India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மே தினத்தன்று (மே.01) தேதி தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் எப்.எல்.1 மற்றும் பார்கள், எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏஏ மற்றும் எப்.எல்.4ஏ உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் ஆகியன கட்டாயம் மூடப்பட்டிருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சி தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்து உள்ளார்.
பெங்களூரு பகுதியைச் சேர்ந்தவர் திலீப் (40). இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு போலி நகைகளை விற்பனை செய்து மோசடி செய்யும் கும்பலைச் சேர்ந்தவர் என தவறாக நினைத்து தேனியை சேர்ந்த முகேஷ்பாண்டி, ஆகாஷ், முத்துப்பாண்டி, இளையராஜா, முருகன், சதீஷ்குமார், செளமியன் ஆகியோர் தாக்கி உள்ளனர். இதில் திலீப் உயிரிழந்த நிலையில் இது குறித்த புகாரில் தேனி காவல் துறையினர் 7 பேரையும் நேற்று (ஏப்.28) கைது செய்தனர்.
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தேனியில் உள்ள 130 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் (மே.01) அன்று முற்பகல் 11.00 மணியளவில் தனி அலுவலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரால் நடத்தப்பட உள்ளது.அனைத்து கிராம ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் கூறியுள்ளார்.
தேனி மக்களே மதுரை ரயில்வே கோட்டம் இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 9,970 உதவி லோகோ பைலட் பணிக்கான அறிவிப்பை வௌியிட்டுள்ளது. இதில் தெற்கு ரயில்வே சார்பில் 510 பணியிடங்கள் உள்ளது. மாத ஊதியம் ரூ.19900 வழங்கப்படும். இதற்கு ஏப்.12 முதல் மே 11 வரை இந்த <
தெலுங்கானா மாநிலம், கெம்பனாஅவென்யூ குடியிருப்பைச்சோ்ந்த ராம்தா்தாகூா்மகன் விகாஸ் (19).பெரியகுளம்அரசு தோட்டக்கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக் கிழமை காலை நண்பா்களுடன் பெரியகுளம்அருகே நஞ்சியாவட்டம் பகுதியிஉள்ள தனியாா் கிணற்றில் குளிக்கச்சென்றார்.அப்போது ஏதிர்பாரத விதமாக கிணற்றில் மூழ்கி உயிரிழந்தார்.
வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன், கோயில் திருவிழா 11ஆம் நாளை முன்னிட்டு நேற்று அம்மன் வீரபாண்டியிலிருந்து பஜர் தெரு, அரண்மனை தெரு, நடுத்தெரு உள்ளிட்ட முக்கிய வீதியில் இன்று, சாமி ஊர்வலம் வந்தனர். இதில் ஊர் பொதுமக்கள், பார்த்தார்கள், கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அனைத்தையும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
தேனியில் தமிழ்நாடு ரிப்போர்டர் சங்கம் முதல் மாநில மாநாடு இன்று நடைபெற்றது. இதில், பத்திரிகையாளர்களுக்கு அரசு சலுகைகள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநில தலைவர், செயலாளர், பொருளாளர், மற்றும் தேனி மாவட்ட தமிழ்நாடு ரிப்போர்டர் சங்கம் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தேனி மாவட்டத்தில் இன்று 27.04.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவை உள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், மக்கள் இளநீரை விரும்பி பருகி வருகின்றனர். நல்ல தரமான குட்டை, நெட்டை வீரிய ஒட்டு ரக மரங்களின் இளநீர் தேனியில் 60 முதல் 70 வரை விற்பனையாகிறது. இந்நிலையில், ஒரு இளநீர் விலை 100 ரூபாயை தாண்டும் என விவசாயிகள் கூறுகின்றனர்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதார் பாலாஜி என்பவர் முதல்வர் தனிப்பிரிவுக்கு பள்ளிகளில் மாணாக்கர்களை சேர்ப்பதற்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டு உள்ளதாக புகார் அளித்திருந்தார். இந்நிலையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இந்திராணி, மாணாக்கர்களை பள்ளிகளில் சேர்க்கவும், பொது தேர்வு எழுதவும் ஆதார் கட்டாயம் இல்லை என்ற தகவலை புகார்தாரருக்கு தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.