India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி மாவட்டத்தை சேர்ந்த 8 பேரிடம் ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி சென்னையை சேர்ந்த பூகிஸ்வரன், அவரது மனைவி ஜெயஸ்ரீ மற்றும் தேனியை சேர்ந்த குகன்ராஜா ஆகியோர் ரூ.1,11,89,500 பெற்றுக் கொண்டு போலி நியமன ஆணை வழங்கி மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட 8 பேர் தேனி குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர். புகார் அடிப்படையில் போலீசார் பூகீஸ்வரனை நேற்று (ஆக.17) கைது செய்தனர்.
தேனி மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது . இந்நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தேனி உள்ளிட்ட சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கியுள்ளார்.
தேனி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு நடப்பு பருவ சாகுபடிக்குத் தேவையான உரங்களான யூரியா 2,033 மெ.டன்னும் (MFL, Spic & IFFCO), டிஏபி 572 மெ.டன்னும் (Green star, IPL & IFFCO) பொட்டாஷ் 439 மெ.டன் (IPL) மற்றும் கலப்பு உரங்கள் 4,048 மெ.டன்னும் (Fact, GFL, CIL, IFFCO) தனியார் நிறுவனங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேகமலை புலிகள் காப்பக பகுதியில் வன உயிரின வேட்டையை தடுத்தல், வனப்பரப்பை மதிப்பீடு செய்வது, புதிய நோய்கள் பரவுதல் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்காக ‘ட்ரோன்’ பயிற்சி வனத்துறையினருக்கு கடந்த மே மாதம் வழங்கப்பட்டது. பயிற்சி பெற்று 3 மாதங்களை கடந்தும் ட்ரோன் வழங்கப்படவில்லை. குறிப்பாக புலிகள் காப்பக பகுதிகளில் உள்ள அதிகாரிகளுக்கு ‘ட்ரோன்’ வழங்க வேண்டும் என வன ஆர்வலர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதியான வட்டக்கானல், வெள்கெவி ஆகிய பகுதிகளில் கடந்த சிலநாள்களாக தொடர்ந்து மழை பெய்கிறது. இதனால் தேனி கும்பக்கரை அருவிக்கு கிழே உள்ள அற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் பெருமாள்புரத்தை சேர்ந்த 4 பெண்கள் 5 குழந்தைகள் குளிக்க சென்ற இடத்தில் வெள்ளப்பெருக்கில் சிக்கினர். தகவலறிந்த தீயணைப்பினர் ஆற்றின் குறுக்கே கயிறு கட்டி அவர்களை மீட்டனர்.
தேனி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் இந்த ஆண்டில் 17000 சதுர மீட்டர் பரப்பில் மானியத்தில் பசுமை குடில் அமைக்கப்பட உள்ளது. விவசாயிகள் குறைந்தது 500 ச.மீ முதல் 4000 ச.மீ வரை பசுமை குடில் அமைக்க விண்ணப்பிக்கலாம். மானியமாக ச.மீட்டருக்கு குறைந்த பட்சம் ரூ.422 அதிகபட்சம் ரூ.467.5 வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ள விவசாயிகள் அருகில் உள்ள உதவி இயக்குனர்களை தொடர்பு கொள்ளலாம்.
தேனி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் பொது மக்களுக்கு எச்சரிக்கை ஒன்றினை விடுத்துள்ளனர். அதில் சைபர் கிரைம் குற்றவாளிகள் ஆன்லைன் டிரேடிங் செயலிகள் மூலம் முதலீடு செய்யும் பணத்திற்கு இரு மடங்கு பணம் கிடைக்கும் என நூதன முறையில் குறுஞ்செய்தி மூலம் லிங்க் அனுப்புவர். அந்த லிங்கை பொதுமக்கள் தொடுவதால் தங்களது வங்கி கணக்கு திருடப்படும். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று(ஆக.,16) 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தேனி, தென்காசி, நெல்லை, குமரியிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. இதனால் வெளியில் செல்வோர் முன்னெச்சரிக்கையாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தன்று தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை, மாற்று விடுப்பு அளிக்கப்பட்டுள்ளதா என தொழிலாளர் நலத்துறை சார்பில் நேற்று (ஆக.15) தேனி மாவட்டத்தில் உள்ள ஓட்டல்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என 61 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 47 நிறுவனங்களில் விதிமீறல் கண்டறியப்பட்டது. இந்நிறுவனங்கள் மீது தொழில் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
தேனி மாவட்டத்தில் இந்த ஆண்டில் மக்காச்சோள சாகுபடியை அதிகரிக்க சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதற்காக ரூ.12,000 மதிப்பிலான 10 கிலோ விதை, 1 லிட்டர் திரவ உயிர் உரங்கள், 500 மி.லி. நானோ யூரியா, 12.5 கிலோ இயற்கை உரம் ஆகியன 50% மானியத்தில் ரூ.6,000-க்கு வழங்கப்பட உள்ளன. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகங்களை அணுகலாம் என வேளாண்துறை அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.