India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சனி பகவான் மற்ற கோவில்களில் தனி சந்நிதியிலோ நவக்கிரகங்களிலோ இருக்கும் போது சனி மூலவராக உள்ள கோவிலாக குச்சனூர் சனீஸ்வரர் கோவில் திகழ்கிறது.இங்கு சனி லிங்க வடிவில் காணப்படுகிறார். திருநள்ளாறுக்கு அடுத்தபடியாக புகழ்பெற்ற இந்த கோவிலில் வழிபட்டால் சனி தோஷம் நீங்கி நன்மைகளை பெற முடியும்.சனி பகவானுக்கே ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கிய தலம் என்ற பெருமையும் இதற்கு உண்டு.ஷேர் பண்ணுங்க
தேனி மாவட்டத்தில் இன்று 23.03.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.*இரவில் வெளியே செல்லும் நண்பர்களுக்கு பகிர்ந்து உதவவும்*
ஆண்டிப்பட்டி கணவா காத்து ஆள தூக்குதே..வரிகளை பாடலாக கேட்டு ரசித்திருப்பீங்க..மதுரை-தேனி வழியில் ஆண்டிப்பட்டியில் மலை முகடுகள் ஊடாக செல்லும் சாலையை தான் ஆண்டிப்பட்டி கணவாய் என்கிறோம்.இருபுறமும் மரங்கள் நிறைந்த சாலையில் செல்லும் போதே குளுமையை உணர முடியும். கிட்டத்தட்ட 2கி . மீ நீளம் கொண்ட இந்த கணவாய் செல்லும் போது வீசும் காற்று மனதை வருடி செல்லும். கணவாய் வழில போயிருக்கிங்கனா ஷேர் பண்ணுங்க
தேனி மாவட்ட மக்களே இந்த சம்மர்க்கு வெளில எங்கையும் அலையாம பக்கத்துலயே இருக்க இந்த ஸ்பாட்டுகளுக்கு ஒரு விசிட்ட போடுங்க
1.மேகமலை
2.வைகை அணை
3.சுருளி அருவி
4.குரங்கனி மலை
5.கும்பக்கரை
6.கொழுக்குமலை தேயிலை தோட்டம்
7.சின்ன சுருளி அருவி
8.கும்பக்கரை அருவி
9.சோத்துப்பாறை அணை
10.பேரிஜம் ஏறி இப்பவே உங்க நண்பர்களுக்கு இத ஷேர் பண்ணி ட்ரிப்க்கு பிளான் பண்ணுங்க
தேனி கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் மார்ச் 24ம் தேதி முதல் நடைபெற உள்ள இரு சக்கர வாகனங்கள் பழுது பார்த்தல் பயிற்சியில் தேனி மாவட்டத்தை சேர்ந்த 18 வயது முடிந்து 45 வயதிற்குள் உள்ள கிராமப்புற ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என வகுப்பு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தகவல் பெற இந்த 04546-251578 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்புக்காளை 75, வயது மூப்பால் அடிக்கடி மருத்துவ சிகிச்சை பெற்றார்.உடல் வலி அதிகமானதால் மனம் வெறுத்த முதியவர் வீட்டில் இருந்த மாத்திரைகளை அதிகம் எடுத்துக்கொண்டு மயங்கினார். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்த நிலையில் பலன் இன்றி இறந்தார். மகன் சுருளிமுத்து புகாரில் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
தேனி மாவட்டத்தில் பலருக்கும் தெரியாத ஒரு சில சுற்றுலா இடங்கள் உள்ளன. அதில் ஒரு இடம் தான் லோயர் கேம்ப் அருகே உள்ள வைரவனாறு பகுதி. இங்கு செல்லும் முல்லைப் பெரியாறு தண்ணீர் அதிக கனத்துடன் வெளியேறும் . தண்ணீர் குறுகிய பாலத்தில் மோதி வெளியேறும் போது பார்ப்பதற்கு அழகாக தோன்றும். இயற்கை சூழலுடன் முக்கோண வடிவ தடுப்பணியில் தண்ணீர் செல்வது பலரையும் கவரும். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்
தேனி மாவட்டதில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. வளிமண்டலத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக
தேனி உட்பட 7 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மிதமான மழை முதல் கனமழை பெய்யக்கூடும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. கேரளாவை ஒட்டியுள்ள பகுதிகளான குமுளி, கம்பம் மெட்டு,போடி மெட்டு உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்யும்.
உலக தண்ணீர் தினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது அதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளிலும் மார்.29 அன்று வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் கிராம சபை கூட்டம் நடத்தப்பட உள்ளது. இக்கூட்டத்தில் ஊராட்சி பகுதிகளை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தேனி கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.
தேனி கூட்டுறவு மேலாண்மைப் பயிற்சி நிலையத்தில் பகுதி நேர நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வகுப்பு ஏப்.15-ம் தேதி தொடங்க உள்ளது. இந்தப் பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்பப் படிவம் தேனி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் வருகிற 24-ம் தேதி முதல் வரும் ஏப்.13 வரை வழங்கப்படும். பயிற்சி குறித்த விவரங்களுக்கு 04546-244465 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.