Theni

News February 12, 2025

தேனி:ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களுக்கு குறைதீர்க்கும் கூட்டம் 

image

தேனி மாவட்டம் தமிழ்நாடு அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற அரசு பணியாளர்கள் நிலுவையில் உள்ள ஓய்வூதியம் பலன்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவது தொடர்பாக குறைகளை பரிசை நிலை செய்து ஒரு டின் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் அனைத்து ஓய்வு பெற்ற அரசு அலுவலர் சங்க நிர்வாகிகள் அனைவரும் மார்ச்- 30  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது.

News February 12, 2025

தேனியில் போக்குவரத்து வழித்தடங்கள் மாற்றம்; அறிவிப்பு

image

தேனி-கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் இரயில்வே மேம்பாலப்பணிகள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி எதிர்வரும் பிப்-16  முதல் வழித்தடம் மாற்றப்படுகிறது.மதுரையிலிருந்து தேனி செல்லும் வாகனங்கள் அரசு தொழிற்பயிற்சி நிலையம் முதல் இரயில்வே கேட்வரை ஒருவழி பாதையில் செல்ல வேண்டும்.தேனியிலிருந்து மதுரை செல்லும் வாகனங்கள் தொழிற்பயிற்சி நிலையம் அருகில் திட்டசாலை வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளன.

News February 12, 2025

திருப்பரங்குன்றத்தில் ஆடு அறுப்பது வழக்கம்: தங்கதமிழ் செல்வன்

image

திருப்பரங்குன்றம் மலை குறித்து நான் பேசிய விவகாரத்தில் ஒரு சிலர் அரசியல் லாபத்திற்காக இப்பிரச்னையை பூதாகரமாக்கி வருகின்றனர். அங்குள்ள இஸ்லாமியர்கள் எனது பங்காளிகள். அங்கு முஸ்லிம்கள் ஆடு, கோழி அறுப்பது தொன்றுதொட்டு வரக்கூடிய ஒரு பழக்கம். இதை யாரும் மறுக்க முடியாது என்று தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ் செல்வன் தெரிவித்துள்ளார்.

News February 12, 2025

13 வயது சிறுமி திருமணமாகி கர்ப்பம் – 4 பேர் மீது வழக்கு

image

கடமலை, மயிலை BDO மலர்க்கொடிக்கு கிடைத்த தகவலின்படி சிறப்பாறை கிராமத்திற்கு சென்று விசாரித்தபோது, சந்திரசேகர் – சுவேதா தம்பதியரின் 13 வயது மகளுக்கு அதே ஊரைச் சேர்ந்த சடப்பாண்டி மகன் பிரவீன் குமாருடன் 7.11.24 அன்று குழந்தை திருமணம் நடைபெற்றது தெரிய வந்தது. தற்போது அக்குழந்தை 3 மாத கர்ப்பமாக உள்ளதால் 4 பேர் மீதும் BDO கொடுத்த புகாரின்பேரில் கடமலைக்குண்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News February 12, 2025

ஓபிஎஸ் பெயரில் இருந்த 41 சென்ட் பஞ்சமி நில பட்டா ரத்து!

image

தேனி அருகே அன்னஞ்சி விலக்கு பகுதியில் பட்டியலின மக்களுக்கு மட்டுமே உரிமை உள்ள பஞ்சமி நிலத்தை ஓபிஎஸ் வாங்கியுள்ளதை எஸ்சி, எஸ்டி ஆணையம் உறுதி செய்துள்ளது. அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி 41 சென்ட் பஞ்சமி நிலத்தை வாங்கி தன் பெயருக்கு பட்டா பெற்றதாக அறிவித்து, அந்நிலத்தின் பட்டாவை ரத்து செய்த ஆணையம் சம்பந்தப்பட்ட தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்கவும் நேற்று உத்தரவிட்டுள்ளது.

News February 12, 2025

தேனி மாவட்ட எல்லைகளில் வாகன எண் கண்காணிப்பு கேமரா!

image

தேனி மாவட்ட எல்லைகளில் உள்ள குமுளி, கம்பம்மெட்டு, போடிமெட்டு உள்ளிட்ட 7 காவல்துறை சோதனை சாவடிகளில் தானியங்கி வாகன எண் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா நேற்று(பிப்ரவரி 11) தெரிவித்துள்ளார். இந்த கண்காணிப்பு கேமராக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக கட்டுப்பாட்டு அறைகளுடன் இணைக்கப்பட்டு கண்காணிக்கப்படும் என்றார்.

News February 11, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 11.02.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News February 11, 2025

தேனி அருகே 100க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் சேதம்

image

ஆண்டிப்பட்டி தாலுகா கடமலைக்குண்டு சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக தென்னை தோப்புகளில் காட்டு யானைகள் அடிக்கடி புகுந்து மரங்களை அடியோடு சேதம் செய்து வருகிறது. தற்போது இன்று மேலப்பட்டி பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் புகுந்த காட்டுயானைகள் 100க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை நாசம் செய்துள்ளன.

News February 11, 2025

தேனி: அரசு பஸ்சிற்கு முட்டு கொடுக்க தேர் தடுப்பு கட்டை

image

லட்சுமிபுரம் அருகே நேற்று அதிகாலை சாலையில் நின்று கொண்டிருந்தவர் மீது அரசு டவுன் பஸ் பிரேக் பிடிக்காமல் மோதிய விபத்தில் ஒருவர் பலத்த காயமடைந்தார். பின் அவர் சிகிச்சைகாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர். விபத்துக்கு காரணமான அரசு பேருந்து நகராமல் இருக்க தேர் தடுப்பு கட்டையை கொண்டு முட்டு கொடுத்து நிறுத்தி உள்ளனர்.

News February 11, 2025

வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு

image

தேனி கலெக்டர் ஷஜீவனாவிடம் அகமலை, கரும்பாறை மலை கிராம மக்கள் நேற்று (பிப்.10) மனு வழங்கினர். அதில் தங்கள் கிராமங்களில் வசிக்கும் பழங்குடியினருக்கு நபாா்டு வங்கித் திட்டத்தின் கீழ் நீரோடையிலிருந்து குழாய் அமைத்து குடியிருப்புகளுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அக்குடிநீர் குழாய்களை வனத் துறையினா் வெட்டி சேதப்படுத்திய நிலையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

error: Content is protected !!