India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

போடி பகுதியை சேர்ந்தவர் முருகம்மாள் (45). இவா் போடி பேருந்து நிலையத்திற்குள் நடந்து சென்றுள்ளாா். அப்போது போடி பேருந்து நிலையத்திலிருந்து மூணாறு சென்ற அரசு பேருந்து இவர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் முருகம்மாள் பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து போடி நகர் போலீஸார் பேருந்து ஓட்டுனர் ராஜாராம் (51) மீது வழக்கு (அக்.15) பதிவு.

அனைத்து பகுதிகளிலும் தீபாவளி பண்டிகை விரைவில் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் மாவட்டத்தில் உள்ள இனிப்பு தயாரிப்பு கடைகளில் இனிப்புகளை தரமாகவும், சுத்தமாகவும் தயாரிக்க மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் இதில் ஏதேனும் புகார் இருந்தால் 9444042322 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டத்தில் இன்று 15.10.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை தேனி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பெரியசாமி தலைமையில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

ஓடைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். இவர் அப்பகுதியில் உள்ள சகோதரரின் தோட்டத்தை வீட்டில் தங்கி இருந்து தோட்டத்தை கவனித்து வந்துள்ளார். நேற்று (அக்.14) காலை வேலை விஷயமாக வெளியே சென்று விட்டு சிறிது நேரம் கழித்து மீண்டும் தோட்டத்து வீட்டிற்கு வந்து பார்த்தபொழுது வீட்டில் வைக்கப்பட்டிருந்த டிவி திருடப்பட்டு தெரிய வந்தது. திருட்டு சம்பவம் குறித்து ஓடைப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

தேனி மாவட்டம் கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் வரும் 22.10.2025 தேதி முதல் பெண்களுக்கான இலவச அழகுக்கலை பயிற்சி நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் 22.10.2025 தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என பயிற்சி மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவலுக்கு இந்த 8870376796 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

சின்னமனூர் பகுதியை சேர்ந்தவர் ராம்குமார்(32). இவரது மனைவி சங்கீதா (30). அதே பகுதியை சேர்ந்த விஸ்வா என்பவருக்கும் ராம்குமாருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. அதன் காரணமாக நேற்று முன்தினம் விஸ்வா மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து ராம்குமாரை தாக்கி உள்ளனர். அதனை தடுக்க சென்ற சங்கீதாவையும் அந்த கும்பல் தாக்கியது. இது குறித்து சின்னமனூர் போலீசார் விஸ்வா உள்ளிட்ட 11 பேர் மீது வழக்கு (அக்.14) பதிவு

இந்திய தபால் துறையின் கீழ் இயங்கும் IPPB-ல் GDS பணிக்கு 348 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் அக். 29க்குள் <

சின்னமனுாரை சேர்ந்தவர் தக்ஷனாஸ்ரீ (16). இவருக்கு உடல்நிலை குறைபாடு ஏற்பட்ட நிலையில் அவர் போலிக் ஆசிட் சத்து மாத்திரைகளை விளையாட்டாக சாப்பிட்டுள்ளார். இதனால் அவருக்கு தீராத வயிற்று போக்கு ஏற்பட்டது. அக்.12 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உடல்நிலை பாதிப்புடன் சத்துமாத்திரை சாப்பிட்டதால் மூளைப்பாதிப்பும் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்ந்ததாக டாக்டர் தெரிவித்தனர்.

தேனியில் வடகிழக்கு பருவ மழை தொடங்கவுள்ளதால் ஆறுகள், ஓடைகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. மழை வெள்ள பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி எண்: 04546-261093.ல் தொடா்பு கொண்டும், 9487771077 எண்ணில் வாட்ஸ் ஆப் மூலம் தொடா்பு கொண்டும் தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தகவல்.மற்றவர்களுக்கும் தெரிய SHARE பண்ணுங்க.

தேனி மாவட்டத்தில் இன்று 14.10.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை தேனி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தேவராஜ் தலைமையில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.