Theni

News April 9, 2025

வேளாண் பொறியாளருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை

image

தேனி ஊழல் தடுப்புப் பிரிவு போலீசாரால் கடந்த 2015.ம் ஆண்டு தேனி மாவட்ட வேளாண்மைத் துறையில் உதவிப் பொறியாளராக பணியாற்றிய ராதாகிருஷ்ணன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை தேனி தலைமைக் குற்றவியல் நீதித் துறை நடுவா் மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று (ஏப்.8) ராதாகிருஷ்ணனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதித் துறை நடுவா் சரவணக்குமாா் தீா்ப்பளித்தாா்.

News April 8, 2025

தேனி: இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 08.04.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News April 8, 2025

தேனி : பாண்டிய மன்னனுக்குக் கண் பார்வை தந்தக் கோயில்

image

தேனி மாவட்டம் வீரபாண்டி பகுதியில் உள்ளது கண்ணீசுவரமுடையார் கோவில். இந்த கோவிலில் உடனிருக்கும் அம்மனாக அறம்வளர்த்த நாயகி இருக்கிறார். பங்குனி உத்திரம், சிவராத்திரி பிறப்பு நாட்களில் சிறப்பு பூஜை நடைபெறும். பாண்டிய மன்னனுக்குக் கண் பார்வை தந்த இந்தக் கோயிலில் வணங்கிச் செல்பவர்களுக்கு அனைத்து நோய்களும் நீங்கி விடும் என்பதும், திருமணத்தடை நீங்கும் என்பதும் இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது

News April 8, 2025

தேனி மாவட்ட மக்களுக்கு தெரிய வேண்டிய எண்கள்

image

தேனி மாவட்ட ஆட்சியரக உதவி எண்-04546 –254956,254946,255410, ஆட்சியரக கட்டுப்பாட்டு அறை -1077, மாநில கட்டுப்பாட்டு அறை-1070, போலீஸ் கட்டுப்பாட்டு அறை-100, விபத்து உதவி-108, தீயணைப்பு உதவி-101, ஆம்புலன்ஸ் உதவி-102, குழந்தை பாதுகாப்பு-1098, பாலின துன்புறுத்தல்-1091 *மிக முக்கிய எண்களான இவற்றை நண்பர்களுக்கு பகிரவும்

News April 8, 2025

தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விபரம்

image

தேனி மாவட்ட அணைகளின் இன்றைய(ஏப். 08) நீர்மட்டம்: வைகை அணை: 56.89 (71) அடி, வரத்து: 516 க.அடி, திறப்பு: 72 க.அடி, பெரியாறு அணை: 113.90 (142) அடி, வரத்து: 493 க.அடி, திறப்பு: 105 க.அடி, மஞ்சளார் அணை: 33.60 (57) அடி, வரத்து: 71 க.அடி, திறப்பு: இல்லை, சோத்துப்பாறை அணை: 91.02 (126.28) அடி, வரத்து: 26.26 க.அடி, திறப்பு: 3 க.அடி, சண்முகா நதி அணை: 35.80 (52.55) அடி, வரத்து: 12 க.அடி, திறப்பு: இல்லை.

News April 8, 2025

சோலார் பேனல் பொருத்துதல் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

image

தேனி கனரா வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் ஏப்.21 முதல் 6 நாட்களுக்கு சோலார் பேனல் பொருத்துதல், பழுதுநீக்குதல் பயிற்சி இலவசமாக வழங்கப்பட உள்ளது. மேலும் விபரங்களுக்கு கருவேல்நாயக்கன்பட்டி தொழிலாளர் நலத்துறை அலுவலகம் அருகே உள்ள கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தை நேரில் அணுகலாம். அல்லது 95003 14193 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பயிற்சி மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.

News April 8, 2025

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை

image

தேனி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் Social Worker பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். வேலை செய்யும் இடம் தேனி. விண்ணப்பிக்க கடைசி நாள் 10-04-2025. தகுதியான நபர்களுக்கு ரூ.18,536 வரை சம்பளம் கிடைக்கும். விண்ணப்பிக்<> இங்கு க்ளிக்<<>> செய்யவும். வேலை தேடுபவர்களுக்கு SHARE செய்து உதவவும்

News April 8, 2025

தேனி: டன் கணக்கில் பறிமுதல்

image

தேனி, கம்பமெட்டு ரோட்டில் புதுக்குளம் செல்லும் பாதையில் தகர செட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக பறக்கும் படைக்கு தகவல் கிடைத்தது.துணை தாசில்தார் பரமசிவம் தலைமையிலான வருவாய்த் துறை அலுவலர்கள் அந்த இடத்தை சோதனை செய்தனர்.அங்கு 65 சிப்பங்களில் இருந்த 3.5 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

News April 7, 2025

தேனி : 55 வயது பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர்

image

ஆண்டிபட்டி அருகே உள்ள வடக்கு மூனாண்டிபட்டியை சேர்ந்த 55 வயது கொண்ட பெண் ஒருவர் அவரது வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த பேயத்தேவர் என்பவரின் மகன் பெரிய கருப்பன்(23) என்பவர் திடீரென வீட்டிற்குள் நுழைந்து படுத்திருந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். பெண் கொடுத்த புகாரின் பேரில் ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீசார் பெரிய கருப்பனை கைது செய்தனர்.

News April 7, 2025

தேனி மக்கள் நீதிமன்றத்தில் வேலை

image

தேனி மாவட்டம் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் காலியாக உள்ள 1 உறுப்பினர் பதவிக்கு பட்டப்படிப்பு படித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள்<> இங்கு<<>> கிளிக் செய்து  ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை 21.04.2025 தேதி மாலை 5.00 மணிக்குள் அனுப்ப வேண்டும் என முதன்மை மாவட்ட நீதிமன்ற நீதிபதி  தெரிவித்துள்ளனர். வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும் 

error: Content is protected !!