India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேனி, எரசக்கநாயக்கனுாரை சேர்ந்தவர் அழகர். இவருக்கு சொந்தமான எருமை மாடு நேற்று (அக்.5) மேய்ச்சலுக்கு சென்றது. அப்போது அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடை அருகே இருந்த இடத்தில் கிடந்த நாட்டு வெடிகுண்டை, தீவனம் என நினைத்த எருமை மாடு கடித்துள்ளது. வெடியை கடித்தவுடன் வெடித்ததால் எருமை மாட்டின் தாடைப் பகுதி கிழிந்து தொங்கியது. இது குறித்து சின்னமனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டத்தில் விதிமீறும் வாகனங்களை போக்குவரத்து போலீசார் பிடிக்கும் பொழுது அவற்றில் சிலர் வாக்கு வாதத்தில் ஈடுபடுவது, அரசியல் கட்சியினரை தெரியும் எனக் கூறி தகராறில் ஈடுபடுவது தொடர்கிறது. இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஏ.ஐ., கேமராக்கள் மூலம் விதிமீறும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க திட்டமிட்டு உள்ளதாகவும் அதற்கான கேமராக்கள் விரைவில் பொருத்தப்பட உள்ளன என மாவட்ட காவல் நிர்வாகம் தகவல்.

பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் மணிமாறன். இவர் நேற்று முன் தினம் 13 வயதுடைய இவரது அக்கா மகனை அழைத்துக்கொண்டு உசிலம்பட்டிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். ஆண்டிப்பட்டி பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது ராஜன் என்பவர் ஓட்டி வந்த கார் இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் சிறுவன் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு.

தேனியை சேர்ந்தவர் சுபாஷ் சங்கா். அவரது தாயை தாக்கிய வழக்கில் இவரை அல்லிநகரம் போலீசார் நேற்று முன் தினம் கைது செய்த நிலையில் அவரை நீதிமன்றக் காவலில் தேக்கம்பட்டி மாவட்ட சிறையில் அடைக்க போலீஸாா் அழைத்து சென்றனா். அப்போது சுபாஷ் சங்கா் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியதால் க.விலக்கு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றனா். அங்கிருந்து அவர் போலீசாரை ஏமாற்றிவிட்டு தப்பினார்.

தேனி மக்களே, உங்க ஆண்டு வருமானம் 10 லட்சம் கீழ் இருந்தும் கேஸ் மானியம் வரலையா? எப்படி விண்ணபிக்கன்னும் தெரியலையா? முதலில் Aadhaar எண்ணை உங்கள் பேங்க் கணக்கு மற்றும் கேஸ் கணக்குடன் இணைக்க வேண்டும். இங்கு <

குன்னூர் பகுதியை சேர்ந்தவர் மலா் (60). இவர் நேற்று முன்தினம் தேனி- மதுரை நெடுஞ்சாலையை நடந்து சென்று கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக அனந்து (25) என்பவா் ஓட்டிச்சென்ற ஜீப் அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மலா் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். விபத்து குறித்து க.விலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

பெரியாறு அணை நீர் வரத்து காரணமாக வைகை அணை நீர்மட்டம் ஆக.14 ல் 69.88 அடி வரை உயர்ந்தது. செப்.18 முதல் வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு நீர் வெளியேற்றம் செய்யபட்டு வருகின்றது. நீர் வரத்தை விட அணையில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று அணை நீர்மட்டம் 63.81 அடியாக குறைந்து காணபட்டது. இதனால் விவசாயிகள் கவலை.

தேனி மக்களே RTE 2025 – 2026 இன்று முதல் தொடங்க உள்ளதாக பள்ளிக்கல்வி துறை அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. LKG முதல் 8ம் வகுப்பு வரை உங்க குழந்தைகள் தனியார் பள்ளியில் கல்வி கட்டணம் இல்லாமல் படிக்கலாம். விண்ணப்பிக்க இங்கு <

தேனி விஸ்வதாஸ் நகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் முத்தையா (48) மகன் முத்துப்பாண்டியுடன் தகராறு செய்த உறவினர் நவீன்குமாரை முத்தையா தட்டிக் கேட்டார். இதில் ஆத்திரமடைந்த நவீன்குமார், முத்தையாவின் கழுத்தில் கத்தியால் குத்தினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த முத்தையா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். தப்பியோடிய நவீன்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை.

டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறையில் உதவியாளர் பணி நியமனத்திற்கான இணையவழி கலந்தாய்வு இன்று (அக்.06) காலை 10 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெறுகிறது. தேனி மாவட்ட தேர்வர்கள், தங்களின் தேர்வாணைய கடிதம், அசல் மற்றும் நகல் கல்வி சான்றுகளுடன் கலந்துகொள்ளலாம். SHARE
Sorry, no posts matched your criteria.