Theni

News February 25, 2025

தேனி மாவட்டதில் 5 ஆண்டுகளில் 330 பேர் பலி

image

தேனி மாவட்டத்தில் 33 இடங்கள் விபத்து பகுதியாக கண்டறியப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் 2019 முதல் 2024 வரை 950 விபத்துகள் நடந்துள்ளன. இந்த விபத்துகளில் 330 பேர் இறந்துள்ளனர். இது தவிர பிற பகுதிகளில் நடக்கும் விபத்துகளில் ஆண்டுதோறும் 100 பேர் வரை உயிரிழக்கின்றனர். விபத்து பகுதிகளில் விபத்துகளை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 25, 2025

தேனி மாவட்டத்தில் 18 இடங்களில் முதல்வர் மருந்தகம் திறப்பு

image

தேனி மாவட்டத்தில் 18 இடங்களில் முதல்வர் மருந்தகம் திறப்பு. பிடி. ராஜன் தெரு, அல்லிநகரம் சமதா்மபுரம், கொடுவிலாா்பட்டி, பழனிசெட்டிபட்டி, போடியில் பெரியகுளம் வட்டாரத்தில் ஜெயமங்கலம், வடுகபட்டி, தேவதானப்பட்டி, ஆண்டிபட்டி வட்டாரத்தில் ஜக்கம்பட்டி, கண்டமனூர், கோவில்பட்டி, உத்தமபாளையம் வட்டாரத்தில் கம்பம், கம்பம்மெட்டு சாலை, கூடலூா், மேலக்கூடலூா் உள்ளிட்ட இடங்களில் முதல்வர் மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. 

News February 24, 2025

தேனியில்  தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

image

தேனி மாவட்ட நிர்வாகம், தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும்  தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் பெரியகுளம் மேரிமாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் 01.03.2025 சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளது என  மாவட்ட ஆட்சி தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்து உள்ளார். 

News February 24, 2025

தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

image

தேனி மாவட்ட அணைகளின் (பிப்.24) நீர்மட்டம்: வைகை அணை: 62.01 (71) அடி, வரத்து: 79 க.அடி, திறப்பு: 69 க.அடி, பெரியாறு அணை: 116.20 (142) அடி, வரத்து: 61 க.அடி, திறப்பு: 356 க.அடி, மஞ்சளார் அணை: 37.65 (57) அடி, வரத்து: 6 க.அடி, திறப்பு: 65 க.அடி, சோத்துப்பாறை அணை: 79.70 (126.28) அடி, வரத்து: இல்லை, திறப்பு: 25 க.அடி, சண்முகா நதி அணை: 26.25 (52.55) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை.

News February 24, 2025

தபால் ஆபிசில் வேலை: உடனே அப்ளை பண்ணுங்க

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். தேனியில் மட்டும் 25 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் <>இங்கு <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

News February 24, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 23.02.2025 இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News February 23, 2025

திராட்சைக்கு உரிய விலை-கலெக்டர் தகவல்

image

திராட்சைக்கு உரிய விலை உள்ளூர் திராட்சை கொள்முதல்,விலையேற்றம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் அச்சப்பட வேண்டாம். உள்ளூர் திராட்சை விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகள்.வியாபாரிகள் கலந்துரையாடல் கூட்டம் நடத்தப்படும் என்று ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் தெரிவித்தார்.

News February 23, 2025

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மாவோயிஸ்ட் அதிரடி கைது

image

தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பன்னாபுரம் கார்த்திக். இவர், இந்தியாவில் தடைசெய்யப்பட்ட சிபிஐ (மாவோயிஸ்ட்) இயக்கத்தில் இணைந்து 2011ம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்து வந்தார். தமிழ்நாட்டில் பல குற்ற வழக்குகளிலும் ஈடுபட்டுள்ளார். சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதற்காக இவர் மீது கொச்சி தேசிய புலனாய்வு முகமையில் (NIA) வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரை இன்று தமிழ்நாடு க்யூ பிரிவினர் கைது செய்துள்ளனர்.

News February 23, 2025

வேலை வாங்கி தருவதாக ரூ.39.40 லட்சம் மோசடி

image

ஆண்டிபட்டியை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் தனது மனைவி மற்றும் தேனி மாவட்டத்தை சேர்ந்த பலரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி தன்யா, கருணாநிதி, விஜயலட்சுமி, பாஸ்கரன் ஆகியோர் மொத்தம் ரூ.39.40 லட்சம் மோசடி செய்ததாக தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நீதிமன்ற உத்தரவில் தேனி மாவட்ட குற்ற பிரிவு போலீசார் மோசடியில் ஈடுபட்ட 4 பேர் மீதும் நேற்று (பிப்.22) வழக்கு பதிவு செய்து விசாரணை.

News February 22, 2025

விவசாயிகளே லாபம் பெற அறிய வாய்ப்பு…

image

தேனி மாவட்டம் காமாட்சிபுரத்தில் அமைந்துள்ள சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் தோட்டக்கலைப் பயிர்கள், மலைப் பயிர்கள் மேலாண்மை முறைகள் பற்றிய சிறப்பு ஒரு நாள் இலவச பயிற்சி (பிப்.28) அன்று காலை 09.30 மணி அளவில் நடைபெறவுள்ளது. வல்லுனர்கள் பங்குபெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விருப்பமுள்ள விவசாயிகள் ,தொழில்முனைவோர் 9444781202 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.

error: Content is protected !!