India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பெரியகுளம் தாலுகா டி.வாடிப்பட்டியை சேர்ந்த ஜெயச்சித்ரா என்பவர் தனது தோட்டத்து வீட்டில் உள்ள கோழிகள் கூண்டில் பாம்பு இருப்பதாக நேற்று (அக்.30) பெரியகுளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் கோழி கூண்டில் இருந்த இரு தலை மணியன் பாம்பினை லாவகமாக பிடித்து அதனை தேவதானப்பட்டி வனச்சரகம் வனவரிடம் ஒப்படைத்தனர்.

பெரியகுளம் போலீசார் குற்றத் தடுப்பு சம்பந்தமாக நேற்று (அக்.29) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது எ.புதுப்பட்டி பிரிவு அருகே பையுடன் நின்று கொண்டிருந்த சீத்தாராமன் (61), முத்து (51) ஆகியோரை போலீசார் சோதனை செய்தனர். இந்த சோதனையில் அவர்கள் இருவரும் 13.401 கிலோ கஞ்சாவை வைத்திருந்தது தெரிய வந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து இருவரை கைது செய்தனர்.

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும் அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

தேனி மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.

தேனி மக்களே, இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள Clerk உள்ளிட்ட 3058 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 30 வயதுக்குட்பட்ட 12வது தேர்ச்சி பெற்றவர்கள் இங்கு <

தேனி மக்களே, உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். இங்கே <

போடி பகுதியை சேர்ந்த சுரேஷ், மாசிலாமணி, கருப்பசாமி, 17 வயது சிறுவன் ஆகியோர் நேற்று முன்தினம் தோட்ட வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது நால்வரும் மது அருந்திய நிலையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த மாசிலாமணி, சுரேஷ், சிறுவன் உட்பட மூவரும் மது போதையில் கீழே கிடந்த கல்லை எடுத்து கருப்பசாமியின் தலையில் தாக்கி கொலை செய்தனர். குரங்கணி போலீசார் 3 பேரையும் கைது (அக்.29) செய்தனர்.

சின்னமனூர் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (40). இவருக்கு தீராத குடிப்பழக்கம் இருந்து வந்த நிலையில் அதன் காரணமாக அவரது குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்தக் குடும்ப பிரச்சனையின் காரணமாக மன வேதனையில் இருந்து வந்த மாரியப்பன் நேற்று முன்தினம் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து சின்னமனூர் போலீசார் வழக்கு (அக்.28) பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

சின்னமனூர் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (40). இவருக்கு தீராத குடிப்பழக்கம் இருந்து வந்த நிலையில் அதன் காரணமாக அவரது குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்தக் குடும்ப பிரச்சனையின் காரணமாக மன வேதனையில் இருந்து வந்த மாரியப்பன் நேற்று முன்தினம் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து சின்னமனூர் போலீசார் வழக்கு (அக்.28) பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தேனி மாவட்ட வைகை அணையில் இருந்து, மதுரை, திண்டுக்கல் செல்லும் 58 கிராம கிட்ட கால்வாயில் 300 மி.கா அடி தண்ணீரை நீர் இருப்பு மற்றும் நீர்வாகத்தினை பொறுத்து தேவைக்கேற்ப 29.11.25 முதல் வினாடிக்கு 150 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் ஆகியோர் திறந்து வைத்தனர்.
Sorry, no posts matched your criteria.