India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 50% மானிய விலையில் மண்புழு உரப்படுக்கைகள் விநியோகம் செய்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

தேனி மாவட்டத்தில் நடப்பு பருவ சாகுபடிக்குத் தேவையான உரங்களான யூரியா 1896 மெட்ரிக் டன்னும் (MFL, Spic & IFFCO), DAP 354 மெட்ரிக் டன்னும் (Green star, IPL & IFFCO) பொட்டாஷ் 664 மெட்ரிக் டன் (IPL) மற்றும் கலப்பு உரங்கள் 2177 மெட்ரிக் டன்னும் (Fact, GFL, CIL, IFFCO) தனியார் நிறுவனங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலமாக நடப்பு பருவத்தில் விவசாயிகளுக்கு நெல் விதை இதுவரை 120 மெட்ரிக் டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. நெல் விதை 47 மெட்ரிக் டன்னும், சிறுதானியங்கள் 6 மெட்ரிக் டன்னும்,பயறு வகை விதைகள் (தட்டை பயிறு, பச்சை பயிறு மற்றும் உளுந்து) 22 மெட்ரிக் டன்னும், எண்ணெய்வித்துப் பயிர் விதைகள் (நிலக்கடலை மற்றும் எள்) 8.6 மெட்ரிக் டன்னும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் தகவல்.

தேனி மாவட்டத்தில் நடப்பாண்டு நெல் இதுவரை 6313 ஹெக்டர் பரப்பிலும், சிறுதானியங்கள் 8616 ஹெக்டேரிலும், பயிறு வகைகள் 5799 ஹெக்டேரிலும், பருத்தி 1182 ஹெக்டேர் பரப்பிலும், எண்ணெய்வித்து பயிர்கள் 1652 ஹெக்டேர் பரப்பிலும் மற்றும் கரும்பு 2116 ஹெக்டேர் பரப்பிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா தெரிவித்துள்ளார்.

தேனி, முல்லை நகர் பகுதியை சேர்ந்தவர் விகாசினிதேவி(22). இவர் நவ.10.ல் துாத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற தமிழ்நாடு பள்ளிகளுக்கு இடையிலான ஓப்பன் ஆர்ச்சரி சேம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று பொது பிரிவுக்கான 10மீ., போட்டியில் முதலிடமும், 20 வயதிற்கு மேற்பட்டோர் போட்டியில் 20மீ., பிரிவிலும் முதலிடம் பெற்று சாதனை படைத்தார். இவருக்கு பெற்றோர், பொதுமக்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கம்பம் எம்.பி.எம். மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் தாரனேஷ் ஈரோட்டில் நடைபெற்ற 2024 -2025க்கான குடியரசு தின தடகள போட்டிகளில் பங்கேற்று தட்டு எறிதல்,குண்டு எறிதலில் முதலிடம் பெற்று தங்க பதக்கத்தை தட்டி சென்றார். தட்டு எறிதலில் 2003-ல் 47.49 மீட்டர் எறிந்த சாதனை இதுவரை முறியடிக்கப்படாமல் இருந்தது. தற்போது நடந்த போட்டியில் தாரனேஷ் 48.70 மீட்டர் எறிந்து 21 ஆண்டு சாதனையை முறியடித்துள்ளார்.

தேனி மாவட்டத்தில் கடந்த மே.1 முதல் தற்போது வரை உணவுப் பாதுகாப்புத் துறை மூலம் புகையிலை பொருள் விற்பனை செய்த 190 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன. தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் கடத்தல், விற்பனையில் ஈடுபட்டவர்களிடமிருந்து மொத்தம் ரூ.60.5 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் விற்பனை குறித்து மக்கள் காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கலாம் என எஸ்பி சிவபிரசாத் தெரிவித்துள்ளார்

தேனி மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசிய பொருள்களை வாங்காத குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். ஆகவே அப்படி ரேஷன் அட்டை தேவைப்படுவோர் இணையதளத்திலோ அல்லது வட்ட வழங்கல் அலுவலரிடமோ தொடர்பு கொண்டு பொருளில்லா குடும்ப அட்டை பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் 2024 மே ஒன்றாம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தொடர்பாக 245 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 279 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதில் 1904.5 கிலோ புகையிலை பறிமுதல் செய்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவப்பிரசாத் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டத்தில் இன்று 15.11.2024 இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.