India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கூடலூரை சேர்ந்தவர் அருண்பாண்டி இவருக்கும் அதே பகுதி தென்னரசு என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த முன் விரோதம் காரணமாக நேற்று (அக்.1) இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனை மாரியப்பன் என்பவர் தடுத்த நிலையில் தென்னரசு மற்றும் அவரது தந்தை ராஜா ஆகியோர் அருவாள் கொண்டு மாரியப்பனை வெட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். கூடலூர் வடக்கு போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட தந்தை, மகனை கைது செய்தனர்.

தேனி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் பொருளாதாரத்தினை மேம்படுத்திடும் வகையில், பல்வேறு தொழில் தொடங்க நிதியுதவி வழங்கும் திட்டம் அறிமுகமாகி உள்ளது. இது சம்பந்தமாக விவரங்களுக்கு மாவட்ட மேலாளர், தாட்கோ, அறை எண்.73, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தேனி என்ற முகவரிக்கு நேரில் அல்லது 94450 29480 என்ற தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

தேனி மக்களே தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் அப்ரண்டீஸ் பயிற்சிக்கான 79 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிப்ளமோ, B.E படித்தவர்கள் இப்பணிக்கு அக். 16க்குள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ள<

தேனி நகர் பகுதியை சேர்ந்தவர் வீரமலை (33) பெயிண்டர் வேலை பார்த்து வரும் இவருக்கு அடிக்கடி நெஞ்சு வலி ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலைக்கு சென்ற இவர் உடல்நிலை சரி இல்லை என வீடு திரும்பி உள்ளார். அன்று இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அல்லிநகரம் போலீசார் வழக்கு (செப்.30) பதிவு.

தேனி மாவட்டத்தில் தேனி தீயணைப்பு நிலைய ஒருங்கிணைந்த கட்டிடம் கட்டுவதற்கு ரூ.2,51,47,000. சின்னமனுார் தீயணைப்பு நிலையம் கட்டுவதற்கு ரூ.2,42,91,000, மயிலாடும்பாறை தீயணைப்பு நிலையத்திற்கு ரூ.2,44,31,000 என 3 தீயணைப்பு நிலையங்கள் கட்டுவதற்கு மொத்தம் ரூ.7.38 கோடி நிதி அரசின் மூலம் ஒதுக்கப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா தேவாரம் அருகே லட்சுமி நாயக்கன்பட்டியில் அணைப்பட்டியை சேர்ந்த அர்ச்சுனன் என்பவர் டிராக்டரில் எம்சாண்ட் மணல் ஏற்றிக்கொண்டு வரும்போது, டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில், டிரைவர் அர்ஜுனன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தேவாரம் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 8,850 டிக்கெட் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், சீனியர் கிளர்க் உள்ளிட்ட நான்-டெக்னிக்கல் பாப்புலர் பதவிகளுக்கு (NTPC) விண்ணப்பிக்கலாம்.
1.சம்பளம்: ரூ.35,400 வரை
2.கல்வித் தகுதி: 12ம் வகுப்பு அல்லது ஏதேனும் ஓர் டிகிரி
3.விண்ணப்பம் தொடக்கம்: அக். 21, 2025 முதல்
4.விண்ணப்பிக்கும் முறை: இங்கு <
இந்தத் தகவலைப் பிறருக்கும் பகிரவும்!

தேனி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக பல்வேறு வகைகளில் மோசடிகள் நடைபெற்று வருகின்றது. எனவே யாரேனும் போனில் வங்கி கணக்கு விபரங்களை கேட்டால் தெரிவிக்க வேண்டாம். ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குவது, வர்த்தகத்தில் ஈடுபடுவது உள்ளிட்ட அனைத்திலும் விழிப்புடன் இருக்க வேண்டும். மேலும் போனுக்கு மெசேஜ் மூலம் வரும் தேவையற்ற லிங்க்களை திறக்கக்கூடாது என தேனி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட தமிழ்நாட்டை சேர்ந்த மூன்று பேர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். முதலில் தொட்டிக்குள் சிக்கிய தேனி மாவட்டம், கம்பத்தை சேர்ந்த ஜெயராமனை மீட்க முயன்றபோது, கூடலூரைச் சேர்ந்த சுந்தரபாண்டியன் மற்றும் மைக்கேல் ஆகியோரும் உயிரிழந்தனர். காவல் மற்றும் தீயணைப்பு துறையினர் மூவரின் உடலை பத்திரமாக மீட்டனர்.

தேனி: முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், முதியோா், மாற்றுத் திறனாளிகளுக்கு ரேசன் கடைகள் மூலம் வீடு தேடிச் சென்று குடிமைப் பொருள்கள் வழங்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, முதியோா், மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரா்களுக்கு ரேசன் கடைகள் மூலம் வருகிற அக்.5, 6-ம் தேதிகளில் வீடு தேடிச் சென்று குடிமைப் பொருள்கள் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.