India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி மாவட்ட இளைஞர்கள், தொழில் முனைவோர்கள் PMEGP திட்டத்தின் கீழ் மானியத்தில் கடனுதவி பெறலாம். உற்பத்தி நிறுவனங்கள் துவங்க ரூபாய் 25 இலட்சமும், சேவை நிறுவனங்கள் துவங்க ரூ.10.00 இலட்சமும் வங்கிக் கடன் பெறலாம். 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த திட்டத்தில் விண்ணப்பம் செய்ய <
தேனி நகராட்சியில் இதுவரை நேரடியாக பணம் செலுத்தவும், காசோலை, டிமாண்ட் டிராப்ட் மூலமும் வரி செலுத்தும் நடைமுறை இருந்தது. தற்போது டிஜிட்டல் நடைமுறை ஏற்கப்பட்டுள்ளதால் நகராட்சியில் உள்ள கியூ ஆர்.கோடு மூலம் கூகுள்பே, பே டிஎம்., போன்பே உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட பரிவர்த்தனை செயலிகள் மூலம் தொழில்வரி, சொத்துவரி, குடிநீர் கட்டணம் உட்பட இதர வரியினங்களை செலுத்தலாம் என நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 35 வயது நபர் தேனி கலெக்டர் அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். pcபட்டி பகுதியில் உல்லாசமாக இருக்க பெண்கள் இருக்கிறார்களா என அந்தபகுதியில் உள்ள 4 பேரிடம் கேட்டிருக்கிறார். அந்த நபர்கள் தனியாக கூட்டிச் சென்று கழுத்தில் அணிந்து இருந்த தங்க சங்கிலி, ரூ.1,40,000 பணம் , செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டதுடன், மிரட்டிவிடடு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
தேனி மாவட்டத்தில் இன்று 08.03.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், உலக மகளிர் தினம் இன்று (மார்ச்.8) சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் பேசிய முதல்வர் தேனி, காஞ்சிபுரம், ஈரோடு, தருமபுரி, சிவகங்கை, கடலூர், நாகை, ராணிப்பேட்டை, கரூர் ஆகிய ஊர்களில் ரூ.72 கோடியில், 700 படுக்கைகளுடன் புதிய தோழி விடுதிகள் அமைய உள்ளது. 24 மணிநேரமும் பாதுகாவலர், பயோமெட்ரிக் நுழைவு முறையில் அமைய உள்ளதாக தெரிவித்தார். SHARE IT
வைகை ஆறு உற்பத்தியாகும் வெள்ளிமலை வனப்பகுதியில் கடந்த சில மாதங்களாக மழை இல்லை. அதனால் ஆற்றில் நீர்வரத்து குறைந்து வருகிறது. தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் அடுத்த சில நாட்களில் ஆறு வறண்டு விடும் நிலை உள்ளது. இதனால் கோடை காலத்தில் கடமலை – மயிலை ஒன்றிய கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
தேனி கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் மார்ச் 24ம் தேதி முதல் நடைபெற உள்ள இரு சக்கர வாகனங்கள் பழுது பார்த்தல் பயிற்சியில் தேனி மாவட்டத்தை சேர்ந்த 18 வயது முடிந்து 45 வயதிற்குள் உள்ள கிராமப்புற ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என வகுப்பு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தகவல் பெற இந்த 04546-251578 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
தேனியில் இன்று மார்ச்.8ம் தேதி ரேஷன் கார்டுகள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், திருத்தம், விலாசம் மாற்றம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம். உணவு சப்ளை மற்றும் நுகர்பொருள் பாதுகாப்பு உதவி ஆணையர் அலுவலகங்களில் இந்த குறை தீர்க்கும் முகாம் நடைபெறும். இந்த முகாமை பயன்படுத்தி பயன்பெற்று, பிறருக்கும் *ஷேர் செய்து உதவினால் பயனுள்ளதாக இருக்கும்.
தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் விபத்து காப்பீடு திட்டம் சிறப்பு முகாம் மார்ச் 10 முதல் 29 வரை நடைபெறவுள்ளது. ரூ.559க்கு ரூ.10 லட்சம் காப்பீடு, ரூ.799க்கு ரூ.15 லட்சம் காப்பீடு திட்டங்களில் இணையலாம். மேலும் விபரங்களுக்கு இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியை 04546 -260501 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தேனி கோட்ட தபால்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் இன்று 07.03.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.