India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் Helper(பெண்), Night Watchman(ஆண்) பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தமாக 2 காலிபணியிடங்களுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் நாள் 30-04-2025 முதல் 07-05-2025 வரை. தகுதியான நபர்களுக்கு Rs.4,500 வரை சம்பளம் கிடைக்கும். இதற்கு விண்ணபிக்க 8ம் வகுப்பு தேர்ச்சியும் 42வயது மிகாமல் இருத்தல் அவசியம். <
பெங்களூரைச் சோ்ந்த கண்ணாடி, அலங்காரப் பொருள்கள் வியாபாரியான திலீப் என்பவரை காரில் கடத்தி அடித்து கொலை செய்து உடலை புதைத்த வழக்கில் தேனி காவல் நிலைய போலீசார் நேற்று முன்தினம் 7 பேரை கைது செய்தனர். இந்நிலையில் திலீப்பை காரில் கடத்திச் செல்வதற்கு உடந்தையாக இருந்த ஆண்டிபட்டியை சேர்ந்த மோகன்(30) என்பவரை போலீசார் நேற்று(ஏப்.29) கைது செய்தனர்.
தேனி மாவட்ட சமூகநலத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 18 வயது பூர்த்தியடைந்து முதிர்வு தொகை பெறுவதற்கு தகுதியான கண்டறிய இயலாத 589 பயனாளிகளின் பெயர்ப்பட்டியல் https://theni.nic.in என்ற இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பயனாளிகள் தங்களது உரிய ஆவணங்களை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒப்படைத்து பயன் பெறலாம்.
தேனி மாவட்ட பெண்களே பெண்களுக்கு எதிராக பல குற்றச்சம்பவங்கள் நடைபெறுகின்றன. எனவே, அனைத்து பெண்களும் மகளிர் காவல் துறை எண்களை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. அதன்படி
ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல் நிலையம் – 04546-244431.
தேனி – 0456-254090.
உத்தமபாளையம் -0456-268230.
போடி – 0456 – 285700.
இந்த எண்களை உங்களுக்கு தெரிந்த அனைத்து பெண்களுக்கும் SHARE செய்து சேவ் பண்ண சொல்லுங்க.
மே தினத்தன்று (மே.01) தேதி தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் எப்.எல்.1 மற்றும் பார்கள், எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏஏ மற்றும் எப்.எல்.4ஏ உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் ஆகியன கட்டாயம் மூடப்பட்டிருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சி தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்து உள்ளார்.
பெங்களூரு பகுதியைச் சேர்ந்தவர் திலீப் (40). இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு போலி நகைகளை விற்பனை செய்து மோசடி செய்யும் கும்பலைச் சேர்ந்தவர் என தவறாக நினைத்து தேனியை சேர்ந்த முகேஷ்பாண்டி, ஆகாஷ், முத்துப்பாண்டி, இளையராஜா, முருகன், சதீஷ்குமார், செளமியன் ஆகியோர் தாக்கி உள்ளனர். இதில் திலீப் உயிரிழந்த நிலையில் இது குறித்த புகாரில் தேனி காவல் துறையினர் 7 பேரையும் நேற்று (ஏப்.28) கைது செய்தனர்.
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தேனியில் உள்ள 130 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் (மே.01) அன்று முற்பகல் 11.00 மணியளவில் தனி அலுவலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரால் நடத்தப்பட உள்ளது.அனைத்து கிராம ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் கூறியுள்ளார்.
தேனி மக்களே மதுரை ரயில்வே கோட்டம் இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 9,970 உதவி லோகோ பைலட் பணிக்கான அறிவிப்பை வௌியிட்டுள்ளது. இதில் தெற்கு ரயில்வே சார்பில் 510 பணியிடங்கள் உள்ளது. மாத ஊதியம் ரூ.19900 வழங்கப்படும். இதற்கு ஏப்.12 முதல் மே 11 வரை இந்த <
தெலுங்கானா மாநிலம், கெம்பனாஅவென்யூ குடியிருப்பைச்சோ்ந்த ராம்தா்தாகூா்மகன் விகாஸ் (19).பெரியகுளம்அரசு தோட்டக்கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக் கிழமை காலை நண்பா்களுடன் பெரியகுளம்அருகே நஞ்சியாவட்டம் பகுதியிஉள்ள தனியாா் கிணற்றில் குளிக்கச்சென்றார்.அப்போது ஏதிர்பாரத விதமாக கிணற்றில் மூழ்கி உயிரிழந்தார்.
வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன், கோயில் திருவிழா 11ஆம் நாளை முன்னிட்டு நேற்று அம்மன் வீரபாண்டியிலிருந்து பஜர் தெரு, அரண்மனை தெரு, நடுத்தெரு உள்ளிட்ட முக்கிய வீதியில் இன்று, சாமி ஊர்வலம் வந்தனர். இதில் ஊர் பொதுமக்கள், பார்த்தார்கள், கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அனைத்தையும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
Sorry, no posts matched your criteria.