India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி அரசு மருத்துவமனைக்கு கடந்த வாரம் வட வீரநாயக்கன்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஜக்கம்மாள் (50) மூச்சுத் திணறல் மற்றும் இருமல் காரணமாக புற நோயாளியாக நுரையீரல் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் கட்டி போன்று இருப்பதை ஆப்பரேஷன் செய்ததில் ஆச்சரியப்படும் விதமாக அது சப்போட்டா பழத்தின் விதை என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 வருடங்களாக இருந்த விதை மருத்துவர்களால் அகற்றப்பட்டது.
தேனி மாவட்ட புவியியல், சுரங்கத்துறை சார்பில் 2024 முதல் www.mimastn.gov.in என்ற இணையத்தளம் மூலம் குவாரியில் இருந்து எடுத்து செல்லும் கனிமங்களுக்கு மொத்த அனுமதிக்கான சீட்டு வழங்கப்படும் நடைமுறை உள்ளது. எம்.சாண்ட், ஜல்லி போன்ற கனிமங்கள் ஏற்றிச் செல்லும் போது புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகத்தில் இருந்து உரியநடைச்சீட்டு பெற்று கொண்டுசெல்ல வேண்டும் என்பது கட்டாயம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 25க்கும் மேற்பட்ட மின் தொழில்நுட்பாளர் (Electrical Technician) காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு பெறியியல் (EEE) படித்த 18 வயது முதல் 40 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.15 ஆயிரம் வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. இங்கு கிளிக் செய்து 01-05-2025க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் செய்யுங்கள்
பெரியகுளம் பகுதியை சேர்ந்த சிபிராஜா என்பவரை பெரியகுளம் போலீசார் கடந்த 2022-ம் ஆண்டு 7-ம் வகுப்பு படித்து வந்த மாணவியை பின் தொடர்ந்து சென்று கேலி செய்த வழக்கில் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிபிராஜாவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து நேற்று (ஏப்.4) நீதிபதி பி.கணேசன் உத்தரவிட்டார்.
தேனி மாவட்டத்தில் இன்று 04.04.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
தேனி கனரா வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் இலவச அலைபேசி பழுது நீக்குதல் பயிற்சி ஏப்.28 முதல் வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் புகைப்படம், ஆதார் நகலுடன் கருவேல்நாயக்கன்பட்டி தொழிலாளர் நலத்துறை அலுவலகம் அருகே செயல்படும் கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் அணுகலாம். மேலும் விபரங்களுக்கு 95003 14193 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பயிற்சி மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.
கம்பம் அருகே சுருளிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (21). இவர் நேற்று முன் தினம் இரவு தனது இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது பைக்கில் மறைந்திருந்த பாம்பு இவரை தீண்டி உள்ளது. கம்பம் மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு மேல் சிகிச்சைக்காக தேனி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் ஹரிகிருஷ்ணன் உயிரிழந்தார். இது குறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்கு (ஏப்.3) பதிவு.
தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் தமிழில் பெயர் பலகை வைக்க குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தேனி மாவட்டத்தில் செயல்படும் நிறுவனங்கள் தங்கள் பெயர் பலகைகளை மே.15.க்குள் தமிழில் வைத்திட வேண்டும். அதன் பிறகும் தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் மில் நிறுவனத்தில் 60க்கும் மேற்பட்ட இயந்திர ஆப்ரேட்டர் காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு 12 ஆம் வகுப்பு படித்த 18 வயது முதல் 40 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை.<
போடியை சேர்ந்தவர் நல்லதம்பி. இவரது மனைவி சரண்யாவை பிரசவத்துக்காக நேற்று (ஏப்ரல்.3) அதிகாலை போடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த செவிலியர்கள் பனிக்குடம் உடைந்திருப்பதாக கூறி, இரவு நேர பணி மருத்துவருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வருவதற்கு தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மருத்துவர் வந்து பார்த்தபோது சரண்யாவின் கர்ப்ப பையிலேயே ஆண் சிசு உயிரிழந்தது தெரியவந்தது.
Sorry, no posts matched your criteria.