India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்படுகிறது. இவ்விருது, ரூ.1,00,000/- ரொக்கம், பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவைகளை உள்ளடக்கியதாகும். 2025ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது எதிர்வரும் 15.08.2025 அன்று நடைபெறும் சுதந்திர தினத்தன்று முதல்வரால் பரிசு வழங்கப்படும் என்றார்.
பெரியகுளம் அருகே வடுகபட்டியை சேர்ந்தவர் சுந்தரம் 57. இவரது மனைவி தோட்டத்திற்கு சென்றிருந்த நிலையில், சுந்தரம் கடைக்கு செல்வதற்கு வீட்டின் வெளியே பூட்டிவிட்டு, சாவியை முன்பக்க குளியலறையில் வைத்து விட்டு சென்றார். ஒரு மணி நேரத்திற்கு பிறகு சுந்தரம் வீட்டிற்கு வந்தார். வீட்டின் முன் பக்கம் கதவு திறக்கப்பட்டு, பீரோவிலிருந்த ரூ.7 லட்சம் மதிப்பிலான 12 பவுன் தங்கநகைகள் திருடுபோனது. தென்கரை எஸ்.ஐ. விசாரணை
தேனியில் உள்ள மாவட்ட பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 106 சமையல் உதவியாளர் பணியிடங்களில் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளன. தேர்வான ஓராண்டுக்கு தொகுப்பூதியமும், அதன் பின்பு சிறப்பு காலமுறை ஊதியமும் வழங்கப்படும். 10-ம் வகுப்பு தோல்வி, தேர்ச்சி பெற்ற 18- 40 வயதுள்ளவர்கள் வரும் ஏப். 29க்குள் சம்பந்தப்பட்ட ஒன்றியம், நகராட்சி, அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.*SHARE பண்ணவும்
தேனியை சேர்ந்தவர் நரேந்திர பிரசாத் 28. டாக்டரான இவர் சென்னையில் பணி செய்கிறார். இவரிடம் முகநுாலில் ஈரோட்டை சேர்ந்த நந்தினி என்பர் பழகினர். பின்பு இருவரும் திருமணமும் செய்து கொண்டனர். நந்தினி சமூக வலைதளங்களில் பல ஆண்களுடன் பேசினார். இதனை தட்டி கேட்ட நரேந்திர பிரசாத்தை கொலை செய்துவிடுவேன் என மிரட்டினார். மேலும் ரூ.9.69 லட்சம் வரை மிரட்டி வாங்கியுள்ளா். நந்தினி உட்பட 4 பேர் மீது வழக்கு
தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் 106 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி/தோல்வியடைந்த 21 வயது முதல் 40 வயது வரை உள்ள பெண்கள் மட்டும் <
தேனி அரசு ஐ.டி.ஐ.யில் ஏப்ரல்15 அன்று அப்ரண்டிஸ் பயிற்சிக்கு சேர்க்கை முகாம் நடைபெறவுள்ளது. இதில் அரசு, தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இம்முகாமில் 8,10ம் வகுப்பு, +2 கல்வித்தகுதி, ஐ.டி.ஐ.களில் படித்து தேர்ச்சி பெற்ற, தேர்ச்சியடையாதவர்கள், அதற்கு மேல் படித்தவர்கள் பங்கேற்கலாம். 6 மாதம் அடிப்படை பயிற்சி, ஓராண்டு அப்ரண்டிஸ் பயிற்சி பெற்று சான்றிதழ் பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
போடி சுப்பிரமணியர்சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் நேற்று (ஏப்.10) நடைபெற்றது. இந்த திருக்கல்யாண வைபவத்தில் அபிஷேகத்திற்கு வைக்கப்பட்ட ஒரு தேங்காய் ஏலம் விடப்பட்டது. அந்த தேங்காயை போடி குலாலர் பாளையத்தை சேர்ந்த பழனியாண்டவர் என்பவர் ரூ.52 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்தார்.
போடி சுப்பிரமணியர்சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் நேற்று (ஏப்.10) நடைபெற்றது. இந்த திருக்கல்யாண வைபவத்தில் அபிஷேகத்திற்கு வைக்கப்பட்ட ஒரு தேங்காய் ஏலம் விடப்பட்டது. அந்த தேங்காயை போடி குலாலர் பாளையத்தை சேர்ந்த பழனியாண்டவர் என்பவர் ரூ.52 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்தார்.
தேனி மாவட்ட அணைகளின் (ஏப்ரல் 11) நீர்மட்டம்: வைகை அணை: 56.96 (71) அடி, வரத்து: 111 க.அடி, திறப்பு: 72 க.அடி, பெரியாறு அணை: 113.90 (142) அடி, வரத்து: 105 க.அடி, திறப்பு: 105 க.அடி, மஞ்சளார் அணை: 34.40 (57) அடி, வரத்து: 25 க.அடி, திறப்பு: இல்லை, சோத்துப்பாறை அணை: 91.51 (126.28) அடி, வரத்து: இல்லை, திறப்பு: 3 க.அடி, சண்முகா நதி அணை: 37.10 (52.55) அடி, வரத்து: 10 க.அடி, திறப்பு: இல்லை.
தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் ரேஷன் அட்டை திருத்த முகாம் நாளை (ஏப்ரல் 12) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. ரேஷன் கார்டில் பெயர் நீக்கம், திருத்தம், சேர்த்தல், முகவரி மாற்றம், மொபைல் நம்பர் அப்டேட் போன்ற அப்டேட்களைச் இலவசமாக செய்து கொள்ளலாம் கட்டணம் இல்லை. ரேஷன் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் SHARE செய்து உதவவும்.
Sorry, no posts matched your criteria.