India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி மாவட்டம் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பாக வருகின்ற ஜூலை 9ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம் கொண்டாடப்பட உள்ளது. வேலை தேடும் இளைஞர்கள் ஆண்டிபட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறும் தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் திறன் பயிற்சியில் கலந்து கொண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பேரூர் பகுதியிருந்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் 2000 உறுப்பினர்கள் இணைவதற்கான முதல்கட்ட பட்டியலை இன்று பேரூராட்சி மன்ற தலைவர் மிதுன் சக்கரவர்த்தி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் முன்னாள் கமிட்டி தலைவர் ஜெ.எம் ஆரூண்ரஷீத் ஆகியோரை நேரில் சந்தித்து வழங்கினார். உடன் தேனி மாவட்ட தலைவர் எம்பி முருகேசன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் இருந்தனர்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதல்நிலை தேர்வு செப்.14ல் நடைபெற உள்ளது. தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று துவங்குகிறது. பயிற்சியில் இலவச பாடக் குறிப்புகள், மாதிரி தேர்வுகள் நடத்தப்படும். விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் பயிற்சியில் பங்கேற்று பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு 63792 68661 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தேனி கலெக்டர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பருவ மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் கணிசமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில், இன்று (ஜூலை 7) இரவு 7 மணி வரை தேனி உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது
தேனி மாவட்டத்தில் போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க கண்காணிப்பு குழுவை அமைத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், சில்லரை மது விற்பனை பற்றி 10581 அல்லது 93638 73078 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். புகார் கூறுபவர்கள் பற்றிய விபரம் ரகசியம் காக்கப்படும் எனவும் ஆட்சியர் கூறியுள்ளார்.
தேனி மாவட்டத்தில் உள்ள பசுக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கடந்த மாதம் காணை நோய் தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவங்கின. தற்போது இந்த பணி முடிவுற்ற நிலையில் மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 8 ஆயிரம் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் மேகமலை பகுதியில் உள்ள 210 மாடுகளுக்கு அடுத்த வாரம் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 11-ஆம் தேதி முதல், 2 -ஆம் கட்டமாக ஊரகப் பகுதிகளில் நடைபெற உள்ள மக்களுடன் முதல்வர் முகாமில் வீட்டு வசதி மற்றும் நகர்புற மேம்பாட்டுத்துறை சார்பில் திட்ட ஒப்புதல், நில வகைப்பாடு மாற்றம், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் (TNUHDB) மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் வழங்குதல், வீட்டு உரிமையாளர்களுக்கு ஆவணம் வழங்குதல் உட்பட பல்வேறு சேவைகள் வழங்கப்பட உள்ளதாக தேனி ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் பள்ளி மாணவ, மாணவிகள் அரசு கல்வி உதவித் தொகை பெறுவதற்கு சேமிப்புக் கணக்கு தொடங்க சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. ஜூலை 15-ம் தேதி வரை மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தலைமை அஞ்சலகங்களிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையும், துணை அஞ்சலகங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரையும் இந்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என அஞ்சல் துறை கோட்டக் கண்காணிப்பாளர் தகவல்.
இரண்டாம் கட்ட ‘மக்களுடன் முதல்வர்’ திட்ட முகாம் ஜூலை 11-ஆம் தேதி முதல் அனைத்து ஊரகப் பகுதிகளிலும் நடைபெற உள்ளது. இதில் மாவட்ட தொழில் மையம் (DIC) சார்பில், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் (NEEDS), பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP), இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் (UYEGP) போன்ற சேவைகள் வழங்கப்பட உள்ளதாக தேனி ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தேனியில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் வெளியே செல்லும்போது முன்னெச்சரிக்கையுடன் குடை, ரெயின்கோட்டுடன் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஒருசில இடங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு சற்று பாதிப்பு ஏற்படுத்தலாம்.
Sorry, no posts matched your criteria.