India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி மாவட்டத்திற்கான நேற்றைய (ஏப்.12) மழைப்பொழிவு விவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. போடிநாயக்கனூரில் 6 செ.மீட்டரும், மஞ்சளார், சோத்துப்பாறை, பெரியகுளம் பகுதிகளில் 3 செ.மீட்டரும் பதிவாகியுள்ளது.
போடி நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கண்ணன் சக போலீசாருடன் போதை பொருள் தடுப்பு சம்பந்தமாக ரோந்து சென்றார். அப்போது தேவர் சிலை அருகே வாகன தணிக்கை செய்தபோது பெரோஸ்கான், சுதாகர் ஆகியோர் வந்த டூவீலரை சோதனை செய்தார். சோதனையில் அரசால் தடை செய்யப்பட்ட ரூ.18920 மதிப்புள்ள 35 கிலோ குட்கா பொருட்கள், அதை விற்ற பணம் ரூ.30000 ஆகியவற்றை கைப்பற்றி போலீஸார் இருவரை கைது செய்தனர்.
தேனி மக்களவை தொகுதியில் சிலமலையை சோ்ந்தவர் விக்கிதேவன், குமணன்தொழுவை சோ்ந்த சிவமாயன் ஆகியோா் தங்களது தபால் வாக்கைப் பதிவு செய்து வெற்றி வாக்கு என்று தலைப்பிட்டு தங்களது முகநூல் பக்கத்தில் பகிா்ந்துள்ளனா்.இவா்கள் இருவா் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டத் தோ்தல் பிரிவு சாா்பில் மாவட்டக் காவல் துறை நிா்வாகத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இவர்கள் இருவர் மீது நேற்று வழக்கு பதியப்பட்டுள்ளது.
முல்லைப்பெரியாறு அணையில் ஜன.17ல் நீர்மட்டம் அதிகபட்சமாக 139 அடியை எட்டியது. அதன் பின் கடந்த 3 மாதங்களாக மழையின்றி நீர்பிடிப்பு பகுதிகளில் கடுமையான வெப்பம் நிலவுவதால் நீர்வரத்து குறைந்தது. இன்று (ஏப்.13) காலை 6 மணி நிலவரப்படி 115.20 அடியாக உள்ளது. தற்போது அணையில் இருந்து குடிநீருக்காக மட்டும் 105 கன அடி நீர் குமுளி மலைப்பாதையில் உள்ள இரைச்சல் பாலம் வழியாக திறக்கப்பட்டுள்ளது.
சின்னமனூரை சேர்ந்தவர் காதா் மைதீன்(65). இவா் கடந்த ஏப்.9 அன்று இரு சக்கர வாகனத்தில் சீலையம்பட்டியில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பினாா். அப்போது அவர் புறவழிச் சாலையைக் கடக்க முயன்ற போது கம்பத்தை நோக்கி சென்ற மினி லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். இது குறித்து சின்னமனூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
2024 மக்களவை தேர்தலையொட்டி தேனி மாவட்டம் முழுவதும் ஆட்சியர் ஷஜீவனா மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அந்த வகையில், 100கி.மீ. நடைபயணத்தின் 6-ம் நாளான
இன்று (12.04.2024) தேர்தல் விழிப்புணர்வு வாசகத்துடன் குடையினை பிடித்தபடி ஆட்சியர் விழிப்புணர்வு செய்தார். இந்நிகழ்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி உள்ளிட்ட பலர் இருந்தனர்.
தேனி மாவட்டம் கம்பம் கௌமாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா ஏப்.17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 5ஆம் தேதி வரை 21 நாட்கள் வெகு விமர்சியாக நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து கம்பம் நகராட்சி ஆணையர் வாசுதேவன், தேனி மாவட்டம் இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட அறங்காவல் குழு உறுப்பினர் ஜெயபாண்டியன் ஆகியோர் விழாவுக்கான அழைப்பிதழை வழங்கினர்.
தேனி பெரியகுளம் அருகே உள்ள குள்ளபுரம் வேளாண் கல்லூரி பயிலும் நான்காம் ஆண்டு மாணவிகள் கிராம தங்கள் பயிற்சி ஈடுபட்டு வருகின்றனர். அதில் ஒரு பாகமாக வாழையை தாக்கும் அஸ்வினி பூச்சிகள் விளைச்சல் குறைப்பது குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.
தேனி மக்களவை தொகுதியில் பாஜக கூட்டணியில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நாளை (ஏப்.12) தேனி வருகை தரவுள்ளார். தேனி வரும் அவர் பங்களாமேடு பகுதியில் தினகரனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வத்தலக்குண்டை சேர்ந்தவர் ராஜா. இவர் ஜல்லிப்பட்டி டாஸ்மாக் கடையில் சேல்ஸ்மேனாக பணிபுரிந்து வந்தார். நேற்று வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக தனது டூவீலரில் வத்தலகுண்டு ரோட்டில் சென்று கொண்டிருந்தார். ஏ.புதுப்பட்டி அருகே சென்றபோது அவ்வழியாக வந்த லாரி ராஜா சென்ற டூவீலர் மீது மோதியது. தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பெரியகுளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.