India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக கேரள எல்லையில் உள்ள முல்லை பெரியாறு அணை, தமிழக நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ளது. பெரியாறு புலிகள் சரணாலய பகுதியில் அணை அமைந்துள்ளதால் முழு பாதுகாப்பு வளையத்திற்குள் உள்ளது. இந்நிலையில் நேற்று (ஜன.5) அணைக்கு மேல் தனியார் ஹெலிகாப்டர் ஒன்று பறந்தது. அணையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இது குறித்து போலீசார் மற்றும் வனத்துறையினர் தீவிர விசாரணை.
கண்டமனூர் போலீசார் நேற்று (ஜன.5) ஜி.உசிலம்பட்டி பகுதியில் உள்ள சுடுகாட்டில் ரோந்து பணி மேற்கொண்ட பொழுது அங்கு பால்பாண்டி, முருகன், ஈஸ்வரன், கோவலன், சக்கிவேல், புகழேந்திரன் ஆகிய 6 பேரும் சீட்டுக்கட்டுகள் வைத்தும், பணம் வைத்தும் சூதாடியது தெரியவந்தது. சீட்டுக்கட்டு மற்றும் ரூ.300 பணத்தை பறிமுதல் செய்த போலீசார் 6 பேரையும் கைது செய்தனர்.
தேனி அருகே சின்னஓவுலாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (ஜன.07) ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கன்னிசேர்வைபட்டி, இந்திராகாலணி, எரசக்கநாயக்கனூர், முத்துலாபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் சந்திரமோகன் நேற்று தெரிவித்துள்ளார்.
கூடலுார் பகுதியை சேர்ந்தவர் பொன்விஜய். இவரது மனைவி இலக்கியா. குடும்ப தகராறு காரணமாக கடந்த டிச.31 அன்று தூங்கி கொண்டிருந்த கணவர் மீது பெட்ரோல் ஊற்றி மனைவி தீ வைத்தார். இதில் கணவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரில் கூடலூர் வடக்கு போலீசார் இலக்கியாவை கைது செய்தனர். இந்நிலையில் நேற்று (ஜன.5) சிகிச்சை பலனின்றி பொன்விஜய் உயிரிழந்தார்.
தேனி மாவட்டத்தில் இன்று 05.01.2025 இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.
தேனி மழைச்சாரல், ஜெகதீஷ் பிராய்லர் மற்றும் நகை அடகு கடை சார்பில் இன்று தேனியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சோசியல் மீடியா பிரபலங்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழகத்தின் பகுதிகளை சேர்ந்த யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் கலந்து கொண்டனர். அவர்களில் சிறந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
தேனி மாவட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வந்த ஜெயபாரதி தற்போது திண்டுக்கல் மாவட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னையில் தமிழ்நாடு சர்க்கரை கழக பொது மேலாளராக பணியாற்றி வந்த மகாலட்சுமி தேனி மாவட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டு அரசு தலைமை செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.
தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. ஜனவரி 09 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை, குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் நியாய விலைக்கடைக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்று பயனடைமாறு இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் இன்று 04.01.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
பிரபல அணு விஞ்ஞானியும், இந்தியா நடத்திய அணு ஆயுத சோதனைகளில் மிக முக்கிய பங்கு வகித்தவருமான விஞ்ஞானி ராஜகோபால சிதம்பரம் அவர்கள் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது என தேனி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான டிடிவி தினகரன் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், அன்னாரின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற இறைவனை பிரார்த்திக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.