Theni

News October 10, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று (09.10.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News October 9, 2025

தேனி அரசு தொழிற்பயிற்சி வளாகத்தில் முகாம்

image

தேனி மாவட்டம் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் அக்டோபர் 13ஆம் தேதி தேனி அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெற உள்ளதாக தேனி மாவட்ட ஆட்சி தலைவர் ரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார். இதில் அரசு மற்றும் தனியார் என 18 நிறுவனங்கள் கலந்து கொண்டு தொழிற்பழகுநர் பயிற்சிக்கு 400க்கு மேற்பட்ட இடங்களை நிரப்ப உள்ளனர். இதனால் மாணவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம் என தெரிவித்துள்ளனர்.

News October 9, 2025

தேனி: அரசு பேருந்து மோதி ஒருவர் பலி

image

கம்பம் அருகே அனைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முத்தையா (52). இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த முத்தையா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். விபத்து குறித்து ராயப்பன்பட்டி போலீசார் நேற்று (அக்.8) வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 9, 2025

தேனி: 10th போதும்; ரூ.35,000 சம்பளத்தில் அரசு வேலை.!

image

தமிழக மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரகத்தின் கீழ் Block Coordinator, Case Manager மற்றும் Security, Office Helper போன்ற பல்வேறு பணியிடங்களுக்கு 1096 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு சம்பளமாக ரூ.20,000 முதல் ரூ.35,000 வரை வழங்கப்படுகிறது. 10th முதல் டிகிரி வரை படித்தவர்கள், கல்வித்தகுதிக்கேற்ப இங்கே<> கிளிக் <<>>செய்து 14.10.2025 க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

News October 9, 2025

தேனி: கல்விக்கடன் குறித்து ஆட்சியர் புதிய அறிவிப்பு.!

image

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அமைந்துள்ள மோி மாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாளை 10.10.2025 வெள்ளிக்கிழமை மாபெரும் கல்வி கடன் முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார். இந்த முகாமில் மாணவ மாணவிகள் தகுந்த ஆவணங்களை கொண்டு கலந்து கொண்டு பயனடையலாம் என தெரிவித்துள்ளார்.

News October 9, 2025

தேனி: அரசு அலுவலக அலைச்சல் இல்லை; இனி டிஜிட்டல் மயம்.!

image

தேனி மக்களே, பான்கார்டு, வாக்காளர் அட்டை, லைசன்ஸ், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASY யாக விண்ணபிக்கலாம்.

1.பான்கார்டு: <>கிளிக்<<>>

2.வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in

3.ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/

4.பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink

இந்த இணையதளங்களுக்கு சென்று விண்ணப்பியுங்க.. SHARE பண்ணுங்க!

News October 9, 2025

தேனி: கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை.!

image

ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்த கல்லுாரி மாணவியிடம் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஜோஸ் மரியராகுல் (28) என்பவர், இன்ஸ்டாகிராம் செயலி மூலம் பழகி, காதலித்து வந்த நிலையில் அவர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை பலமுறை பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். தற்போது ஜோஸ் மரியராகுல் திருமணம் செய்ய மறுத்த நிலையில், அவர் மற்றும் அவரது பெற்றோர்கள் மீது ஆண்டிபட்டி மகளிர் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News October 9, 2025

தேனியில் 15 மையங்களில் ஆசிரியர் தகுதி தேர்வு

image

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான ஆசிரியர்கள் தகுதித் தேர்வு அக்.12 அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்வு 14 பாடங்களில் தேர்வு நடக்கிறது. தேனி மாவட்டத்தில் 15 மையங்களில், காலை 10:00 முதல் மதியம் 1:30 மணி வரை இத்தேர்வு நடைபெறவுள்ளது. தேர்வு எழுத 4,242 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 9, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று (08.10.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News October 8, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று (08.10.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!