India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி மாவட்ட அணைகளின் (மார்ச். 6) நீர்மட்டம்: வைகை அணை: 60.53 (71) அடி, வரத்து: 165 க.அடி, திறப்பு: 272 க.அடி, பெரியாறு அணை: 115.10 (142) அடி, வரத்து: 304 க.அடி, திறப்பு: 400 க.அடி, மஞ்சளார் அணை: 34.15 (57) அடி, வரத்து: 2 க.அடி, திறப்பு: 45 க.அடி, சோத்துப்பாறை அணை: 72.32 (126.28) அடி, வரத்து: இல்லை, திறப்பு: 3 க.அடி, சண்முகா நதி அணை: 28.80 (52.55) அடி, வரத்து: 08 க.அடி, திறப்பு: இல்லை.
தேனி மாவட்டத்தில் 141 பள்ளிகளில் பிளஸ்1 படிக்கும் 6,283 மாணவர்கள், 6,851 மாணவிகள் என மொத்தம் 13,134 பேரும் , தனித்தேர்வர்கள் 130, கடந்தாண்டு தமிழ் தேர்வில் தேர்ச்சி பெறாத பிளஸ் 2 மாணவர்கள் 198 பேர் என மொத்தம் 13,462 பேருக்கு தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மாவட்டத்தில் நேற்று (மார்.5) 54 மையங்களில் நடைபெற்ற பிளஸ்1 தேர்வில் 13,176 பேர் தேர்வு எழுதினர். 286 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.
தேனி சிவலிங்கநாயக்கன்பட்டியைச் சோ்ந்த பெருமாள் மகன் செல்வலிங்கம் (32). இவா், திண்டுக்கல் வேளாண்மைப் பொறியியல் துறையில் உதவி பொறியாளராகப் பணியாற்றி வந்தாா். இவா் திண்டுக்கல்லிலிருந்து சிவலிங்கநாயக்கன்பட்டி நோக்கி டூ வீலரில் சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த வேன், இவரது டூ வீலர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த செல்வலிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தேவதானப்பட்டி போலீஸாா் விசாரனை.
முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து தொழிற்கல்வி பயில்வதற்காக நிதி உதவி வழங்கும் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ஏழை மாணவ, மாணவிகளுக்கு அவர்கள் படிப்பினைத் தொடர ரூ.50 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு அந்தந்த தாலுகாவுக்கு உட்பட்ட தாசில்தாரை அணுகி உரிய படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும். உங்களுக்கு தெரிந்த மாணவருக்கு SHARE செய்து உதவவும்.
தேனி சிவலிங்கநாயக்கன்பட்டியைச் சோ்ந்த பெருமாள் மகன் செல்வலிங்கம் (32). இவா், திண்டுக்கல் வேளாண்மைப் பொறியியல் துறையில் உதவி பொறியாளராகப் பணியாற்றி வந்தாா். இவா் திண்டுக்கல்லிலிருந்து சிவலிங்கநாயக்கன்பட்டி நோக்கி டூ வீலரில் சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த வேன், இவரது டூ வீலர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த செல்வலிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தேவதானப்பட்டி போலீஸாா் விசாரனை.
பாறைதோடு பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் விஜயலெட்சுமி 29, குடும்ப சுகாதார மையத்தில் பணியாற்றினார். கர்ப்பிணியான விஜயலெட்சுமியை பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். நேற்று முன்தினம் அறுவை சிகிச்சை மூலம் நடந்த பிரசவத்தில் குழந்தை இறந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் விஜயலெட்சுமி உடல் நிலை திடீரென பாதிக்கப்பட்டது.அவரை, தேனி மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியில் இறந்தார்.
தேனி மாவட்டம் கூடலூரில் அமைந்துள்ளது ஸ்ரீகாளியம்மன் கோவில் .பெரும்பாலும் உருவ வடிவில் இருக்கும் அம்மன் இந்த கோவிலில் திரிசூல வடிவிலேயே உள்ளார். மிகுந்த வரப்பிரசித்தி கொண்ட அம்மனாக நம்பப்படுவதால் அப்பகுதியில் வசிக்கும் மக்களின் விருப்ப தெய்வமாக உள்ளது .இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டால் திருமணத் தடை நீங்கும் என்பது ஐதீகம் .
தேனி மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, போடி பகுதிகளில் அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு சிக்னல் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக குறைந்த மாத சந்தாவில் எச்.டி., எஸ்.டி., தரத்திற்கு செட்டப்பாக்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு 86374 23750 எண்ணில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம். தேவையான பொதுமக்கள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி, சீனி, பாமாயில், கோதுமை உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரேஷன் அட்டை தாரர்கள் தங்களது ரேஷன் கடைகளுக்கு சென்று கைரேகை பதிவு செய்ய வேண்டும் எனவும் மாவட்டத்திற்கு வெளியே வசிப்பவர்கள் அருகே உள்ள ரேஷன் கடைகளில் இ-கே.ஒய்.சி மூலம் கைரேகையை மார்ச்.15க்குள் பதிவு செய்து கொள்ளுமாறு கலெக்டர் ரஞ்ஜீத் சிங் அறிவுறுத்தி உள்ளார். *மறக்காம ஷேர் பண்ணுங்க
தேனி, தென்னிந்தியாவின் 2வது மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு காரணம், பருத்தி வர்த்தகம், தொழில்துறையின் வளர்ச்சியே ஆகும். தேனியில் மிகவும் மென்மையான, சிறந்த தரமான பருத்தி பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தேனியின் பருத்திகள் கோயம்புத்தூரில் தயாரிக்கப்படும் பருத்தி பொருட்களுக்கு போட்டியாக இருக்கும்.*உங்கள் ஊரின் பெருமையை பிறக்கும் ஷேர் செய்யுங்கள்
Sorry, no posts matched your criteria.