India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி உட்பட 7 மாவட்டங்களில் இன்று(ஜூன் 28) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து தென் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சில இடங்களில் தண்ணீர் தேங்கவும், போக்குவரத்து பாதிக்கவும் வாய்ப்பு என தகவல்.
தேனி மாவட்டத்தில் இயற்கை ஈடு பொருட்களான பஞ்சகாவியம், மூலிகை பூச்சிவிரட்டி, வேப்பம் புண்ணாக்கு தயார் செய்ய விவசாயிகள் ஊக்குவிக்கப்படுகின்றனர். இவை தயாரிக்க மாவட்டத்தில் 3 விவசாய குழுக்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க உள்ளது. அதில் சின்னமனுார், க.மயிலாடும்பாறை, போடி ஆகிய 3 வட்டாரங்களில் தலா 12 முதல் 20 பேர் கொண்ட விவசாயிகள் அடங்கிய குழுக்கள் விண்ணப்பிக்கலாம் என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் இயற்கை ஈடு பொருட்களான பஞ்சகாவியம், மூலிகை பூச்சிவிரட்டி, வேப்பம் புண்ணாக்கு தயார் செய்ய விவசாயிகள் ஊக்குவிக்கப்படுகின்றனர். இவை தயாரிக்க மாவட்டத்தில் 3 விவசாய குழுக்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க உள்ளது. அதில் சின்னமனுார், க.மயிலாடும்பாறை, போடி ஆகிய 3 வட்டாரங்களில் தலா 12 முதல் 20 பேர் கொண்ட விவசாயிகள் அடங்கிய குழுக்கள் விண்ணப்பிக்கலாம் என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்ட விவசாயிகள் இயற்கை உரங்களான மண்புழு உரங்களை பயன்படுத்த வேளாண் துறை மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதற்காக 50% மானியத்தில் மண்புழு உரங்கள் தயாரிப்பதற்கு மண்புழு உர தயாரிப்பு படுக்கை வேளாண் துறை மூலம் வழங்கப்பட உள்ளது. உர தயாரிப்பு படுக்கை வாங்க விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி, அல்லது அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களை தொடர்பு கொள்ளலாம் என வேளாண் துறையினர் தெரிவித்துள்ளார்.
தேனியைச் சோ்ந்தவா் ராமராஜ். இவா் இந்து எழுச்சி முன்னணி மாவட்டத் தலைவராக உள்ளாா். இவா் நிலப்பட்டா விவகாரம் தொடா்பாக பெரியகுளம் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்துக்குச் சென்றாா். அப்போது, வருவாய்க் கோட்டாட்சியா் முத்துமாதவனுடன் அவா் வாக்குவாதம் செய்து அரசு பணியை செய்யவிடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராமராஜ் மீது தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திண்டுக்கல், தேனி, செங்கல்பட்டு, விருதுநகர், நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களிலும் இன்று கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதால் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி இன்று இரவு 7 மணி வரை தேனி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூலை 2 முதல் ஜூலை 8 வரை துணைத் தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த தேர்வில் பங்கேற்பதற்கான ஹால் டிக்கெட்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கூடுதல் விபரங்களுக்கு மாவட்ட கல்வி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
பசுந்தீவன உற்பத்தியினை அதிகரிக்க புற்கள், பருப்பு வகைகள், மேய்ச்சல் புற்கள் போன்ற வற்றாத தீவனப்பயிர்களை பயிரிட விரும்பும் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.3000 சாகுபடி ஊக்குவிப்புத் தொகையாக வழங்கப்படும். விருப்பமுள்ள பயனாளிகள் தங்கள் கிராமத்திற்கு அருகே உள்ள அரசு கால்நடை மருந்தகத்தை அணுகி ஜூலை 5க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
தற்பொழுது வாட்ஸ் செயலியில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா என்ற பெயரில் தங்களுக்கு பணம் ரிவார்ட் கிடைத்துள்ளது என்ற பெயரில் அனுப்பப்படும் செயலியை யாரும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம். அவ்வாறு அனுப்பப்படும் செயலியை பதிவிறக்கம் செய்தால் உடனே தங்களது செல்போன் ஹேக் செய்யப்படும். எனவே பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு தேனி மாவட்ட காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.