India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என அறிவிப்பு வெளியாகியது . அந்த வகையில் இன்று (மார்ச்.19) இரவு 10 மணி வரை தேனி உட்பட 6 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தேனி நகர் பகுதியில் பழமை வாய்ந்த ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் உள்ள மூலவர் மீனாட்சி அம்மனுக்கு பல்வேறு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இங்கு நடைபெறும் நித்ய பூஜையில் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டால் திருமணத்தடை நீங்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
தேனி மாவட்டம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 21.03.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது. மேலும் விவரங்களுக்கு 98948 89794 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாய்ப்பினை தேனி மாவட்ட வேலைநாடுநர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.
தேனி, டி.வாடிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வெற்றி 40.முன்னாள் ராணுவ வீரர். மனைவி அருள்மொழி 35. இரு மகள்கள் உள்ளனர். இவர் மாடியில் இரவு உணவு சாப்பிடுவது வழக்கம்.இந்நிலையில் மார்ச் 15ம் தேதி இரவு மனைவி அருள்மொழி மாடிக்கு உணவை எடுத்துச் சென்று பார்தத் போது அலைபேசியில் பேசியபடி 25 அடி உயரத்திலிருந்து வெற்றி தவறி கீழே விழுந்தது தெரிந்தது. தேவதானப்பட்டி இன்ஸ்பெக்டர் அப்துல்லா விசாரிக்கிறார்.
தேனி மாவட்டத்தில் உலக தண்ணீர் தினத்தை (22.03.2025) முன்னிட்டு 130 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் 23.03.2025 அன்று முற்பகல் 11.00 மணியளவில் தனி அலுவலர்/வட்டார வளர்ச்சி அலுவலர்களால் நடத்தப்பட உள்ளது. எனவே, அனைத்து ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள கலெக்டர் ரஞ்ஜீத் சிங் அறிவுறுத்தியுள்ளார் .
தேனி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளில் நிலுவை மற்றும் நடப்பாண்டு வீட்டுவரி, குடிநீர் வரி, தொழில்வரி மற்றும் தொழில் உரிமம் கட்டணம் தற்போது வசூல் செய்யப்படுகிறது. பொதுமக்கள் வரும் 31 ம் தேதிக்குள் வரியினங்களை செலுத்த வேண்டியது கட்டாயக் கடமை மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-இன்படி முறையாக வரி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார
தேனி மாவட்டத்தில் 5 போலீஸ் சப் டிவிஷன்கள் உள்ளன. இந்த சப் டிவிஷன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2023-இல் 1174 விபத்துகளில் 330 பேர் உயிரிழந்துள்ளனர் அதே சமயம் 2024.ம் ஆண்டு 56 விபத்துக்கள் அதிகரித்து மொத்தம் 1230 விபத்துக்கள் நடைபெற்றுள்ளன. இதில் மொத்தம் 408 பேர் உயிரிழந்துள்ளனர். வரும் காலங்களில் விபத்துகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு முன் நடக்கும் அதிகாரிகள் ஆய்வுக் கூட்டம் தேனி கலெக்டர் ரஞ்சித்சிங் தலைமையில் நேற்று மார்ச் 17 காலை 9:00 மணிக்குத் துவங்கியது. காலை 9:15 மணிக்கு மேல் வந்த 12 அதிகாரிகளை ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க அவர் அனுமதிக்கவில்லை. கூட்ட அரங்கிற்கு வெளியே அவர்கள் காத்திருந்தனர். மீண்டும் 10:30 மணிக்கு மக்கள் குறைதீர் கூட்டம் துவங்கியதும் அதிகாரிகள் உள்ளே சென்றனர்.
மதுரை-போடி இடையே உள்ள 96 கி.மீ., தூர அகல ரயில் பாதை தற்போது ரூ.98.33 கோடி செலவில் மின் மயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கரிசல் கிஷோர் மதுரை – போடி இடையே ரயில்வே ட்ராக்கை ஆய்வு செய்தார். அதிகாரிகளிடம் போடியிலிருந்து மதுரைக்குக் காலையில் ரயில் இயக்க வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இத்திட்டம் பரிசீலனையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதியில் அமைந்துள்ளது பரமசிவன் கோவில். மலைமேல் அமைந்துள்ள இக்கோவிலில் தலவிருட்சம் தரும் வேம்பு மரம் உள்ளது. சிவராத்திரி, திருக்கிருத்திகை, உள்ளிட்ட நாட்களில் இங்குள்ள வேம்பு மரத்தை வழிபட்ட பிறகு , இங்கு நடைபெறும் பூஜைகளில் கலந்து கொண்டு மூலவரையும் ,உற்சவரையும் வழிபட்டால் கடன் தொல்லை நீங்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. ஷேர் செய்து உதவுங்கள் .
Sorry, no posts matched your criteria.