India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒர வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக ஏப்.3,4,5 அன்று விருதுநகர், தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் SOCIAL WORKER பணியிடத்திற்கு 1 காலிபணியிடம் உள்ளது. இதற்கு கல்வி தகுதி பிஏ படித்திருக்க வேண்டும். மாதம் ரூ.18,536 ஊதியம் வழங்கப்படும். <
தேனி-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் உப்பார்பட்டியில் இயங்கும் டோல்கேட்டில் 2025 முதல் 2026-க்கான உயர்த்தப்பட்ட டோல் கட்டணங்கள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. மேலும் வணிக பயன்பாடு அல்லாத உள்ளூர் வாகனங்களுக்கு 2025-2026-க்கு விதிக்கப்படும் மாதாந்திர ரூ.350 கட்டணத்திற்கான பாஸ் பெற விரும்புவோர், டோல்கேட் நிர்வாகத்தை அணுகி பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் 31.03.2025 10 மணி- 6 மணி இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரங்களை தினமும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மூலம் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இரவு நேரங்களில் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் இதில் குறிப்பிட்டுள்ள எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து 8 கீ.மீ தொலைவில் உள்ளது சுருளிமலை கோடி லிங்கேஷ்வர் ஆலயம். இந்தக் கோயிலில் ஆயிரக்காணக்கான லிங்கங்கள் உள்ளது. இந்த லிங்கங்கள் அனைத்தும் பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறியதும் பிரதிஷ்டை செய்யப்பட்டவை ஆகும். இங்கு வழிபட்டால் கடன் பிரச்சனை நீங்கும் என்பது ஐதீகம். கடன் பிரச்சனையில் இருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பகுதியில் முனியாண்டி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலின் அருகே உள்ள கிணற்றில் 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் ஒருவரின் உடல் மிதந்தது. அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேனி மாவட்டத்தில் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் இன்றைக்குள் (மார்ச்.31) பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும். ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். ரேஷன் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் பகிரவும்.
தேனி எம்.பி தங்கதமிழ்ச் செல்வன் நிகழ்ச்சி ஒன்றில் கூறியதாவது, வைகை அணையைத் தூர்வார ரூ.450 கோடி முதல் ரூ.500 கோடி செலவாகும் என அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த செலவில் தூர் வாருவதற்குப் பதில் அருகில் புதிய அணை கட்டலாம் எனவும் கூறுகின்றனர். கூடுதல் நீர்தேக்கும் வகையில் நீர் தேக்கப்பகுதிக்கு அருகில் புதிய அணை கட்ட தயாராகி வருகிறது என்றார்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 2, 3 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கோவை, தென்காசி, தேனி உட்பட 5 மாவட்டங்களில் ஏப்ரல் 2 ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும், ஏப்ரல் 3 ஆம் தேதி தேனி மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தேனி- பெரியகுளம் செல்லும் சாலையில் அமைந்துள்ள கிருஷ்ணம்மாள் நினைவு மருத்துவமனை வளாகத்தில் உள்ள சுதா கருத்தரித்தல் மையத்தில் 31.03.2025 அன்று இலவச குழந்தையின்மைக்கான மருத்துவ பரிசோதனை மற்றும் சிறப்பு ஆலோசனை முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 7670076006 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயனடையலாம்.
Sorry, no posts matched your criteria.