Thanjavur

News August 31, 2024

தஞ்சை அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது

image

தஞ்சை செக்கடி பாலம் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக தஞ்சை மேற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வேலாயுதம் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகிக்கும் வகையில் நின்ற 2 பேரை போலீசார் விசாரித்ததில், அரிவாளை காண்பித்து கஞ்சா விற்றது தெரியவந்தது. பின்னர், அஜித், செல்லையா ஆகியோரை கைது செய்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

News August 30, 2024

தஞ்சாவூர் தனியார்துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம்

image

தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில் தஞ்சை சரபோஜி அரசினர் கல்லூரியில் நாளை 31 ஆம் தேதி 80-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள், 2,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்ப வேலைவாய்ப்பு முகாம் நடைப்பெறுகிறது. முகாமில் கலந்து கொள்ள dpiu_tju@yahoo.com என்ற மின்னஞ்சலில் பதிவு செய்து கொள்ளலாம் என இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

News August 30, 2024

அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை: துணை இயக்குனர்

image

தஞ்சை மாவட்டத்தில், சம்பா சாகுபடி செய்யும் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தனியார் விதை விற்பனையாளர்கள் அரசு சான்று பெற்ற விதைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்றும், நெல் விதைகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலை வைத்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.

News August 30, 2024

தஞ்சை மாவட்டத்தில் நாளை மின்தடை

image

தஞ்சாவூர், சேதுபாவாசத்திரம், பேராவூரணி உள்ளிட்ட சில துணை மின்நிலையங்களில் நாளை (ஆக.31) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால், பேராவூரணி, ஆவணம், செறுவாவிடுதி, திருச்சிற்றம்பலம், சேதுபாவசத்திரம், குப்பதேவன், சேதுரோடு, தஞ்சை நகரின் முக்கிய பகுதியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

News August 30, 2024

தஞ்சை பெண் அதிகாரிக்கு 3 ஆண்டுகள் சிறை

image

தஞ்சையில் பாத்திரக்கடை நடத்தி வந்த அந்தோணிசாமி என்பவரிடம் கடந்த 2013-ஆம் ஆண்டு தொழில் உரிமத்தை புதுப்பிக்க தஞ்சை தொழிலாளர் நலத்துறையில் பணிபுரிந்த ஜெயலட்சுமி ரூ.2,500 லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறையில் அந்தோணி புகார் செய்ய ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜெயலட்சுமிக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.5000 அபராதம் விதித்து கும்பகோணம் கோர்ட் நேற்று உத்தரவிட்டது.

News August 30, 2024

பட்டாசு தொழிற்சாலைகளுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் தலைமையில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தும் பட்டாசு தொழிற்சாலைகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News August 29, 2024

தஞ்சை மாவட்டத்தில் நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் நடமாடும் கால்நடை மருத்துவ சிகிச்சை பணிகளுக்கு 7 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஒரு கால்நடை மருத்துவர் மற்றும் உதவியாளர் என மருத்துவ வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம ஊராட்சிகளில் கால்நடை சிகிச்சைப் பணிகள், அவசர சிகிச்சை தேவைகளுக்கு பயன்படுத்தலாம் என கலெக்டர் தெரிவித்தார்.

News August 29, 2024

தஞ்சையில் பிற்படுத்தப்பட்டோர் கடனுதவி திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம்

image

தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் முன்னிலையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பைச் சார்ந்தவர்களுக்கு வழங்கப்படும் கடனுதவி திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. ஆய்வுக் கூட்டத்தில் எம்பிக்கள் எம்எல்ஏக்கள் உடன் கலந்து கொண்டனர்.

News August 29, 2024

தஞ்சை வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு சிறப்பு முகாம்

image

தஞ்சாவூர், புதுக்கோட்டை சாலையில் உள்ள தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில்முனைவு மேலாண்மை நிறுவன விளையாட்டு மைதானத்தில் 31-ஆம் தேதி நடைபெறவுள்ளது. முகாமில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் இயக்கம் மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்து விவசாயிகள் தனியார் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்களின் பொறியாளர்களுடனும் நேரில் விளக்கம் பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News August 29, 2024

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கூட்டம்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு (Disha Meeting) இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், தஞ்சை எம்.பி. முரசொலி மாறன், திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன், தஞ்சை, பாபநாசம், பேராவூரணி, குடந்தை சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கல்யாண சுந்தரம் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!