India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி மாவட்டத்தில் இன்று 09.03.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
“எண்டே ஆண்கள்” என்கிற மலையாள நூலை “எனது ஆண்கள்” என்ற தலைப்பில் தமிழில் மொழி பெயர்த்ததற்காக சாகித்ய அகாடமி விருதினை உலக மகளிர் தினத்தில் பெற்றுள்ள திருநெல்வேலியைச் சேர்ந்த தமிழ்ப் பேராசிரியை விமலாவுக்கு எனது நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள். இது போன்று பல நாவல்களை தமிழில் மொழி பெயர்த்து தமிழ் மொழியின் பெருமையை உலகறியச் செய்யவும் வாழ்த்துக்கள்” என தேனி மாவட்டம் போடி எம்எல்ஏ ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
தேனி அருகே உள்ள கனரா வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் இலவச தேன் உற்பத்தி பயிற்சி நாளை 10.03.2025 முதல் நடைபெற உள்ளது. இந்த வகுப்பில் சேர விரும்பும் உள்ளவர்கள் கலந்து கொண்டு பயனடையலாம் என பயிற்சி வகுப்பு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தொடர்புக்கு இந்த 9500314193, 9043651202, 04546-251578 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இந்த வகுப்பிற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும்.
தேனி மாவட்டத்தில் உள்ள தேனி மாவட்ட நீதிமன்றம், பெரியகுளம் நீதிமன்றம் , உத்தமபாளையம் நீதிமன்றம், போடி நீதிமன்றம் மற்றும் ஆண்டிபட்டி நீதிமன்றங்களில் நேற்று (மார்ச் .8) லோக் அதாலத் நிகழ்வு நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் மொத்தம் 1021 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு அத்தகைய வழக்குகள் மூலம் ரூ.64,06,39,366-க்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக நீதித்துறை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்ட இளைஞர்கள், தொழில் முனைவோர்கள் PMEGP திட்டத்தின் கீழ் மானியத்தில் கடனுதவி பெறலாம். உற்பத்தி நிறுவனங்கள் துவங்க ரூபாய் 25 இலட்சமும், சேவை நிறுவனங்கள் துவங்க ரூ.10.00 இலட்சமும் வங்கிக் கடன் பெறலாம். 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த திட்டத்தில் விண்ணப்பம் செய்ய <
தேனி நகராட்சியில் இதுவரை நேரடியாக பணம் செலுத்தவும், காசோலை, டிமாண்ட் டிராப்ட் மூலமும் வரி செலுத்தும் நடைமுறை இருந்தது. தற்போது டிஜிட்டல் நடைமுறை ஏற்கப்பட்டுள்ளதால் நகராட்சியில் உள்ள கியூ ஆர்.கோடு மூலம் கூகுள்பே, பே டிஎம்., போன்பே உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட பரிவர்த்தனை செயலிகள் மூலம் தொழில்வரி, சொத்துவரி, குடிநீர் கட்டணம் உட்பட இதர வரியினங்களை செலுத்தலாம் என நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 35 வயது நபர் தேனி கலெக்டர் அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். pcபட்டி பகுதியில் உல்லாசமாக இருக்க பெண்கள் இருக்கிறார்களா என அந்தபகுதியில் உள்ள 4 பேரிடம் கேட்டிருக்கிறார். அந்த நபர்கள் தனியாக கூட்டிச் சென்று கழுத்தில் அணிந்து இருந்த தங்க சங்கிலி, ரூ.1,40,000 பணம் , செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டதுடன், மிரட்டிவிடடு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
தேனி மாவட்டத்தில் இன்று 08.03.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், உலக மகளிர் தினம் இன்று (மார்ச்.8) சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் பேசிய முதல்வர் தேனி, காஞ்சிபுரம், ஈரோடு, தருமபுரி, சிவகங்கை, கடலூர், நாகை, ராணிப்பேட்டை, கரூர் ஆகிய ஊர்களில் ரூ.72 கோடியில், 700 படுக்கைகளுடன் புதிய தோழி விடுதிகள் அமைய உள்ளது. 24 மணிநேரமும் பாதுகாவலர், பயோமெட்ரிக் நுழைவு முறையில் அமைய உள்ளதாக தெரிவித்தார். SHARE IT
வைகை ஆறு உற்பத்தியாகும் வெள்ளிமலை வனப்பகுதியில் கடந்த சில மாதங்களாக மழை இல்லை. அதனால் ஆற்றில் நீர்வரத்து குறைந்து வருகிறது. தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் அடுத்த சில நாட்களில் ஆறு வறண்டு விடும் நிலை உள்ளது. இதனால் கோடை காலத்தில் கடமலை – மயிலை ஒன்றிய கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.