்ட சௌம்யா அன்புமணி மற்றும் பாமக மகளிர் அணியினரை காவல் துறையினர் கைது செய்தது கண்டனத்துக்கு உரியது என போடி எம்எல்ஏ ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் முன்னாள் படை வீரர்கள் சார்ந்தோருக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பற்ற பதினாறு முதல் 36 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் வாயிலாக பயிற்சி வழங்கப்பட உள்ளது. முன்னாள் படை வீரர்கள் மகன் மற்றும் மகள் கல்விச் சான்றிதழ் ஆவணங்களுடன் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் விருப்பங்களை தெரிவிக்கலாம் என ஆட்சியர் தகவல்.
அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை தனியார் பங்களிப்புடன் நிறைவேற்றும் அளவுக்கு நிதி நிலைமையை சீரழித்துள்ள திமுக அரசுக்கு கடும் கண்டனம் என முன்னாள் முதல்வரும் போடி எம்எல்ஏ-வுமான ஓ.பன்னீர் செல்வம் இன்று (ஜன.02) தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். மேலும் இந்த விஷயத்தில் முதலமைச்சர் தனி கவனம் செலுத்தி உட்கட்டமைப்பு வசதிகளை அரசே போர்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்ட போதைப் பொருட்கள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசாரால் 2023ஆம் ஆண்டு 166 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 335 பேர். இதேபோல் 2024-ல் 233 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 533 பேர் என கடந்த 2 ஆண்டுகளில் 399 வழக்குகளில் 868 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 82 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது.
18 வயதுக்கு மேல் 60 வயதுக்கு உள் இருப்பவர் சீர் மரபினர் நல வாரியத்தில் நல திட்ட உதவிகள் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான சிறப்பு முகாம் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் மயிலாடும்பாறை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நாளை 03.01.2025 நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். தேவையுள்ளவர்கள் முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உத்தமபாளையம் அருகே கருக்கோடை பகுதியை சேர்ந்தவர் சுப்பம்மாள் (80). இவரது மகள் வழிப் பேரன் முத்துச்செல்வன் (26). இவர் மது போதையில் தினமும் பாட்டியுடன் தகராறு செய்வது வழக்கம். இந்நிலையில் நேற்று (டிச.1) வீட்டின் முன்பாக பாட்டியுடன் ஏற்பட்ட தகராறில் பேரன் பேவர் பிளாக் கல்லால் பாட்டியின் தலையில் அடித்துள்ளார். இதில் பாட்டி சம்பவயிடத்திலேயே உயிரிழந்தாா். கோம்பை போலீசார் முத்துச்செல்வனை கைது செய்தனர்.
தேனி மாவட்டத்தில் இன்று (ஜன.01) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
பெரியகுளம் அருகே உள்ள டி வாடிப்பட்டி பிரிவு பகுதியில் நேற்றிரவு G கல்லுப்பட்டி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் அவரது மகன் வீரமுத்துகருப்பையா இருவரும் இரு சக்கர வாகனத்தில் அப்பகுதியில் சென்றபோது எதிரில் வந்த பிக்கப் வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் கீழே விழுந்து பலத்த காயங்கள் ஏற்பட்டு தந்தை மகன் இருவரும் சம்பந்தப்பட்ட இடத்திலே உயிரிழந்தனர் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
தேனி மாவட்டத்தில் இன்று 31.12.2024 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.