India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மது விலக்கு என்று சொல்லிக் கொண்டு மது வளர்ப்பினை ஊக்குவிக்கும் தி.மு.க. அரசிற்கு என முன்னாள் முதல்வரும், தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர் செல்வம் தனது கண்டனத்தை இன்று தெரிவித்துள்ளார். மேலும் முதலமைச்சர் குடியை ஒழித்து கட்டுவதற்கு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேனி முன்னாள் எம்பியும், அமமுக பொதுச்செயலாளருமான டி.டி.வி.தினகரன், தமிழகத்தில் ‘ஸ்க்ரப் டைபஸ்’ தொற்று பரவி வரும் நிலையில் அதற்கான அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வரக்கூடிய நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கி அனைத்து விதமான அரசு மருத்துவமனைகளிலும் தனிப்பிரிவும், போதுமான மருத்துவர்களும் இருப்பதை சுகாதாரத்துறை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை மிஷன் வத்சால்யா திட்டத்தின் கீழ் தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாகவுள்ள கணக்காளர் பணியிடம் ஓராண்டு காலம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் முகவரிக்கு வருகின்ற ஜன.18-க்குள் அனுப்பி வைக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா அறிவுறுத்தியுள்ளார்
தேனி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தில் கறவை மாட்டு பண்ணையம், வெள்ளாடு வளா்ப்பு, நாட்டுக் கோழி வளா்ப்பு ஆகியவை குறித்து 15 நாள்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சிக் கட்டணமாக ரூ.3,000 செலுத்த வேண்டும். விருப்பமுள்ளவா்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களை விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 86674 28982 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
தேனி: குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை ஜன.9 முதல் வழங்கி ஜன.13-க்குள் முழுவதும் கொடுத்து முடிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது இதற்கான டோக்கன் வழங்கும் பணிகளில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். நேற்று (ஜன.3) ஒரே நாளில் 1 லட்சத்து 74 ஆயிரம் கார்டுதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது என வழங்கல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(03.01.2025) மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர்களுக்கான சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சமூக நல அலுவலர் சியாமளாதேவி, தனி துணை ஆட்சியர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட இராசிமலை பகுதியில் வருகின்ற ஜன.08 ஆம் தேதி மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பட்டா, அடிப்படை வசதிகள் கோரிக்கையில் அடங்கிய பல்வேறு மனுக்களை அளித்தே பயன்பெறுமாறு இன்று தேனி மாவட்ட ஆட்சி தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தெரிவித்துள்ளார். *ஷேர்*
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு காவடி தூக்குவதைவிட, போராடி உயிர்த்தியாகம் செய்வதே மேல் என்று தூக்கு கயிறையும் முத்தமிட்டு உயிர் தியாகம் செய்த பாஞ்சாலங்குறிச்சியின் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் பிறந்தநாளில் அவரை போற்றி வணங்குகிறேன் என தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ் செல்வன் புகழாரம் சூட்டியுள்ளார்.
தேனியில் சுமார் 425919அரசி அட்டை தாரர்களுக்கு இன்று முதல் பொங்கள் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. தைப் பொங்கலுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் சிறப்பு தொகுப்பு இந்தாண்டும் வழங்கப்படவுள்ளது. இதில் அரசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் இடம்பெறும். இதனை முறையாக விநியோகம் செய்ய ரேஷன் அதிகாரிகள் இன்று முதல் வீடு வீடாக வந்து டோக்கன் விநியோகம் செய்யவுள்ளனர்.
தேனியில் சுமார் 425919அரசி அட்டை தாரர்களுக்கு இன்று முதல் பொங்கள் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. தைப் பொங்கலுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் சிறப்பு தொகுப்பு இந்தாண்டும் வழங்கப்படவுள்ளது. இதில் அரசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் இடம்பெறும். இதனை முறையாக விநியோகம் செய்ய ரேஷன் அதிகாரிகள் இன்று முதல் வீடு வீடாக வந்து டோக்கன் விநியோகம் செய்யவுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.