India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேவதானப்பட்டி அருகே 7.கி.மீ தொலைவில் கொடைக்கானல் மலை அடிவாரத்தில் மஞ்சளாறு அணை அமைந்துள்ளது. மஞ்சளாறு அணையில் 1967 ல் விவசாய பயன்பாட்டிற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. அணை திறந்து 57 ஆண்டுகளில் முதன்முறையாக வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பே கடந்த ஜூன்.20 முதல் நேற்று (செப்.5) வரை தொடர்ந்து 78 நாட்களாக அணையின் நீர்மட்டம் 55 அடியாக உயர்ந்து நிலை நிறுத்தப்பட்டது இதுவே முதன் முறையாகும்.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று தாட்கோ மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் இணைந்து தூய்மை பணியாளர்களுக்கு 90 சதவிகிதம் மானியத்தில் வீடுகள் பெறும் ஆணைகளை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா வழங்கினார். இந்நிகழ்வில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார் மற்றும் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
2020ல் தோழியருடன் தெருவில் விளையாடிய சிறுமியிடம் மிட்டாய் கொடுத்து நடராஜன் வீட்டிற்கு அழைத்து பாலியல் தொந்தரவு செய்தார். சிறுமியை நடராஜன் அழைத்து சென்ற விபரத்தை மற்ற சிறுமிகள் உறவினர்களிடம் தெரிவித்தனர். அவர்கள் நடராஜன் வீட்டிற்கு சென்று சிறுமியை மீட்டனர். சிறுமியின் தாய் கொடுத்த புகாரில் நடராஜனுக்கு போக்சோ பிரிவில் 20 ஆண்டுகள் சிறை, ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து தேனி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
விளையாட்டுத்துறையில் சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று தற்பொது நலிந்த நிலையிலுள்ள தேனி மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.6000 வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியுள்ளவர்கள் www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் செப்.30 மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தேனி அருகே சிந்தலைச்சேரி அருள் பிரகாஷ் (27) என்பர் கார் பரிசு விழுந்ததாக கூறி ரூ.18 லட்சம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தேனி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். பிறகு இது தொடர்பாக ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ரோகித்குமாரை(27) கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் இவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்ததால் தேனி மாவட்ட சிறையில் இருந்து அவரை மதுரை சிறைக்கு இன்று மாற்றம் செய்தனர்.
தமிழக அரசின் மூலம் ஆண்டுதோறும் சிறந்து சேவையாற்றிய ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது. அதன்படி தேனி மாவட்டத்தில் சிறந்த கல்வி பணியாற்றிய ஆசிரியர்கள் வேலுச்சாமி, மகேஸ்வரி, ராமநாதன், முத்தழகு, பூரணசெல்வி, ஜோ.கண்ணன், சரவண ஶ்ரீ, சாந்தி, ரெ.கண்ணன் ஆகிய 9 பேருக்கு நல்லாசிரியர் விருது தமிழக அரசின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் மூலம் ஆண்டுதோறும் சிறந்து சேவையாற்றிய ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது. அதன்படி தேனி மாவட்டத்தில் சிறந்த கல்வி பணியாற்றிய ஆசிரியர்கள் வேலுச்சாமி, மகேஸ்வரி, ராமநாதன், முத்தழகு, பூரணசெல்வி, ஜோ.கண்ணன், சரவண ஶ்ரீ, சாந்தி, ரெ.கண்ணன் ஆகிய 9 பேருக்கு நல்லாசிரியர் விருது தமிழக அரசின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரியகுளம் வட்டம், இலட்சுமிபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் செப்.10 பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் மற்றும் செப்.11 தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு, மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியில் பங்குபெற விருப்பமுள்ள மாணவர்கள் முதன்மை கல்வி அலுவலர் வாயிலாக சுற்று அறிக்கை அனுப்பி அந்தந்த பள்ளியின் வாயிலாக பங்கு பெறலாம்.
ஜி.கல்லுப்பட்டி அருகே கோட்டார்பட்டியைச் சேர்ந்தவர் ரோஹிணி (67). இவருக்கு சொந்தமான தென்னந்தோப்பினை தங்களுக்கு வழங்க வேண்டும் என அவரது மகன் ஆனந்தகுமார் அருவாளால் ரோஹிணியை வெட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதற்கு உடந்தையாக அவரது மனைவி ஐஸ்வர்யா சகோதரி மரகதம் ஆகியோர் இருந்துள்ளனர். இது குறித்து தேவதானப்பட்டி போலீசார் ஆனந்தகுமார் உள்ளிட்ட 5 பேர் மீது நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தேனி மாவட்ட வனத்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட TCU 9206 இலுவை வாகனம் எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் வருகின்ற 19 ம் தேதி காலை
11.00 மணிக்கு தேனி மாவட்ட வன அலுவலக வளாகத்தில் வைத்து பொது ஏலம் விடப்படவுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் சரக்கு மற்றும்
சேவை வரி வாகனத்திற்கு 18% முழுவதையும் அரசுக்கு ரொக்கமாக செலுத்தி வாகனத்தை ஏலத்தில் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட வனத்துறை அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.