India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனியில் முக்கிய இடம் என்றால் நிச்சயமாக நினைவில் வருவது போடி மெட்டு மலை பகுதி தான். இந்த இடம் தமிழ்நாடு- கேரளா எல்லை பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு நிலவும் குளிரான சூழலுக்காகவே தனி சுற்றலா பட்டாளம் இங்கு வருடம் முழுவதும் படையெடுத்து வருகின்றது. மேலும் இங்கு விளையும் காபி, டீ க்கு தனி மவுசு உள்ளது. நம்ம ஊரு பெருமையை நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க
தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 25 க்கும் மேற்பட்ட பேக்கிங் மேற்பார்வையாளர் காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு எதேனும் ஒர் பட்டப்படிப்பு படித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம். முன் அனுபவம் தேவை இல்லை. மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்படும். <
தேனி அல்லிநகரம் பாண்டி முனி கோயில் அருகே உள்ள சதீஷ் என்பவர் வீட்டில் ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் பிரம்ம கமலம் செடியில் பூக்கள் மலர்ந்துள்ளன. பிரம்ம கமலம் செடியில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கள் மலரும். இந்தக் கோடை காலத்திலும் அவரது வீட்டில் பிரம்ம கமலம் மலர்ந்துள்ளது. இச்சம்பவம் எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு முறை இதே செடியில் பூ மலர்ந்தது.
கம்பம் பகுதியில் நேற்று மாலை சுமார் 3 மணிநேரத்திற்கும் மேலாக இடைவிடாத மழை கொட்டித் தீர்த்தது. இதனால் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர் கம்பம் ஆதிசக்தி விநாயகர் கோவில் தெருவுக்குள் சூழ்ந்தது. இதையடுத்து அப்பகுதியில் இருந்த அடுத்தடுத்த 5 வீடுகள் இடிந்து தரைமட்டமானது. அப்போது வீட்டிற்குள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.தெரிந்தவர்களுக்கு SHARE செய்து பாதுகாப்பாக இருக்க சொல்லுங்க.
தேனி மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரங்களை தினமும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மூலம் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இரவு நேரங்களில் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால், இதில் குறிப்பிட்டுள்ள எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
தேனி அரசு மருத்துவமனைக்கு கடந்த வாரம் வட வீரநாயக்கன்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஜக்கம்மாள் (50) மூச்சுத் திணறல் மற்றும் இருமல் காரணமாக புற நோயாளியாக நுரையீரல் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் கட்டி போன்று இருப்பதை ஆப்பரேஷன் செய்ததில் ஆச்சரியப்படும் விதமாக அது சப்போட்டா பழத்தின் விதை என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 வருடங்களாக இருந்த விதை மருத்துவர்களால் அகற்றப்பட்டது.
தேனி மாவட்ட புவியியல், சுரங்கத்துறை சார்பில் 2024 முதல் www.mimastn.gov.in என்ற இணையத்தளம் மூலம் குவாரியில் இருந்து எடுத்து செல்லும் கனிமங்களுக்கு மொத்த அனுமதிக்கான சீட்டு வழங்கப்படும் நடைமுறை உள்ளது. எம்.சாண்ட், ஜல்லி போன்ற கனிமங்கள் ஏற்றிச் செல்லும் போது புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகத்தில் இருந்து உரியநடைச்சீட்டு பெற்று கொண்டுசெல்ல வேண்டும் என்பது கட்டாயம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 25க்கும் மேற்பட்ட மின் தொழில்நுட்பாளர் (Electrical Technician) காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு பெறியியல் (EEE) படித்த 18 வயது முதல் 40 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.15 ஆயிரம் வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. இங்கு கிளிக் செய்து 01-05-2025க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் செய்யுங்கள்
பெரியகுளம் பகுதியை சேர்ந்த சிபிராஜா என்பவரை பெரியகுளம் போலீசார் கடந்த 2022-ம் ஆண்டு 7-ம் வகுப்பு படித்து வந்த மாணவியை பின் தொடர்ந்து சென்று கேலி செய்த வழக்கில் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிபிராஜாவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து நேற்று (ஏப்.4) நீதிபதி பி.கணேசன் உத்தரவிட்டார்.
தேனி மாவட்டத்தில் இன்று 04.04.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.