Theni

News April 20, 2025

தேனி : இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்

image

தேனி அருகே உள்ள கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் இலவச சோலார் பேனல் பொருத்துதல் மற்றும் பழுது நீக்குதல் தொழில் முனைவோர் பயிற்சி  21.04.2025 நாளை முதல் நடைபெற உள்ளது. 18 வயது பூர்த்தி செய்த கிராமப்புற நபர்கள்  இதில் கலந்து கொண்டு பயனடையலாம். மேலும் தகவலுக்கு 9442758363 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும் .

News April 20, 2025

தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விபரம்

image

தேனி மாவட்ட அணைகளின் (ஏப்ரல் 20) நீர்மட்டம்: வைகை அணை: 56.23 (71) அடி, வரத்து: 41 க.அடி, திறப்பு: 72 க.அடி, பெரியாறு அணை: 113.90 (142) அடி, வரத்து: 101 க.அடி, திறப்பு: 105 க.அடி, மஞ்சளார் அணை: 34.50 (57) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை, சோத்துப்பாறை அணை: 99.87 (126.28) அடி, வரத்து: 9.94 க.அடி, திறப்பு: 3 க.அடி, சண்முகா நதி அணை: 39.20 (52.55) அடி, வரத்து: 3 க.அடி, திறப்பு: இல்லை.

News April 20, 2025

தேனி உழவர் சந்தையில் காய்கறி விலை விபரம்

image

தேனி உழவர் சந்தையில் (ஏப்ரல் 20) கத்தரி ரூ.20/18, தக்காளி ரூ.17-14, வெண்டை ரூ.18, கொத்தவரை ரூ.16, சுரை ரூ.08, இஞ்சி ரூ.32, பாகல் ரூ.32, பீர்க்கை ரூ.35, பூசணி ரூ.14/10, மிளகாய் ரூ.30/20, அவரை ரூ.75-45, உருளை ரூ.28, கருணை ரூ.80, சேனை ரூ.58/55, உள்ளி ரூ.35/30, பல்லாரி ரூ.24, பீட்ரூட் ரூ.16, நூல்கோல் ரூ.28, பீன்ஸ் ரூ.44/40, கோஸ் ரூ.16, கேரட் ரூ.25/15, சவ்சவ் ரூ.12 க்கு விற்கப்படுகிறது.

News April 20, 2025

தேனி: அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை

image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியது. தேனி மாவட்டத்தை உள்ளடக்கிய மதுரை பணிமனையில் 190 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். இதற்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி. <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

News April 19, 2025

மலர் கண்காட்சியை கண்டுகளித்த மாற்றுத்திறனாளிகள்

image

கேரளா மாநிலம் தேக்கடியில் நடைபெற்ற மலர் கண்காட்சியை, கம்பம் தேனீக்கள்  மாற்றுத்திறனாளிகள் அமைப்பு, ஜெயம் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் மலர் கண்காட்சியை நேரில் சென்று பார்வையிட்டு மகிழ்ந்தனர். இதில் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News April 19, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 19.04.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News April 19, 2025

காணொலி காட்சி மூலம் பார்வையிட்ட ஆட்சியர்

image

தமிழ்நாடு முதலமைச்சர் இன்று (19.04.2025) காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் சார்பில், கலைஞர் கைவினைத் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வினை, காணொளிக்காட்சி வாயிலாக, தேனி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் மற்றும் கைவினைஞர்கள் உள்ளிட்ட பலர் பார்வையிட்டனர்.

News April 19, 2025

தேனி மாவட்டத்தில் 106 சத்துணவு உதவியாளர் காலி பணியிடங்கள்

image

தேனி மாவட்டத்தில் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 106 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளது. வட்டாரம் வாரியாக நேரடி நியமனம் செய்யப்படவுள்ள சமையல் உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை அந்தந்த வட்டார அலுவலகங்களில் இனசுழற்சி வாரியாக தெரிந்து கொள்ளலாம். ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கு 26.04.2025 கடைசி நாள் ஆகும்.

News April 19, 2025

வெயிலில் இருந்து கறவை மாடுகளை பாதுகாக்க ஆலோசனை

image

தேனி மாவட்டத்தில் கறவை மாடுகள் வளர்ப்பு அதிகம் காணப்படுகிறது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில், கறவை மாடுகள் மற்றும் காளைகளை வெயிலில் கட்டி வைக்கக்கூடாது. உலர்ந்த தீவனங்கள், குச்சி புண்ணாக்கு, தாது உப்புக்கள் ஆகியவை தேவையான அளவில் உணவாக தர வேண்டும். குளிர்ச்சியான இடத்தில் கால்நடைகளை கட்டி வைக்க வேண்டும் என கால்நடை துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

News April 19, 2025

ஆசிரியர் பணி வாங்கித்தருவதாக ரூ.88 லட்சம் மோசடி

image

தேனியை சேர்ந்த சிரஞ்சீவி என்பவர் தனது தங்கை பவித்ராவிற்கு அரசுப் பள்ளியில் முதுநிலை ஆசிரியர் பணி பெற்று தருவதாக கூறியுள்ளார். அதற்கு திண்டுக்கல்லை சேர்ந்த சூரஜ் என்பவரிடம் ரூ.88 லட்சம் கொடுத்துள்ளார். அவர் போலி பணி ஆணை வழங்கி மோசடி செய்துள்ளார். சிரஞ்சீவி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் சூரஜை நேற்று (ஏப்.18) கைது செய்தனர்.

error: Content is protected !!