India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேனி மக்களே உங்க பகுதியில் குடிநீர் சரிவர வரவில்லை, கலங்கலாக வருகிறது போன்ற பிரச்சனைகள் உள்ளதா? அதிகாரிகளிடம் சொல்லியும் நடவடிக்கை இல்லையா? தேனி மாவட்ட குடிநீர் வழங்கல் கட்டுபாட்டு அதிகாரியிடம் போனில் (0452-2580764) தெரிவிக்கலாம். உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும். உங்க பகுதி மக்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 04449076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். SHARE பண்ணுங்க

தேனி புதிய பஸ் ஸ்டாண்டில் ஆட்டோ நிறுவத்துவது தொடர்பாக நேற்று (அக்.4) இருதரப்பு இடையே மோதல் நிலவி வந்தது. இதனால் அப்பகுதி பரபரப்பு நிறைந்து காணப்பட்டது. இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த 2 தனியார் பஸ்கள் ஒன்றோடு ஒன்று உரசிக்கொண்டன. இதில் ஒரு பஸ்ஸின் பக்கவாட்டு ஜன்னல் கண்ணாடி உடைந்தது. உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விபத்தால் ஏற்பட்ட போக்குவரத்தை சரி செய்தனர்.

தேனி பகுதியை சேர்ந்தவர் மீனாதேவி. இவரது மகன் சுபாஷ் சங்கர் குடிக்கு அடிமையான நிலையில் அடிக்கடி குடிப்பதற்கு பணம் கேட்டு தாயுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். நேற்று முன்தினமும் குடிப்பதற்கு பணம் கேட்ட நிலையில் மீனாதேவி பணம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுபாஷ் சங்கர் தனது தாயை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரில் அல்லிநகரம் போலீசார் சுபாஷ் சங்கரை கைது (அக்.4) செய்தனர்.

தமிழக அரசின் NEEDS திட்டத்தின் கீழ் முதல்முறை தொழில் தொடங்குவோருக்கு ரூ.25 லட்சம் வரை மானியம் தரும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 21 வயது நிரம்பியவர்கள், குறைந்தபட்சம் 12th படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க, மேலும் தகவல் தெரிய இங்கு <

தேனி புது பஸ் ஸ்டாண்ட் அருகே ஆட்டோ ஸ்டான்ட் அமைந்துள்ளது. அங்கு ஆட்டோக்கள் நிறுத்துவது தொடர்பாக இருதரப்பு இடையே சில நாட்களாக தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று (அக்.4) இருதரப்பு இடையே மோதல் சூழல் உருவானது. இதனால் அங்கு 30.க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இப்பிரச்னை தொடர்பாக நாளை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேனி நகராட்சி 33 வார்டுகளில் தினமும் 33 முதல் 34 டன் வரை குப்பை சேகரமாகும். ஆயுத பூஜை, விஜயதசமி நாட்களில் கூடுதலாக தினமும் 6முதல் 10 டன் வரை குப்பை அதிகரித்தது. கடந்த 4 நாட்களில் மட்டும் 20 டன் அதிகரித்தது. அவை பணியாளர்கள் மூலம் அகற்றப்பட்டது. பொதுமக்கள் குப்பையை பொது இடங்களில் வீசுவதை தவிர்க்க வேண்டும் என சுகாதாரப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேனி மக்களே உங்க பகுதியில் குடிநீர் சரிவர வரவில்லை, கலங்கலாக வருகிறது போன்ற பிரச்சனைகள் உள்ளதா? அதிகாரிகளிடம் சொல்லியும் நடவடிக்கை இல்லையா? தேனி மாவட்ட குடிநீர் வழங்கல் கட்டுபாட்டு அதிகாரியிடம் போனில் (0452-2580764) தெரிவிக்கலாம். உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும். உங்க பகுதி மக்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

1.முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
3. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

தேனி அரசு மருத்துவ கல்லூரி வளாகத்திற்குள் செயல்பட்டு வரும் அம்மா உணவகம் அருகே நேற்று (அக்.3) 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடப்பதாக அப்பகுதி கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் க.விலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.