India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று(அக்.13) விருதுநகர், மதுரை, தேனி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த ஒரு வாரம் தமிழ்நாட்டில் கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தீபாவளியன்று கனமழை இருக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. SHARE IT

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க eportal.incometax.gov.in என்ற இணையத்தளத்திற்கு சென்று உங்கள் ஆதார் & பான் கார்டினை மிக எளிதாக இணைத்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

அல்லிநகரம் பகுதியை சேர்ந்தவர் அழகுராஜா. இவரது மனைவி ரம்யா. இவர்களது 11 மாத குழந்தை யஷ்வந்தன் நேற்று (அக்.12) மாலை வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்துள்ளார். குழந்தையை பெற்றோர் மீட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அல்லிநகரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி அல்லிநகரம் – வீரப்ப அய்யனார் மலைக்கோயில் செல்லும் சாலையில் மந்தைகுளம் கண்மாய் அமைந்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அக்.22 க்குள் அகற்றுமாறு 96 பேருக்கு நீர்வளத்துறையினர் நோட்டீஸ் வழங்கி உள்ளனர். அகற்றவில்லை எனில் துறை மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றி அதற்கான தொகை ஆக்கிரமிப்பாளர்களிடம் வசூலிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

கடமலைக்குண்டு போலீசார் குற்ற தடுப்பு சம்பந்தமாக நேற்று (அக்.11) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள பஜார் அருகே சகோதரர்களான சிவ கணேஷ், சிவகுமார் ஆகியோர் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு செய்து பொதுமக்களை ஆபாசமாக பேசி உள்ளனர். போலீசார் எச்சரித்தும் அவர்கள் கேட்காத நிலையில் இருவர் மீதும் வழக்கு செய்து அவர்களை கைது செய்தனர்.

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள பொறியியல் காலியிடங்களுக்கு 474 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. CIVIL, MECH., EEE, ECE உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த B.E/B.Tech படித்தவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 21 வயது பூர்த்தி அடைந்தவர்கள் அக்.16க்குள் <

தேனி மக்களே, கனரா வங்கி (Canara Bank) 3500 அப்ரண்டிஸ் (Graduate Apprentices) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.15,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <

தேனி மாவட்டத்தில் 20 மையங்களில் +1 மாணவர்களுக்கான தமிழ் திறனறித் தேர்வு நேற்று (அக்.11) நடைபெற்றது. இந்த தேர்வு எழுத அரசு, உதவி பெறும், தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 5157 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 4912 பேர் தேர்வு எழுதினர். 245 மாணவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை. இத்தேர்வில் தகுதி பெறும் மாணவர்களுக்கு ஆண்டிற்கு 10,000 வீதம் 2 ஆண்டுகளுக்கு 20,000 வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தகவல்.

தேனி மக்களே; உங்களது 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது
<

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, சுற்றுலா பயணிகள் அருவிக்குச் செல்வதற்கு வனத் துறையினா் சனிக்கிழமை தடை விதித்தனா்.
கொடைக்கானல் மலைப் பகுதியில் கடந்த சில நாள்களாக மழை பெய்ததால், கும்பக்கரை அருவியில் நீா்வரத்து அதிகரித்தது. அருவியில் குளிக்க தடை விதித்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்.
Sorry, no posts matched your criteria.