India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேனி அநேக இடங்களில் அடைமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் உங்கள் பகுதியில் மழையால் ஏற்படும் பாதிப்புகளான, வெள்ளம், மின்தடை மற்றும் அத்தியாவசியத் தேவைகள் குறித்து தகவல் தெரிவிக்க இந்த எண்ணை Save பண்ணிக்கோங்க மாநில உதவி எண் – 1070, மாவட்ட உதவி எண்- 1077, அவசர மருத்துவ உதவி – 104 என்ற எண்கள் மழைக்காலங்களில் தேவைப்படலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

வடகிழக்கு பருவமழை தற்போது துவங்கிய நிலையில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் மற்றும் சுற்று பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை தேனி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத் நேரில் சென்று ஆய்வு செய்து பார்வையிட்டார். இதனை தொடர்ந்து அங்குள்ள மக்களை சந்தித்து வெள்ள பாதிப்புகளை குறித்து கேட்டறிந்தார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அமைந்துள்ள BSNL அலுவலகத்தில் 1 ரூபாய்க்கு 30 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்புகள், 2ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் உடன் கூடிய இலவச சிம் கார்டை பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம் என பிஎஸ்என்எல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த சலுகை 15.11.2025 வரை மட்டுமே செல்லும் எனவும் தெரிவித்துள்ளது.

மன்னார் வளைகுடா மற்றும் அதைன ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், விருதுநகர், உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. குறிப்பாக தேனியில் நாளை (அக்.20) தீபாவளியன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறியுள்ளது. இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.

தீபாவளி பண்டிகை நாளைய தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் மாவட்டத்தில் உள்ள இனிப்பு தயாரிப்பு கடைகளில் இனிப்புகளை தரமாகவும், சுத்தமாகவும் தயாரிக்க மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் இதில் ஏதேனும் புகார் இருந்தால் 9444042322 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார். இந்த பயனுள்ள தகவலை ஷேர் செய்யுங்க.

அனைத்து பகுதிகளிலும் நாளை தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்ட உள்ளது. இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் குறைந்த ஒலி கொண்ட பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும், சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளையும் அரசு வகுத்துள்ள நேரத்தில் மட்டுமே வெடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.

தேனி இளைஞர்களே, தமிழக அரசு, ஐடி துறையில் இளைஞர்களுக்கு எளிதில் வேலைகிடைக்கும் வண்ணம் அதற்கான பயிற்சிகளை இலவசமாகவும் வழங்கி வருகிறது. இதில் JAVA, C++, J2EE, Web Designing, coding, Testing என பல்வேறு Courseகள் உள்ளன. இங்கே <

வீரபாண்டி அருகே உள்ள தப்புக்குண்டு பகுதியை சேர்ந்தவர் கருப்பையா (70) ஓட்டலில் காவலாளியாக பணிபுரிந்த இவர் நேற்று (அக்.18) மாலை பணி முடித்து டூவீலரில் வீடு திரும்பினார். போடி விலக்கு அருகே சென்ற போது கம்பத்தில் இருந்து தேனி வழியாக திண்டுக்கல் சென்ற அரசு பேருந்து மோதியதில் கருப்பையா சம்பவ இடத்தில் பலியானார். விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

பெரியகுளம் வடகரை பகுதியை சேர்ந்தவர் ஜெகதீசன் (48). இவர் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து டூவீலரில் வீடு திரும்பினார். பெரியகுளம் தேனி சாலை டி.வி.எஸ்., ஷோரூம் அருகே வந்த போது அதி வேகமாக ஜெரோம் என்பவர் ஓட்டி வந்த டூவீலர், ஜெகதீசன் டூவீலர் மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஜெகதீசன் பலியானார். விபத்து குறித்து தென்கரை போலீசார் வழக்கு (அக்.18) பதிவு செய்து விசாரணை

தேனி மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.
Sorry, no posts matched your criteria.