India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி மாவட்டத்தில் 1065 அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. இந்த மையங்கள் 9 வட்டாரங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த 9 வட்டாரத்திலும் தலா 100 கர்ப்பிணி பெண்களை தேர்வு செய்து அவர்களுக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் மூலம் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தலைமைச் செயலகத்திலிருந்து பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் தேனி மாவட்டம் வெள்ளையம்மாள்புரம் மற்றும் இராஜதானி அரசு கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் 3.11 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் மற்றும் அறிவியல் ஆய்வக கட்டடத்தினை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
“மீண்டும் மஞ்சப்பை” பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை சார்பில் மஞ்சப்பை விருதுகள் வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவத்தினை மாவட்ட ஆட்சியர் அலுவலக வலைதளத்திலும் (https://theni.nic.in), தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் வலைதளத்திலும் (tnpcb.gov.in) தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.
அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். தேனி மாவட்டத்தில் மட்டும் 25 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச்.3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். லிங்க் *ஷேர் பண்ணுங்க
மேலக்கூடலுாரை சேர்ந்த தமிழரசி என்பவர் தனது வீட்டருகே உள்ள சண்முகப்பிரியா, அவரது மகள்கள் மவுனிகா, அஜிதா, மகன் தீபக்ராஜ், அஜிதாவின் கணவர் கர்ணன் ஆகியோர் இணைந்து தீபாவளி சீட்டு நடத்தி, 40 பேரிடம், ரூ.23.14 லட்சம் மோசடி செய்ததாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் சண்முகப்பிரியா, மவுனிகா, அஜிதா, கர்ணன் ஆகியோரை போலீசார் நேற்று (பிப்.13) கைது செய்தனர்.
மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி காலிபணியிடங்கள் நிரப்பபடவுள்ளன. கணினி வழி தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.50,000 – ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும். 1 வருட பயிற்சிக்கு பின் ரூ.60,000 – ரூ.1,80,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும். விண்ணப்பிக்க கடைசிநாள் நாளை(பிப்.14). <<-1>>இங்கு க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கவும் *பிறரும் பயன் பெற ஷேர் செய்யுங்கள்
தேனி: அமைச்சர் சாத்துார் ராமசந்திரன் வருவாய்த்துறை சார்பில் நகர் பகுதிகளில் ஆட்சேபனை இல்லாத புறம்போக்கில் வசிக்கும் ஆக்கிரமிப்பாளர்கள் 86 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்க உள்ளதாக கூறியுள்ளார். இதற்காக தேனி மாவட்டத்தில் 5 தாலுகாக்களில் இருந்து 934 பேருக்கு பட்டா வழங்க வருவாய்த்துறை சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் பல்வேறு பஸ் ஸ்டாண்டுகள், கடைவீதிகளில் குழந்தைகளை வைத்தும், சில குழந்தைகளும் யாசகம் பெறுவது தொடர்கிறது. இவர்களை கண்டறிந்து பள்ளிக்கு அழைத்து செல்ல குழந்தைகள் நலத்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் குழந்தைகளை வைத்து யாசகம் பெறுதல், குழந்தைகள் எங்கேயும் துன்புறுத்தப்பட்டால் 1098 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் 5 காவல் உதவி ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து தேனி மாவட்ட எஸ்.பி சிவபிரசாத் நேற்று உத்தரவிட்டுள்ளார். தேனி மகளிா் காவல் நிலைய எஸ்.ஐ மகேஸ்வரி அல்லிநகரத்திற்கும், ராயப்பன்பட்டி எஸ்.ஐ அருண்பாண்டி பழனிசெட்டிபட்டிக்கும், கண்டமனூா் எஸ்.ஐ மலைச்சாமி தேனிக்கும், பழனிசெட்டிபட்டி எஸ்.ஐ மணிமாறன் தேவாரத்திற்கும், தேவாரம் எஸ்.ஐ தெய்வகண்ணன் பெரியகுளத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்டத்தில் இன்று 12.02.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.