Theni

News March 3, 2025

அஞ்சல் துறையில் விண்ணப்பிக்க இன்றே கடைசி

image

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 2,292 காலிப் பணியிடங்கள் உள்ளன. தேனி மாவட்டத்திற்கு 25 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க இன்றே (மார்ச்.03) கடைசி நாள். இந்த லிங்கை <>கிளிக் <<>>செய்து உடனே விண்ணப்பியுங்கள். தபால் வேலையில் சேர விரும்பும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்யுங்க.

News March 2, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று (02.03.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News March 2, 2025

ஓபிஎஸ் ஊருக்குள் கால் வைக்கும் எடப்பாடி

image

தேனி: இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதை அடுத்து மீண்டும் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கிறார். இன்று நடைபெற இருக்கும் இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி என்ன பேசப் போகிறார் என்பது ஆர்வமாக உள்ளது

News March 2, 2025

டிராக்டர் ஓட்டும் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் டிராக்டர் ஓட்டும் பயிற்சி மதுரையில் வழங்கப்படுகிறது. 22 நாள் நடைபெறும் இப்பயிற்சியில் 25 பேர் கலந்து கொள்ளலாம். இதில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 – 45 வயதிற்குள் இருப்பவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 94436 77046, 99443 44066 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

News March 2, 2025

தேனி மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு தெரியுமா?

image

தேனி மாவட்டதில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு (மார்ச். 02) ஆண்டிப்பட்டி 5.2 மி.மீ, அரண்மனைப்புதூர் 1.6 மி.மீ, வீரபாண்டி 2.8 மி.மீ, பெரியகுளம் 0 மி.மீ, சோத்துப்பாறை 1.0 மி.மீ, வைகை அணை 3.4 மி.மீ, போடிநாயக்கனூர் 1.2 மி.மீ, உத்தமபாளையம் 5.8 மி.மீ, கூடலூர் 3.8 மி.மீ, பெரியாறு அணை 0.6 மி.மீ, தேக்கடி 0.4 மி.மீ, சண்முகா நதி 14.6 மி.மீ. சராசரி மழை அளவு 3.10 மி.மீ. அளவு பெய்துள்ளது.

News March 2, 2025

தேனியில் நாளை தொடங்கும் பொதுத்தேர்வு

image

தமிழகம் முழுவதும் நாளை முதல் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. தேனி மாவட்டத்தில் மட்டும் 13,365 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். 141 பள்ளிகளைச் சேர்ந்த 6271 மாணவர்கள், 6791 மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். தனித்தேர்வர்கள் 303 பேரும் தேர்வு எழுது கின்றனர். தேர்வு நேரங்களில் திடீர் சோதனை மேற்கொள்ள 7 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. 140 ஆசிரியர்கள் சோதனை பணியில் ஈடுபட உள்ளனர்.

News March 2, 2025

திருக்காளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை கோவிலில் கொடியேற்றம்

image

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் பழைமையான திருக்காளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு, நேற்று (மார்.1) கோவில் கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து வேதமந்திரங்கள் முழங்க சிவாசாரியர்கள் கொடியேற்றி விழாவை தொடங்கி வைத்தனர். கோவில் விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் வருகிற 11-ம் தேதியும் , தேரோட்டம் 12-ம் தேதியும்‌ நடைபெறவுள்ளது.

News March 2, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 01.03.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News March 1, 2025

ஒரு நாள் சுற்றுலா செல்ல சிறந்த இடம் குரங்கனி

image

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே மேற்கு தொடா்ச்சி மலையில் அமைந்துள்ள ரம்மியமான இடம் தான் குரங்கனி. கொட்டக்குடி மலை வாழ்குடிகள், கொட்டக்குடி ஆறுகள், மலைப் பண்ணைத் தோட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு காட்சிகளை இங்கு காணலாம். ஒரு நாள் விடுமுறையை கொண்டாட உகந்த இடம் குரங்கனி

News March 1, 2025

நில அளவைக்கு இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்

image

தேனி மாவட்டத்தை சேர்ந்த நில உரிமையாளர்கள் தங்களது நிலத்தை அளவை செய்ய சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்துக்கு நேரில் சென்று விண்ணப்பிக்காமல், இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பித்த பிறகு நில அளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கு கைப்பேசியில் குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும். இந்த சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு.

error: Content is protected !!