India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேனியில் உள்ள பூ மார்க்கெட்டில் இன்று (புதன்) ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை யையொட்டி பூ மார்ககெட்டில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளன. மல்லிகை கிலோ ரூ.1000க்கும், கனகாம்பரம் கிலோ ரூ.950, முல்லை கிலோ ரூ.600 மற்றும் அனைத்து வகையான பூக்களும் விலையேற்றத்தில் உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

தேனி மக்களே உங்க VOTER ID-ல பழைய போட்டோ இருக்கா? அதை மாத்த வழி உண்டு.
இங்கு <
1. ஆதார் எண் (அ) VOTER ID எண் பதிவு பண்ணுங்க.
2. CORRECTIONS OFENTRIES ஆப்ஷன் – ஐ தேர்ந்தெடுங்க.
3.அதார் எண், முகவரி போன்ற உங்க விவரங்களை பதிவு பண்ணுங்க.
4.போட்டோ மாற்றம்
5. புது போட்டோவை பதிவிறக்கவும்
15 – 45 நாட்களில் உங்க புது போட்டோ மாறிடும்..இதை VOTER ID வச்சு இருக்கிறவங்களுக்கு SHARE பண்ணுங்க.

தேனி, பெரியகுளத்தில், ஹவாலா பணத்தை இரட்டிப்பு செய்வதாக கூறி, மும்பை காவலர் லட்சுமணனிடம் இருந்து பணத்தை பறித்துக்கொண்டு செந்தில் மற்றும் சேகர்பாபு ஆகியோர் தப்பி ஓடினர். இந்த மோசடியில் ஈடுபட்டதாக அஜித்குமார், முன்னாள் காவலர் நாகேந்திரன், ராம்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தப்பி ஓடிய இருவரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தேனி மக்களே, 17 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆதார் கட்டாய பயோ மெட்ரிக் புதுப்பிப்பிற்கும், இதர பயோமெட்ரிக் புதுப்பிற்கும் 125 ரூபாயும் , டெமோகிராபிக் புதுப்பிப்பிற்கு 75 ரூபாயும் 1.10.25 முதல் 30.9.28 வரை வசூலிக்கப்படும்.அதன் பின் 2031 செப்டம்பர் மாதம் முடிய புதுப்பிற்கு 150 ம், டெமாகிராபிக் புதுப்பிக்க 90 ரூபாயும் கட்டணம் நிர்ணயம் இன்று முதல் மாற்றம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஷேர்

தேனி மாவட்டத்தில் இன்று 30.09.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை உத்தமபாளையம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன் தலைமையில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

தேனி மாவட்டத்தில் தீபாவளியை முன்னிட்டு மைசூர்பா, பால்கோவா, பாதாம் பால் பவுடர், நெய், ஐஸ்கீரிம் உள்ளிட்டவை கூடுதலாக விற்பனை செய்யப்பட உள்ளது. இந்தாண்டு ரூ.1.30 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பண்டிகை கால விற்பனைக்காக கலெக்டர் அலுவலகம், தேனி பழைய பேருந்து நிலையம், பழனிசெட்டிபட்டியில் சிறப்பு விற்பனை ஸ்டால்கள் அமைக்கப்பட உள்ளது என தேனி மாவட்டம் ஆவின் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம், சாப்டூர் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (23). இவர் நேற்று முன்தினம் தேனியில் அவரது நண்பரின் விசேஷத்திற்கு சென்று விட்டு பைக்கில் வீடு திரும்பி உள்ளார். ஆண்டிபட்டி அருகே பைக் வந்து கொண்டிருந்த பொழுது எதிர் திசையில் சதீஷ்குமார் என்பவர் ஓட்டி வந்த கார் பைக் மீது மோதியது. இந்த விபத்தில் ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்கு (செப்.29) பதிவு

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள பொறியியல் காலியிடங்களுக்கு 474 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. CIVIL, MECH., EEE, ECE உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த B.E/B.Tech படித்தவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 21 வயது பூர்த்தி அடைந்தவர்கள் அக்.16க்குள் இங்கு <

தேனி, வீரபாண்டியை சேர்ந்தவர் பூவேந்திரராஜா. இவரது மனைவி இவர்களது 10 மாத குழந்தையை 2 தினங்களுக்கு முன்பு தோட்டத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு கீழே கிடந்த வெண்டைக்காய் பூவை குழந்தை முழுங்கிய நிலையில் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இது குறித்து வீரபாண்டி போலீசார் வழக்கு (செப்.29) பதிவு.

தேனி மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.