India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விவசாயிகளுக்கு தேசிய அளவிலான தனித்துவ அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது. இதில் விவசாயிகளின் நில விபரங்கள், ஆதார்,பயிர் சாகுபடி, அலைபேசி எண் உள்ளிட்ட விபரங்கள் இருக்கும். இந்த அடையாள எண் பெற்றால் மத்திய, மாநில அரசு திட்டங்களை எளிதில் பெறலாம். இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள் மார்ச் 31க்குள் பொது சேவை மையங்களில் கட்டணமின்றி பதிவு செய்யலாம்.

தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சிக்னல் வழங்கப்பட்டுள்ளது. அரசு கேபிள் டிவி இணைப்பு கோரும் பொது மக்களுக்கு காலதாமதம் ஏற்படுத்தாமல் உடனடியாக இணைப்பு வழங்க உள்ளுர் கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதிக எண்ணிக்கையிலான சேனல்கள் குறைந்த மாத சந்தா தொகையில் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தேனி வனச்சரகம் மூலம் காப்புக்காடுகளில் ஏற்படும் தீ விபத்தை தடுக்கும் விதமாக 2 வகையான தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டுள்ளன. அணைக்கரைப்பட்டி, அருங்குளம் மேற்கு, கிழக்குப்பகுதி, முத்துக்கோம்பை பகுதியில் 3 மீட்டர் அகலத்தில், 33 கீ.மீ தொலைவிலும், அகமலையின் மேற்குப் பகுதியில் உள்ள வரட்டாறு, போடி உலகுருட்டி உள்ளிட்ட பகுதிகளில் 6 மீட்டர் அகலத்தில், 38 கி.மீ., துாரம் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

தேனி: மாவட்டத்தில் 54 தேர்வு மையங்களில் நடந்த பிளஸ் 2 தமிழ்தேர்வில் 13,020 மாணவர்கள் பங்கேற்றனர். 206 பேர் தேர்வு எழுதாமல் ஆப்சென்ட் ஆகினர்.மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வை 141 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 6,271, மாணவிகள் 6,792 பேர் என மொத்தம் 13,063 பேர், தனித்தேர்வர்கள் 163 பேர் என மொத்தம் 13,226 பேர் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் அமைந்துள்ளது மாணிக்கவாசகர் கோவில். பொதுவாக அமர்ந்த நிலையில் இருக்கும் மாணிக்கவாசகர் இந்த கோவிலில் சிவலிங்கத்தை வணங்கியபடி நிற்பது கூடுதல் சிறப்பாக உள்ளது. அறிவார்ந்த குழந்தைகள் பிறக்கவும் , பேச்சில் குறைபாடு உள்ளவர்களும் இந்த கோவிலுக்கு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

தேனி மாவட்ட அணைகளின் (மார்ச்.03) நீர்மட்டம்: வைகை அணை: 61.12 (71) அடி, வரத்து: 234 க.அடி, திறப்பு: 722 க.அடி, பெரியாறு அணை: 115.20 (142) அடி, வரத்து: 97 க.அடி, திறப்பு: 400 க.அடி, மஞ்சளார் அணை: 35.20 (57) அடி, வரத்து: இல்லை, திறப்பு: 45 க.அடி, சோத்துப்பாறை அணை: 73.14 (126.28) அடி, வரத்து: இல்லை, திறப்பு: 3 க.அடி, சண்முகா நதி அணை: 27.50 (52.55) அடி, வரத்து: 10 க.அடி, திறப்பு: இல்லை.

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 2,292 காலிப் பணியிடங்கள் உள்ளன. தேனி மாவட்டத்திற்கு 25 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க இன்றே (மார்ச்.03) கடைசி நாள். இந்த லிங்கை <

தேனி மாவட்டத்தில் இன்று (02.03.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

தேனி: இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதை அடுத்து மீண்டும் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கிறார். இன்று நடைபெற இருக்கும் இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி என்ன பேசப் போகிறார் என்பது ஆர்வமாக உள்ளது

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் டிராக்டர் ஓட்டும் பயிற்சி மதுரையில் வழங்கப்படுகிறது. 22 நாள் நடைபெறும் இப்பயிற்சியில் 25 பேர் கலந்து கொள்ளலாம். இதில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 – 45 வயதிற்குள் இருப்பவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 94436 77046, 99443 44066 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.