Theni

News September 29, 2024

தேனி தம்பதி கொலையில் திருப்பம்

image

தர்மபுரி மாவட்டம் புதிய சிப்காட் சாலை பகுதியில் 24ம் தேதி அடையாளம் தெரியாத இருவர் கொலை செய்ய்ப்பட்டு
அழுகிய நிலையில் சடலங்கள் மீட்கப்பட்டன. அதியமான் கோட்டை இன்ஸ்பெக்டர் லதா தலைமையில் இரு
தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இறந்தவர்கள் இருவரும் கம்பத்தை சேர்ந்த மணிகண்டன் அவரது மனைவி
பிரேமலதா 50 என விசாரணையில் தெரியவந்தது. மணிகண்டனின் டிரைவர் தேவராஜ் பணத்திற்காக இவர்களை
கொன்றுள்ளார்.

News September 28, 2024

தேனியில் கனமழை!

image

தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் இன்று(செப்.,28) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி தேனி, மதுரை, தென்காசி, நெல்லை, குமரி, விருதுநகரிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் மழை நீர் தேங்கவும்
வாய்ப்புள்ளது. வெளியில் செல்வோர் குடையுடன் செல்வது நல்லது. SHARE IT.

News September 28, 2024

80 வாகனங்கள் மீது வழக்கு பதிவு

image

தேனி மாவட்டத்தில் கடந்த ஏழாம் தேதி முதல் 9ஆம் தேதி வரை பெரியகுளம், தேனி, உத்தமபாளையம், சின்னமனூர், ஆண்டிபட்டி பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது விதிமுறைகளை பின்படுத்தாத 80 வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் இதுவரை 12 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 68 வாகனங்கள் கைப்பற்றி உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் தெரிவித்துள்ளார்.

News September 28, 2024

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு வீரர்களுக்கு பரிசு

image

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் தேனி மாவட்டத்தில் 16158 விளையாட்டு வீரர்கள் பதிவு செய்தனர். இதில் 8,598 விளையாட்டு வீரர்கள் 5 பிரிவுகளாக நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றனர். இந்த விளையாட்டுப் போட்டிகளில் தனிநபர் மற்றும் குழு போட்டிகள் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த விளையாட்டு வீரர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ரொக்க பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கினார்.

News September 28, 2024

மகளிர் சுய உதவிக்கு ஊக்கத்தொகை வழங்கிய ஆட்சியர்

image

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ஊட்டச்சத்து உணவு திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான மகளிர் சுய உதவி குழுக்கள் கலந்து கொண்டு பல்வேறு உணவுகளை தயார் செய்து அதை பார்வைக்காக வைத்திருந்தனர். அதை மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா பார்வையிட்டார் இதில் வெற்றி பெற்ற மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத்தொகையை வழங்கினர்.

News September 27, 2024

கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

image

உத்தமபாளையம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி. சொத்து தகராறு காரணமாக அவரை கடந்த 2019 ஆண்டு முத்தீஸ்வரன் என்பவர் வெட்டி கொலை செய்தார். அவரை உத்தமபாளையம் போலீசார் கைது செய்த நிலையில் இந்த வழக்கு தேனி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கின் தீர்ப்பாக இன்று கொலை குற்றவாளி முத்தீஸ்வரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அனுராதா தீர்ப்பளித்தார்.

News September 27, 2024

பனை விதைகளை சேகரித்து ஒப்படைக்கும் முதல் 3 நபர்களுக்கு பரிசு

image

தேனி மாவட்டத்தில் பனை விதை சேகரிப்போம் பரிசு மழை வெல்வோம் என்ற தலைப்பில் போட்டி நடைபெற உள்ளது. பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் இயற்கை தன்னார்வலர்கள் அதிகளவில் பனை விதைகளை சேகரித்து ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் அக்.1 முதல் 15ஆம் தேதிக்குள் ஒப்படைக்கலாம். அதிகப்படியான விதைகள் சேகரிக்கும் முதல் மூன்று நபர்களுக்கு பரிசு வழங்கப்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News September 27, 2024

தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

image

தேனி மாவட்டத்தில் 58வயது அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் ரூ.4000 வாழ்நாள் முழுவதும் வழங்கப்படவுள்ளது. எனவே தகுதியுடைய தமிழறிஞர்கள் www.tamilvalarchithurai.tn.gov.in என்ற வலைதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் அக்.31ம் தேதிக்குள் தபால் மூலம் சமர்ப்பிக்க ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News September 27, 2024

57 அடியாக குறைந்த வைகை அணை

image

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் 1175 கன அடி குறைந்த அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் அணையில் இருந்து பாசனத்திற்காக 1199 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. இதனால் இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 57.15 அடியாக உள்ளது.

News September 27, 2024

தந்தையை வெட்டிய மகன் மீது வழக்கு

image

சங்கராபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் தனது மனைவியுடன் கேரளாவில் தங்கி விவசாயம் செய்து வருகிறார். இவர்களது மகன் சூர்யா மது போதையில் சொத்தில் பங்கு கோரி அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் செப்.25 அன்று கேரளாவில் இருந்து வந்த முருகனிடம் மீண்டும் தகராறு செய்த சூர்யா அரிவாளால் முருகனை வெட்டியதில் அவர் காயமடைந்தார். இது குறித்து சூர்யா மீது வழக்கு (செப்.26) பதிவு செய்து விசாரணை.

error: Content is protected !!