India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தை ஒட்டிய மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபாடும் பகுதி நிகழ்கிறது. இதன்படி தேனி மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் இன்று(மே 13) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
சக்கம்பட்டியை சேர்ந்தவர் அய்யப்பன். இவர் ஆண்டிப்பட்டி பஜாரில் உள்ள நகைக்கடையில் வாட்ச்மேனாக பணிபுரிந்து வந்தார். நேற்று அவர் பணிக்கு செல்வதற்காக ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த பைக் அவர் மீது மோதியது. கீழே விழுந்த அவருக்கு தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தர்மராஜபுரத்தை சேர்ந்தவர் சிவகுமார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன் குடும்பத்திற்கும் நிலப்பிரச்சினை இருந்து வந்தது. அதன் காரணமாக நேற்று இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு அடிதடி நடந்தது. சிவக்குமாரின் மகளை கையை பிடித்து இழுத்ததாகவும் , சிலம்பரசனின் தாய் ஜெயலட்சுமியின் சேலையை பிடித்து இழுத்ததாகவும் இரு தரப்பினரும் புகார் அளித்துள்ளனர்.
பெரியகுளத்தில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் உள்ள அடுக்கம் பகுதியில் இன்று (12.05.24) பெய்த கனமழையால் நெடுஞ்சாலை துறையினரால் கட்டப்பட்டதடுப்புச் சுவர் சாலையில் விழுந்து வாகனங்கள் செல்ல இயலாத நிலையில் உள்ளது. இதன் காரணமாக செலும்பு , அடுக்கம் வழியாக கொடைக்கானல் செல்லக்கூடிய சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தேவதானப்பட்டி வனச்சரக அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகம் மற்றும் கேரளா எல்லைப் பகுதியான குமுளி மலைப்பகுதியில் இன்று சரியாக 05:20 மணியளவில் எஸ் பெண்ட் எனும் வளைவில் கம்பம் நோக்கி சென்ற அரசுப் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாரத விதமாக விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் அதிர்ஷடவசமாக உயிர்பலி எதுவுமில்லை பேருந்தில் இருந்த பயணிகள் பத்திரமாக கீழே இறக்கி விடப்பட்டனர்
பெரியகுளம் A புதுப்பட்டி சேர்ந்தவர் அபிமன்யு. இவர் நேற்று பெரியகுளம் வத்தலக்குண்டு மெயின் ரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது தோட்டக்கலை பண்ணை மெயின்கேட் அருகே சென்றபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
தேனி மாவட்டத்தில் நாளை (மே.12) மழைப் பொழிவுக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தேனி மாவட்டத்தில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பதிவாகக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. கோடையில் தமிழகத்தில் சமீபகாலமாக ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.
தேனி மாவட்டத்தில் இன்று (மே.11) மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தேனி மாவட்டத்தில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பதிவாகக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. கோடையில் தமிழகத்தில் சமீபகாலமாக ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.
கம்பத்தை சேர்ந்தவர் சக்தி பிரகாஷ் (24). நேற்று பிறந்தநாள் கண்ட அவர் தனது தந்தையிடம் டூவீலரை வாங்கிக் கொண்டு நண்பர் ரஞ்சித்துடன் கோயிலுக்கு சென்றுவிட்டு முல்லை பெரியாற்றில் குளிக்க சென்றுள்ளார். ரஞ்சித்தை சாப்பாடு வாங்கி வர அனுப்பிவிட்டு ஆற்றில் குளிக்க சென்றவர் நீச்சல் தெரியாததால் மூச்சுத் திணறி பரிதாபமாக பலியானார். புகாரின்பேரில் கம்பம் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
வைகை பூர்வீக பாசன பகுதி 3ல் உள்ள ராமநாதபுரம் மாவட்ட கண்மாய்களுக்காக வைகை அணையில் இருந்து நேற்று (மே 10) காலை 10.15 மணிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. திறக்கப்பட்ட நீர் 11.30 மணிக்கு விநாடிக்கு 3000 கனஅடியாக உயர்த்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அணையின் வலது, இடது கரைகளை இணைக்கும் தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதனால் சுற்றுலாப் பயணிகள் தரைப்பாலம் வழியாக செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.