Theni

News October 24, 2024

தேனி வைகை அணையின் இன்றைய நிலவரம்

image

தேனிமாவட்டம் வைகை அணையின் இன்றைய நிலவரம். அணையின் மொத்த உயரம் 71 அடி, தற்போதைய நீர்மட்டம் 58.6 அடி, அணையின் மொத்த கொள்ளளவு 6,091 மில்லியன் கன அடி, அணையின் தற்போதைய கொள்ளளவு 3,343 மில்லியன் கன அடி, அணைக்கு நீர்வரத்து 1,952 கன அடி, அணையில் இருந்து 969 கன அடி நீரானது வெளியேற்றப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 24, 2024

கால்நடை கணக்கெடுப்பு பணி நாளை தொடக்கம்

image

இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கால்நடை கணக்கெடுக்கும் பணிகள் கால்நடை பராமரிப்புத்துறையினரால் நடத்தப்படும். தேனி மாவட்டத்தில் இப்பணிகளை மேற்கொள்ள 126 கால்நடை கணக்கெடுப்பாளர்கள், 31 மேற்பார்வையாளர்களுக்கு நேர்முக, களப்பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. வருவாய் கிராம வாரியாகவும், நகரப் பகுதியில் வார்டு வாரியாகவும் நடக்க உள்ள இப்பணிகள் நாளை(அக்.25) தொடங்கப்பட உள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News October 24, 2024

மாசற்ற தீபாவளியை கொண்டாடுங்கள் – ஆட்சியர்

image

தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அதே வேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. இதனால் எழும் அதிகப்படியான ஒலி & காற்றால் சிறுவர்கள், பெரியவர்கள் பாதிக்கப்படுவர் என தேனி ஆட்சியர் தெரிவித்தார்..

News October 24, 2024

வைகை அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு

image

மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து அக்.16 முதல் வினாடிக்கு 800 கன அடி வீதம் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் நேற்று(அக்.23) முதல் வினாடிக்கு 100 கன அடி வீதம் அதிகரிக்கப்பட்டு தற்போது வினாடிக்கு 900 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மதுரை, தேனி, ஆண்டிபட்டி – சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

News October 23, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

தேனி மாவட்டத்தில் இன்று (23.10.2024) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 23, 2024

தேனியில் கால்நடை கணக்கெடுப்பு பணி- ஆட்சியர் தகவல்

image

தேனி மாவட்டத்தில் 21வது கால்நடை கணக்கெடுப்பு பணி துவக்கப்பட உள்ளது என தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். இதில் இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்நடை கணக்கெடுப்பு நடைபெறுகிறது. இதுவரை 20 கால்நடை கணக்கெடுப்புகள் நடைபெற்றுள்ளதாகவும் 21வது கால்நடை கணக்கெடுப்பு அக்டோபர் 25ஆம் தேதி நாடு முழுவதும் தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

News October 23, 2024

தேனி போக்சோ குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

image

எரசக்கநாயக்கனூரில் மாரியம்மன் தெரு அமலபுஷ்பம் என்பவரின் 6 வயது பேத்தி 3 ஆண்டுகளுக்கு முன் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு தீ வைத்து எரித்து கொல்லப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய இதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவர் கைது செய்யப்பட்டு குற்றவாளியாக உறுதி செய்யபட்டார். அவருக்கு, 7 ஆண்டுகள் சிறை தண்டனை, 10,000 ரூ. அபராதம், ஆயுள் தண்டனை விதித்து தேனி நீதிபதி இன்று உத்தரவிட்டுள்ளார்.

News October 23, 2024

தேனியில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் 

image

தேனி அல்லிநகரம் மூர்த்தி தெருவில் உள்ள நாயுடு சாவடி சங்கம் கட்டிடத்தில் அக்.25ஆம் தேதி முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் தேனி நலம் ஹெல்த் கேர் சார்பாக மாபெரும் இலவச மருத்துவ முகாம் மற்றும் சர்க்கரை பரிசோதனை முகாம் நடைபெற உள்ளதால் பொதுமக்கள் தவறாமல் கலந்து கொண்டு தங்கள் உடலில் உள்ள பிரச்சனைகளுக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளனர்

News October 23, 2024

தேனி மாவட்ட அளவிலான தடகள போட்டிகள்

image

ராயப்பன்பட்டி எஸ்.யூ.எம். மேல்நிலைப்பள்ளியில் தேனி வருவாய் மாவட்ட அளவிலான குடியரசு தின தடகள போட்டிகள் நேற்று(அக்.22) நடைபெற்றன. போட்டியில் 100 மீ., 200 மீ., 400 மீ., 800 மீ., 1200 மீ.,ஓட்டம், குண்டு எறிதல், தட்டு எறிதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. மாவட்டத்தில் குறுவட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்கள் இப்போட்டிகளில் பங்கேற்றனர்.

News October 23, 2024

நிலத் தகராறில் அண்ணனை கொன்ற தம்பி கைது

image

தேனி வருசநாடு அருகே சீலமுத்தையாபுரத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவருக்கு மலைச்சாமி, அய்யனார் என்ற இரு தம்பிகள் உள்ளனர். நிலப்பிரச்சனையில் அண்ணன் தம்பிகளுக்கிடையே ஏற்பட்ட தகராறில் மண்வெட்டியால் அண்ணனை தாக்கியதில் உயிரிழந்தார். கொலை செய்த தம்பி அய்யனாரை வருசநாடு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

error: Content is protected !!